10/29/2012

ஈழத் திருநாடே எந்தன் தாய் நாடே



ஈழத் திருநாடே என்றன்  தாய் நாடே!
உ(ன்)னைக் காணும் ஆவல் நெஞ்சினிலே
எந்நாளும் இங்கு பொங்குவதேன்!
வானம் பாடி சிறகை இழந்து
வாட்டும் இந்தக் குளிர் நாட்டில்
நாட்டம் இன்றி ஏனோ இங்கே
வெள்ளோட்டம் ஓடுது  எந்நேரமும்!

பனிப் பூக்கள் தலை மேலே தினம் தூவ
இனி காச்சல் சளி நோயால்  உடல் வாட
இது என்ன  சாபம்! -  அடி போடி
உன் மடி மீது நாம் தூங்கும் சுகம் வருமா!

நறு மணம் வீசும் மலர்க்கூட்டம்
உன் எழில் கொஞ்சும் தரைமீது
தினம் தினம் உறவுகள் வலம் வரவே
தீராத சந்தோசம்  அது தீர்ந்து போனதின்று!

மாறாப்பு போட்ட மங்கை இவள்
மனசுக்குள் ஓடும் கங்கை வந்த
வீராப்பு அடங்கிப் போக விழிநீரால்
கோலம் போடுவதேன் இங்கே!
தாய் நாடே சொர்க்கம் சொர்க்கம்
அதைத் தயங்காமல் சொல்வதற்கு
ஏன் இந்த வெக்கம்!

பாய் போதும் நாம் தூங்க
பண்பாடு நிறைந்த எம் நாடே!
குயில் பாடும் பாட்டுச் சத்தம்
அது கேட்டால் போதும் போதும்!
மனசுக்குள் பட்டாம் பூச்சி
பட பட பட என்று பறந்திடவே
செந்தமிழாலே கவி பாடி
எம் உறவோடு நாம் சேரும் காலம் அது
எங்கே ....எங்கே ..எங்கே!

தேன் கூடு  கண்களுக்குளே
தீராத மோகம் ஊட்ட
 நான் பாடும் பாடல் இது
உனக்கங்கே கேக்குறதா?

                                              (   ஈழத் திருநாடே ...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/17/2012

நீங்களும் தெய்வமாகலாம் .....

உடலைக் குறைக்க நடப்போர் நடுவில்
உணவுக்கு ஏங்கும் உயிர்களைப் பார்!
இந்த வறுமைக் கோட்டை அழிக்கவா  உனக்கு
வல்லமை இல்லை சொல்டா  மானிடனே!

ஒருவர் பசியை ஒருவர் தீர்த்தால்
உலகில் வறுமை அழியாதோ!.......
நாம் தெருவில் சிந்தும் செல்வம் திரண்டால்
உயிர்கள் பிழைக்க முடியாதா!

கருணை வேண்டும் மனிதா உனக்கும்
கையில் இருப்பதைக் கொடுப்பதற்கு!
இது அழியும் உலகம் அதனால்தானோ
மனிதம் மரத்துப் போனதிங்கே!

மெழுகைப்போல நல் இதயம் இருந்தால்
ஒளியைத் தேடி அலைவான் ஏன்!
இந்தக் கொடுமை கண்டும் அசையா மனதை
உருகச் செய்ய நல் வழி தேடு!

விழியில் வழியும் கண்ணீரைக்கூட
அருந்தத் துடிக்கும் நிலையைப் பார்!
இங்கு அழியும் இந்த உறவைக் காக்க இனியும்
இத்தனை தாமதம் வேண்டாமே!

பல மொழியில் பேசித்  திரிந்தால் என்ன
மனிதன் என்பவன் ஓர் இனமே! இவன்
அழியும்போது துடிப்பவன்  எவனோ
அவன்போல் தெய்வம் வேறில்லையே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/15/2012

இப்படியும் ஓர் ஆசை!..(தொடர் கதை பாகம் -3)

யேய் ...ஜோதி உங்கட  அக்காவோட கலியாணத்தத்தான்  சும்மா அந்த மாதிரி சிறப்பா நடத்தி முடிச்சிற்றாங்களே...நீ எப்படீ .... கலியாணம் கட்டிகொள்ளப் போற?....சீ போடி .....அட்றா சக்க எண்டானாம் கலியாணம் எண்டதும்  வெக்கத்தப் பாரு !.....ஹா ...ஹா ..ஹா...அது சரீடி உங்க அக்காவும் அத்தானும் எப்படி லண்டனுக்கு போகினம் ?....அது தெரிய இல்லையடி அப்பா ..ஆனா எனக்கு மட்டும் எங்க அக்காவ விட்டுப்  பிரியிறத நினைச்சாத்தான் ரொம்பக் கவலையா இருக்குடி.  அப்போ நான் ஒண்டு செய்யட்டுமாடி ?...!..என்னது ?...உங்கட அப்பாட்ட சொல்லி உனக்கும் லண்டன்லையே மாப்பிளைய பாக்கச் சொல்லட்டா?....என்ன கிண்டலா ?...இல்லடி .எனக்கே உன்னப் பாத்தா நான் ஆம்பிளையா பிறந்திருக்கக் கூடாதா  எண்டு கவலையா இருக்குடி...யூ ராஸ்கோல்!....இருடி வாறன் இண்டைக்கு உனக்கு  ....ஜோதி விடடி...பிளீஸ்டீ ....பிளீஸ்டீ ....விடடி என்ன ...அதோ உங்க அப்பா வாறாருடீ ....ஏமாந்திற்றியா !....ஹா ..ஹா ....ஹா ........ சீ போடி நான் உன்னோட இனிமேல் கதைக்கவே  மாட்டன் .கோவிச்சுக் கொள்ளாதடி செல்லம்.. நீ கதைக்க இல்லையெண்டா நான் இனிமேல் யாரோடையும் பகுடி விட மாட்டன்டி அப்பா ..ஐயையோ அத மட்டும் நிறுத்தீராதடி அப்புறம் எங்கட பள்ளிக்கூடமே இருண்டு போயிரும்டி ஹா ஹா..ஹா....சரி வாடி  காப்பி குடிச்சிற்று போகலாம் .

                      அடடே!...வாம்மா மீரா .எப்ப வந்த ?..இப்பதான் ஆன்ரி.வீட்டில எல்லாரும் எப்புடி இருக்குறாங்கள் ?...ம்..எல்லாரும் நல்லா இருக்குறாங்கள் ஆன்ரி .நீங்க எப்புடி இருக்குறீங்க ?....எனக்கென்னடி அம்மா நான் நல்லாத்தான் இருக்குறன் .ஒரு மாதிரி மூத்த பொண்ணோட கலியாணம் முடிஞ்சுது .இனி ஜோதிக்கும் ஒரு நல்ல இடமாப் பாத்துக் கட்டிக் குடுத்திற்ரா எங்கயோ ஒரு மூலையில சிவனே எண்டு போய்க் குந்தீரலாம் .கேட்டுக்கோடி உங்க அம்மா சொல்லுறத ....பாருங்கம்மா இவள !..வந்த நேரத்தில இருந்தே  ஏதொ சொல்லி வச்சமாதிரி என்னோட கல்யாணத்தப் பற்றியே பேசீற்று இருக்குறாள் அதுக்கில்லடி அவளுக்கும் உனக்கும் இருக்கிற நட்புக்கு இடையில வேற யாராவது வந்திரப் போறாங்களோ  எண்டு பயப்படுகிறாள் போல. யாருக்கு தெரியும் !....இறைவன் யார் யாருக்கு இன்னார் எண்டு எழுதி வச்சிருக்கிறத !.....
எனக்கு தெரியுமே ஆன்ரி .நம்ம ஜோதிக்கு எங்க அண்ணனையேதான் இறைவன் நிச்சயிச்சு இருக்கிறார் .இனி நீங்கதான் ஆன்ரி அத முடிச்சு வைக்கணும் .ஓ!!!....விசயம் அப்புடி போகுதா ?....அச்சச்சச்சச்சோ  அவங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிற உண்மைய நான் உங்களிட்ட  சொல்லவே  மாட்டன் ஆன்ரி ...அதுதான் சொல்லீற்றியேடி அம்மா...!!! ஹா ...ஹா ...ஹா...சொல்லீற்றனா ஆன்ரி ?...!!!! போச்சுடா இப்ப நான் என்னடி  பண்ணுறது சொல்லுடி என் தோழி  .....சீ ....போடீ பாருங்க ஆன்ரி என்னப் போச்சொல்லீற்று அவ வெக்கப் படுகிறத ஹா ஹா ...ஹா ....ஹா .....

என்ன இங்க ஒரே சிரிப்பா இருக்கு ?.....அது ஒண்டும் இல்லங்க எல்லாம் நல்ல விசயம்தான் நீங்களும் நானும் ஆசப்பட்ட மாதிரியே உங்க செல்லப் பொண்ணு ஜோதி ஜோதிக்கு என்ன?...அவளுக்கு ஒண்டும் இல்லங்க .அவ நம்ம ரவி தம்பியக் காதலிக்கிறாளாம் .காதலிக்குறாளா ????....யாரக் கேட்டு இவ காதலிக்குறாளாம் ?....நீங்க யாரக் கேட்டு என்னக் காதலிச்சுக் கலியாணம் செய்தீங்களோ அவங்களக் கேட்டுத் தானுங்க .அப்புடியா விசயம் !...    ஆமாங்க அப்புடி எண்டா சரீடி .இந்தக் கலியாணத்தயும்  ஜாம் ஜாம் எண்டு செய்து முடிச்சிர வேண்டியதுதான் .எங்கடி என்ர செல்லப் பொண்ணு ?...ரொம்பவே தேடாதீங்க அங்கிள் .அப்புடியே அந்தக் கண்ணாடியப் பாருங்க!....  நம்ம நிலா அழகா சிரிக்குறத..... ஆமா இல்ல ஹா ...ஹா ஹா ...ஹா ...வெக்கப் பட்டது போதும் வாம்மா இங்க .அப்பா என்ன ஆசீர்வதியுங்கப்பா ..தீர்க்க சுமங்கலியா இரும்மா போ ..போய் உங்க அம்மா கால்லையும் விழுந்து ஆசீர்வாதம் வேண்டிக்கோ அம்மா நீயும் என்ன ஆசீர்வதியம்மா என் கண்ணு ஆயுசுக்கும் நல்லா இரடியம்மா ......
                                               தொடரும் ......            
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/13/2012

இப்படியும் ஓர் ஆசை !!..(தொடர் கதை பாகம் -2 )

அப்பா பிளீஸ் அப்பா ...நீங்க என்னதான் சொன்னாலும் வெளிநாட்டு மாப்பிளைய என்னால கலியாணம் செய்துகொள்ள முடியாதுப்பா  .ராணி இப்புடி அடம் பிடிச்சா எப்புடியம்மா ?...அப்பா நான் உன்ர நல்லதுக்குத்தான் சொல்லுறன் பேசாம இந்தக் கலியாணத்துக்கு ஒத்துக்கோ .அம்மா பாருங்கம்மா நான் வேணாம் வேணாம் எண்டு சொல்லவும் அப்பா ஒரேபிடியா அந்த மாப்பிளையத்தான் நான் கலியாணம் செய்ய வேணும் எண்டு நிக்குறார் நீயாவது சொல்லம்மா இந்தக் கலியாணம் வேணாம் எண்டு .என்னங்க நீங்க அவதான் வேணாம் எண்டு சொல்லுறா இல்ல .பின்ன எதுக்குங்க நீங்க அவள இந்தப் பாடு படுத்துறீங்க ?...கெளரி நீ சும்மா இரு .அவனமாதிரி மாப்பிள இவளுக்கு வேற எங்கடி கிடைப்பான் ?..அம்மாவும் மக்களுமா சேர்ந்து வலிய வாற சீதேவிய தட்டிக் கழிக்க பிளான் பண்ணாதீங்க சொல்லிப்போட்டன் .அது இல்லப்பா தங்கச்சியையும் ,உங்களையும் ,அம்மாவையும் இங்க விட்டிற்று நான் மட்டும் கண் காணாத தேசத்தில போய் என்ன சுகத்தக் காணப் போறன் ?...இதுக்குத்தான் நீங்க என்ன இவ்வளவு தூரம் கஸ்ரப்பட்டு வளத்தீங்களா ?....நான் ஏன்னப்பா உங்களையெல்லாம் விட்டுப் பிரிஞ்சு வாழ வேணும்?....எவ்வளவுதான் பணம் காசு இருந்தாலும் செத்துப் போனவங்கள உங்களால திருப்பிக் கொண்டு வர முடியுமா ?....இந்தப் பிரிவும் எனக்கு அப்புடித்தானப்பா புரியுது!...அளதடா செல்லாம் இதெல்லாம் பாத்தா ஒரு நல்ல வாழ்க்கைத் துணய தேட முடியுமா!....கண்ணத் துடைச்சுக்கொண்டு வெளிக்கிடு மாப்பிள வீடுக்காரர் வர்ற நேரம் ஆச்சு .கெளரி இந்தாடி நம்ம பொண்ண மகாலட்சுமி மாதிரி வெளிக்கிடுத்திக் கொண்டு வா .போம்மா போ ....
சரி அப்பா . 
                            அப்பா ...அப்பா ...மாப்பிள வீட்டுக்காரர்   வந்தாச்சு .சரி போம்மா ஜோதி நீ போ ..போ... போய்ச் சீக்கிரமா  அம்மாட்ட சொல்லு மாப்பிளை வீட்டுக்காரர் வந்தாச்செண்டு .அடடே வாங்க வாங்க உள்ள வாங்க இருக்கட்டும் இருக்கட்டும்.... எல்லாரும்  உக்காருங்க .நாங்க உக்கார்றது இருக்கட்டும்  முதல்ல பொண்ணக் கூப்புடுங்க !..மாமனாரே ஏன் அவசரப் படுகுறீங்க பொண்ணு வரும் .அதுக்கு முதல்ல பேச வேண்டிய சீர்வரிசையைப் பற்றி பேசுவம் .அவ்வளவுதானே பேசினாப் போச்சு .அது சரி இந்தப் பலகாரம் கிலகாரம் இதெல்லாம் தர மாட்டீங்களா ?....உங்களுக்கில்லாததா ?...:) பெரியப்பா பெரியப்பா ..உங்களுக்கு சுகர் இருக்குது!!!...ஏய் குட்டிச் சாத்தான் இத சத்தம் போட்டுச்  சொல்லாதடி காப்பியிலகூட சுகர் இல்லாம தந்திரப் போறாங்கள் ஹா ..ஹா ...ஹா சிரிக்காதடி செல்லம்.. அப்புறம் உன்ர கண்ணு முழிய தோண்டீருவன் .சீ போ நான் உன்னோட டூ .....

                   ஹாய் ..பொண்ணு வந்தாச்சு ...பெரியப்பா பொண்ணு வந்தாச்சு வாம்மா வந்து எல்லாருக்கும் காப்பியக் குடு .பொண்ணப் பாத்துக்கோங்க சம்மந்தி நாளைக்கு உங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறவ .ஸ் ...மருமகளா இல்ல; சம்மந்தி மகளா ....பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கிறா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு !..கேட்டுக்கோம்மா உங்க மாமியாரே சொல்லியாச்சு இனியென்ன தட்ட மாத்திக்கொள்ள வேண்டியதுதானே ?...சம்மந்தி மாப்பிளைய ஒரு வாத்த கேக்க வேணாமா ?...மாப்பிளைய என்ன கேக்குறது கட்டடா  தாலிய எண்டா கட்டீற்றுப் போறான் ஏன்டா டேய் ....மாப்பிள வெக்கப் படுகிறத பாத்தாலே தெரிய இல்லயா!..கலியாண தேதிய கையோட குறிக்கச் சொல்லுற மாதிரி இல்ல ஹா ...ஹா ...ஹா ....எல்லாரும் சிரிச்சது போதும் நல்ல நேரம் முடியுறதுக்கு முன்னால வாப்பா தட்ட மாத்திக்கோ அதெப்புடி சீர் வரிசையப் பத்தி ஒண்டுமே பேச இல்லையே ?...யாராவது இங்க சீர்வரிசையைப் பற்றி பேசினீங்க  துலைச்சுக் கட்டிப் போடுவன் ஆமா!....இந்த மாதிரி பொண்ணு எங்க வீட்டுக்கு காலடி எடுத்து வைக்குறதுக்கு நாங்க தானையா சீர்வரிசை குடுக்க வேணும்.. மாணிக்கம் தட்ட வாங்கிக்கோ உன்னோட பொண்ணு எங்க வீட்டுக்கு உடுத்த சேலையோட வந்தா  அது போதும் !..ரொம்ப சந்தோசம் சம்மந்தி !!!..போம்மா போய் பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வேண்டிக்கோ .நல்லா இரும்மா ..நல்லா இரு!!!!...

அப்புறம் என்ன கலியாண தேதியையும் கையோட நிட்சயம் பண்ணிட வேண்டியதுதானே ?...! ஐயரே சீக்கிரமா ஒரு நல்ல நாளாப் பாத்துச் சொல்லுங்க .சரி சரி பாத்துடுறன் ம்ம்ம்ம் ...வாற ஆவணி மாசம் பதினாறாம் திகதி நாள் நல்ல நாளாய் இருக்கு அந்த நாள்ளயே காலியாண திகதிய நிட்சயம் பண்ணிரலாம் .எல்லாரும் நல்லாக் கேட்டுக்கோங்க  இதில எல்லாருக்கும் சம்மதம்தானே !....என்ன சம்மந்தி மாப்பிள வீட்டுக்காரர் எங்களுக்கு இதில பூரண சம்மதம் .உங்களுக்கும் சம்மதம்தானே ?..நீங்களே சொல்லீற்ரீங்க இதில நான் என்ன சொல்லப் போறன் !..எங்களுக்கும் இதில பூரண சம்மதம்தான் சம்மந்தி .அப்புறம் என்ன அடுத்த வாரமே கலியாணத்துக்கு தேவையான எல்லா அலுவலையும் செய்திட வேண்டியதுதான்  .அப்போ  எல்லாருக்கும் வணக்கம் .நாங்க போயிற்று வரப்போறம் .போயிற்று வாறம் சம்மந்தி ...சம்மந்தி அம்மா போயிற்று வாறம் ரொம்ப சந்தோசம்!!!!..கடவுள் கிருபையால எல்லாம் நல்லபடியா நடக்கட்டுக்கும் ......
                                                            தொடரும் ......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

பகவத் கீதையே வாழ்வுக்குகந்த பாதை.



பாற் கடலில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன் அழகைக் கண்டு
பார் புகழும் தென்றல் காற்றே
பாடாயோ கவிதை ஒன்று !.....

நீல மலர் மாலை கோர்த்து என்
நெஞ்சுக்குள்ளே வைத்தேன் என்றும்
ஏழு மலை தாண்டி வந்தும்  இதை
அந்த இறைவனுக்கே சூடி விடு !....

கால நேரம் அவன் கையில்
கணம் பொழுதும் சுத்துகையில்
எம்மை ஆதரிக்கும் பெருமானுக்கு
இந்த அர்ச்சனைகள் மிகவும் நன்று !..

அவதாரம் பத்தெடுத்து உலகில்
எமை ஆளப் பிறந்த இறைவனைத்தான்
மனதாரப் பாடி இங்கு வாயார வாழ்துரைத்தால்
கனியாதோ எந்நாளும் கனிவான பொன்னாளாய்!...

துதி பாடு கண்ணனை எண்ணித்
துயில்கின்ற வேளையிலும் உனக்கு
இனிதான கனவு மெய்ப்படவே
எழுந்தருள்வான் எம் பெருமான் அங்கும்!.....

அரிதாரம் பூசாத அழகு மேனியான்
ஒளிக் கீற்று வீசத்தான் கண் விழித்து
இறைவா வா என் முன்னே என்று நீயும்
எழுந்தாடும் வண்ணம் இன்பம் தந்து

கலையாத சிந்தனை ஊற்றுக்குள்ளே
செங் கதிராக எந்நாளும் அமர்ந்திடுவான்
இவன் பாதம் தொழுதேற்றும் வரம் பெற்றால் பின்
அது போதும் உனக்கிங்கு வேறு என்ன வேண்டும்!....


நிலை அல்லவே உலகில் என்றும் நீ காண்பவை
தன் நிகரற்ற இறைவன் பாதம் தொழுமின்
உனைத் தேடி வரும் என்றும் வாழ்வுக்குகந்தவை
இதை உணராத மனிதர்க்கே வாழ்க்கை என்பது பெரும் சுமை!!!!........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/11/2012

இப்படியும் ஓர் ஆசை !!!!....(தொடர் கதை)

அடடடடா....என்ன அழகு !....என்ன அழகு !.....சுப்புரமணி நீ வாழ்க்கையில செய்த ஒரே ஒரு நல்ல காரியம் இதுதானய்யா ....டேய் சும்மா இருடா எனக்கு முன்னாலையே அப்பாவப் போய் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு போடா டேய் .அப்போ உனக்கு பின்னால நிண்டு கூப்பிடலாமா மீனாட்சி ?....ஹா... ஹா... ஹா ....என்னங்க நீங்க அவனோட சேந்து சிரிக்குறீங்க ?.........வேற என்னத்த எடி செய்யலாம் சொல்லு ?....எங்களுக்கெண்டு இருக்குறது இவன் ஒரே ஒரு பிள்ளதான். அவன் சந்தோசம்தானேடி எங்களுக்கு பெரிசு .அது இல்லங்க .....என்ன அது இல்லங்க ?..பாக்குறவங்க என்ன நினைப்பாங்க எண்டு சொல்ல வாற அப்புடித்தானே ?...மரியாத மனசில இருந்தா போதும் .ஏன்டா  ரகு உனக்கு இந்தப் பெண்ண புடிச்சிருக்கா ?...     அப்பா நீங்க பாத்த பொண்ணு எப்புடி அப்பா பிடிக்காமல் போகும் ?....சரீடா  வாற தை மாசத்திலயே ஒரு நல்ல நாளாய்  பாத்திர வேண்டியதுதான் .சீ போங்கப்பா எனக்கு வெக்கமா இருக்கு ...மீனாட்சி பாரு பாரு உன்ர மகன் வெக்கப்படுறத ......ஆமா!!!.. இல்ல ......ஹா ....ஹா ....ஹா....வேணாம் ..பிறகு அழுதிருவன் .யேய் அழுதிருவானாமடி !...சரி விடுங்க புளைச்சு போகட்டுக்கும் .என்ர அம்மா எண்டா அம்மாதான் .ம்ம்ம்ம் ...இந்தப் பசங்களே இப்புடித்தான் சமயம் பாத்துக் கால வாரீருவாங்கள் .டேய் கண்ணா நீ கவலப் படதயடா உங்க அப்பா அவரையும் சேத்துத்தான் சொன்னாரு.ஹா ...ஹா ...ஹா ..சபாஸ் சரியான போட்டி ....

      சுப்புரமணி ....டேய் டேய் உங்க தாத்தா குரல் கேக்குது ஸ்ஸ்ஸ்..... சத்தம் போடாதடா  .ஏனம்மா அவர் எங்கட தாத்தாதானே?.. எதுக்கம்மா இப்புடி பயப்புடுற ?..டேய் அவர் என்ர மாமனாரடா .மாமனார் எண்டா பயப்புடணுமா?..அது இல்லடா நீ சின்ன வயதிலயே வெளிநாட்டில போய் இருந்திற்ற அதனால உனக்கு இது ஒண்டுமே புரியாது .அப்புறமா சொல்லுறண்டா விடுடா கைய.. மீனாட்சி ......இதோ வந்திற்ரன் மாமா ......மாமா என்னங்க மாமா சாப்பிடுறீங்க?...எனக்கு கொஞ்சம் தண்ணி தா பிள்ள .சரி மாமா ...அடடே ரகு வாய்யா ....எப்புடியப்பா இருக்கிற ?...ஆளே பெரியாளா வளந்திற்ற!!......நான் நல்லா இருக்குறன் தாத்தா .நீங்க எப்புடி இருக்குறீங்க தாத்தா ?...எனக்கென்னப்பா போற கட்ட ஏதொ இருக்குறன் .அது சரி.. இந்தக்  காதில தோடு ,கழுத்தில அரக்கிலோவில ஒரு  சங்கிலி, கையில நட்டுவ மேளம் அடிக்கிற ஆக்கள்மாதிரி நகை அதுகள் ஒண்டும் நீ போட மாட்டியா ?...அட போங்க தாத்தா ...வெளிநாட்டில இருக்கிறதால அதெல்லாம் போட வேணும் எண்டு அவசியம் இல்ல .நான் உங்கட பேரன் தாத்தா .ம்ம்ம் இப்ப தாண்ட நீ என்ர  பேரன் .இந்தாடா  தாத்தா உனக்காகக் கொண்டந்தது .என்ன தாத்தா இது ?...பிரிச்சுத்தான் பாரன் ...ஆஹா ...எள்ளுருண்டை !!!..தாத்தா நீ அத இன்னுமா மறக்க இல்ல ?..அத எப்புடியடா மறப்பன்?...  எள்ளுருண்டை  தந்தால்தான் என்னட்ட தேவாரம் படிக்க வருவன் எண்டு அடம் பிடிச்ச ஆள்த்தானே நீ ...போங்க தாத்தா எனக்கு இப்ப ஒரே கவலையா இருக்கு .இத்தின வருசமா நான் உங்களோட வாழக் குடுத்து வைக்க இல்லையே தாத்தா ....டேய் என்னடா இது சின்னக் குழந்தை மாதிரி அழுகுற?....!! அது ஒண்டும் இல்லத் தாத்தா ....புரியுது!....நீ என்னடா செய்வ பாவம் நம்மளோட தலை எழுத்து  இப்புடியாப் போச்சு ...கண்ணத் துடைச்சுக்கோ .ரகு ...அம்மா கூப்புடுறா போய் என்னெண்டு கேள் .
                                      ஈஸ்வரா .....இந்தக் காலம் எப்பதான் மாறுமோ !!...என்னப்பா உங்கட பேரன் என்னவாம்?...சுப்புரமணி நீ குடுத்து வச்சவன்ரா.அருமையான பிள்ளைய கடவுள் உனக்கு மகனா தந்திருக்கிறான் .கெதியில அவனுக்கொரு நல்ல பெண்ணாப் பாத்து கலியாணத்தையும் செய்து வச்சிரு .ஆமாப்பா அது விசயமா பேசத்தான் அவன இங்க வரச் சொன்னன் .நடக்கட்டும் நடக்கட்டும் நல்ல விசயத்த தள்ளிப் போடாத .அது சரி பொண்ணு ஆரு ?....அது வேற யாரும் இல்லயப்பா உங்கட பாலிய நண்பர் சொக்கலிங்கம் பிள்ளையின்ர பேத்தி ராணிதான் .அட அந்த இளவரசியா ?...! ஆமாப்பா ..அருமையான சோடிப் பொருத்தம் .அந்தப் பெண்ணுக்கும் இதில சம்மதம்தானே ?.......
                                                 
                                                                                  தொடரும் .....
                                         
         (  இக் கதையில் வரும் கதா பாத்திரங்களும் கதையும் கற்பனையே .)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/10/2012

அப்பு வளர்த்த நாய்!... (இறுதித் தொடர் )





மஞ்சள் வெய்யில் மனதை மயக்க மகிழ்வாய் மலர்ந்தது இன்னொரு பொழுது வண்ண மலர்கள் கண்ணைச் சிமிட்ட வட்டமிடும் வண்டினங்கள் ஒரு புறம் பசும் புல்லின் மேலே பனித்துளி படர்ந்து பொட்டு வைத்த காட்சி மறுபுறம் எல்லை இல்லா இந்த இயற்க்கை அழகை இரசித்தபடியே இறைவனின் சந்நிதி நாடி இணைந்து சென்றனர் வள்ளியமையும் அவளது கணவர் (கிராம சேவகர் மக்கள் தொண்டன் ,இறை பக்தன் ,எங்கள்  தாத்தா என்று மக்கள் மனதிலும் இடம்பிடித்த) நாகலிங்க அப்புவும் .கோவில் வாசலை நெருங்கியபோதே அப்புவின் விழிகளில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுக்க .நல்லூர் கந்தனே தன் எதிரில் வந்து காட்சி தந்ததுபோல் பக்திப் பரவசத்துடன் வழக்கம்போல அவரது தேனிலும் இனிய குரலோசையினால் கந்தன் துதி பாடியபடியே கோவிலினுள் நுழைந்தார் .மக்களும் அவரது வருகையைக் கண்டு மனம் மகிழ்ந்து வழி விடவே அந்த நல்லூர் கந்தனை தரிசித்து விட்டு மண்டபத்தில் சற்று அமர்ந்து தன் தியானத்தை முடித்துவிட்டு கண் விழித்தபோது அவரைச் சுற்றி இளைஞர்கள் அணி ஒன்று அணி திரண்டு நிற்பதைக் கண்டார் கண்டதும்

என்ன விசயம் பிள்ளையள்?.... நான் உங்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேணுமோ? என்று கேட்டார் .அதற்கு அங்கு நின்ற இளைஞன் ஒருவன் இல்லைத்  தாத்தா நீங்க இவ்வளவு காலமும் இந்த கிராமத்து மக்களுக்காக ஆற்றிய தொண்டினைப் பாராட்டி உங்களைப் போன்றவர்ளுக்காக ஒரு விழா எடுக்கப் போகிறோம் அதில் நீங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றான் .விழாவா !...எங்கள் சேவையைப் பாராட்டி எங்களுக்காக ஒரு விழா ஏற்பாடு செய்துள்ளீர்களா ?...இதுவரை காலமும்  அப்படி ஒரு விழாவை யாரும் செய்ததை நான் கேள்விப்படவே இல்லையே  !..உங்களது இந்த நல்லெண்ணத்தைக் கேட்டதும் எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரிய  இ ல்லையடா  பிள்ளையள் !!!........அது சரி விழாவ எப்ப தம்பி வச்சிருக்கிறியள்   ?...வாற தை மாதம் பதினைந்தாம் திகதி தாத்தா .நீங்க பத்து மணிக்கு இந்த இடத்துக்கே வந்திருங்க நாங்க வந்து உங்களைக் கூட்டிக்கொண்டு போகிறோம் .சரி பிள்ளையள் உங்க விருப்பம்போலவே நடக்கட்டும் .

என்னங்க யாரிந்தப் பிள்ளையள் ?...இளைஞர் அணியாம் பிள்ள என்னப் போல சமூக சேவை செய்த முதியோர்களைக் கௌரவிச்சு ஏதோ விழா எடுக்கக் கூப்பிட்டாங்கள் சரி நானும் வாறன் எண்டு சொல்லி அனுப்பீற்ரன் ஏன் பிள்ள இதைப்பற்றி நீ என்ன நினைக்கிற ?...நல்ல விசயம் தானுங்க .இந்த நிகழ்சியை பார்க்க வாற சின்னஞ்ச் சிறுசுக மனதிலையும்  நாளைக்கு நாம வளர்ந்தும் இப்புடி நாலு பேர் பாராட்டுற மாதிரி  நாலு நல்லத செய்ய வேணும் எண்டு ஒரு எண்ணம் இந்த வயசிலயே வரும் இல்லையா சொல்லுங்க ?..சரியாச் சொன்ன நான் என்னத்த நினைச்சனோ அதையேதான் நீயும் நினச்சிருக்குற !...இல்லையா பின்ன!.. .இத்தன வருசமா உங்களோட குடித்தனம் பண்ணின எனக்கு எப்புடி இதுமட்டும் புரியாமல் போகும் .அது சரி உன்ன நான் பெண் பார்க்க வந்த உடனுமே தீர்மானிச்சு போட்டனே நீதான் என்ர பொஞ்சாதி எண்டு .வள்ளியம்ம உனக்கொண்டு தெரியுமா!.. ஒரு ஆணும் பெண்ணும் கலியாணம் செய்து கொள்ளுறது வேற ஒண்டுக்கும் இல்லடி. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு கொண்டு சந்தோசமாய் வாழுறதுக்குத் தான். அந்த வகையில நான் புண்ணியம் செய்திருக்க வேணுமடி உன்ன என் பொண்டாட்டியா அடைஞ்சதுக்கு .நான் மட்டும் என்னவாம் உங்களை அடைய புண்ணியம் செய்ய இல்லையோ சாமி ?....அடி கழுத நக்கலா பண்ணுற ஹா ...ஹா ...ஹா.....போதும் போதும் சிரிச்சது .நடவுங்க வீட்டுக்கு போகலாம் ......என்னங்க விளையாடினது போதும் எழும்புங்க வீட்ட போகலாம் ......என்னங்க!... என்னங்க!!!!!!:.... என்னங்க ஆச்சு உங்களுக்கு ????????............!!!!! என்னங்க !!!!!........
                                                         

  அம்மா !.....ஐயா !.....எழுந்திருங்க !!!!!..........பூசாரி ஐயா ......இங்க ஓடி வாங்கையா !!!..........இங்க பாருங்கையா !!!!....இந்த அம்மாவுக்கும்  ஐயாவுக்கும் என்னமோ நடந்திற்று பாருங்கையா !!!!.......அழாதப்பா அவங்களுக்கு ஒண்டுமே ஆகயில்ல .எந்தப் பெருமானுக்கு இந்த அம்மாவும் ஐயாவும் அவங்கட காலம் பூராவும் சேவை செய்ய வேணும் எண்டு நினைச்சாங்களோ அந்தப் பெருமானுடைய சந்நிதானத்திலையே இந்தப் புண்ணிய யீவன்கழுக்கு அவன் அடைக்கலம் கொடுத்திற்றான் நீ அழாதடா குழந்த!!...என்று சொல்லிக்கொண்டே இதுவரை  காலமும்  கையில் கொடுத்த தீர்த்தத்தை அவர்கள் உடல் முழுவதும் நனையும்படியாக கண்ணில் இருந்து வாத்து ஊத்தியபடியே ஊரைக் கூட்டி இருவரது உடலையும் தகனம் செய்து வைத்தார் பூசாரி. தன் எஜமான் ஐயாவும் எஜமானி அம்மாவும் இறந்து போன துக்கத்தைத்  தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த வாயில்லாத்த  யீவன் அந்தக் கோவிலைச் சுற்றி சுற்றி அங்கும் இங்குமாக ஓடிய படியே  அது விட்ட கண்ணீர், அது பட்ட துன்பம் பெத்த பிள்ளைகள்கூட இவ்வளவு தூரம் துன்பப் பட மாட்டார்கள் என்பது போல்  உணர்ந்த மக்கள் இது அப்பு வளர்த்த நாய், அப்பு வளர்த்த நாய் என்று கோவிலுக்கு வரும்போதெல்லாம் அந்த நாய் மீது தங்கள் அன்பையும் தனிப்பட்ட கவனத்தையும் எடுத்துக்கொண்டனர். அந்த நாயும் அவர்கள் இறந்த அந்த இடத்திலேயே இன்னும் அவர்களின்  நினைவுகள் சுமந்தபடி தன் வாழ்நாளைக் கழித்து வருகின்றது !!!!.......
                                     
               இந்தக் கதையில் வந்த பெயர்கள் 
சம்பவங்கள் யாவுமே வெறும் கற்பனைகள்தான் 

                                                                             நன்றி வணக்கம் உறவுகளே .

                                                 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/09/2012

அப்பு வளர்த்த நாய் (தொடர் கதை பாகம் -2 )



பாட்டி பாட்டி அந்தக் கம்பளம் வித்தவர் எங்க வீட்டுக்கு  வந்து இருக்குறார் அம்மா உங்கள அவசரமா கையோட கூட்டிக்கொண்டு வரச் சொன்னாங்க வாங்க பாட்டி போகலாம்.இருடி மீனாக் குட்டி தாத்தா சந்தைக்கு போக முன்னால எங்க வீமனுக்கு இந்தக் கறிய ஆக்கி வைக்கச் சொல்லீற்று போனார் .இதோ அத நான் இறக்கி வச்சிற்று வாறன்.நீ கொஞ்சம் இடியப்பம் தாறன் சாப்பிடுறீயா ?....சரி பாட்டி நான் வேணாம் எண்டா நீ என்ன விடவா போற .தா தா நான் சாப்பிடுறன் .பாத்துக்கோடி அம்மா மெதுவா சாப்பிடு!.. புரை ஏறிடப் போகுது .சரி பாட்டி. பாட்டி நீ சாப்பிட்டியா ?...உங்க தாத்தா சாப்பிடாமல்  நான் எப்படி சாப்பிட்டு இருக்குறன் ?..   நான் அவர் வந்தா பிறகு சாப்பிடுறன் நீ சாப்பிட்டுக்கோ .பாட்டி தாத்தா வாற சத்தம் கேக்குது... நல்ல வேள நான் சாப்பிட்டிற்று வீட்டுக்கு போறன் நீ சாப்பாட்டு அலுவல முடிச்சிற்றே வீட்ட வா .
              
             வள்ளியம்மா....வள்ளியம்மா ....  இதோ வந்திற்றேங்க!..என்னங்க இதெல்லாம் ?...உங்களுக்குத்தான் உடம்புக்கு முடியாமல் இருக்குறீங்களே அதுக்குள்ள இவ்வளவு பாரத்த சுமக்கணுமா ?....அது ஒண்டும் இல்லடி உனக்குத்தான் பாரதியார் கவிதைகள் எண்றால் நிறையப் பிடிக்குமே அதனாலதான் இதையெல்லாம் உனக்காக வாங்கிக் கொண்டு வந்தன் .அப்ப உங்களுக்கு ஒண்டுமே வாங்க இல்லையா ?...எனக்கு என்னடி வேணும்?.. நீதான் எனக்கு எந்தக் குறையும் இல்லாமல் பாத்துக் கொள்ளுறியே அது போதாதா ?...அது சரி எங்க எங்கட  வீமன் ஐயா ?...வெளியில உலாத்தப் போயிற்றாறோ?....! இல்லங்க இண்டைக்கும் வழக்கம்  போல தான் அவர் உண்ணா விரதம் .

       அட வடுவா ராஸ்கோல் நான் ஒண்டு சொன்ன உடன கவலை   வந்திரும் அவருக்கு .நீ எத்தின தடவ பேசி இருப்ப?.. !..அதுக்கெல்லாம் வருத்தப் பட  மாட்டார். ஆனா நான் ஒண்டு சொன்னாப் போச்சு .மூஞ்சியத் தூக்கி வச்சுக்கொண்டு இருப்பார். வாட இங்க. கிட்ட வாடா!...அட இன்னும் கொஞ்சம் கிட்ட வாடா!....வெளியில போய்த் திரியிற போது உனக்கு யாராவது கல்லால அடிசுக் காயம் வந்திரக் கூடாது எண்டு தானே உன்னத் திட்டினன் .அதுக்குப் போய் இவ்வளவு கவலப் படுகிறியே!..இவ்வளவு பாசம் வச்சிருக்குற நீ நான் செத்தா என்னடா செய்வ?.....ம்ம் ...என்னங்க நீங்க திரும்பத் திரும்ப ஒரே சாவப் பத்தி பேசீற்றே  இருக்குறீங்க ?..உங்களுக்கு என்ன ஆச்சு ???....எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்க இல்லைங்க .
                                                       
                                          வள்ளியம்மா அது ஒண்டும் இல்லடி. வயசு ஆக ஆக எல்லா மனுசருக்கும் இந்த நினைப்பு தன்னால வாரம் வந்திரும் போல அதுக்கு இல்லங்க!... நாம ஒண்டையே திரும்பத் திரும்ப சொன்னா அதுவே நடக்குறதுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கும் எண்டு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க?...ஒ ....நீ அத நினைச்சுத்தான் பயப்படுறியா ?..ஆமாங்க எதுக்கும் இந்த வாரம் எங்க குல தெய்வத்துக்கு ஒரு அருச்சினை செய்திற்று வருவம் நீங்களும் வாங்க .இன்னும் உனக்கு இந்தக் கடவுள் மேல இருக்குற பக்தி கொஞ்சம் கூட குறையவே இல்லப் பாத்தியா ?....அது எப்புடியுங்க குறையும் ?...காலம் காலமா எங்கட  கஸ்ரத்தப் போக்குற கடவுள நம்பித்தானே எங்க காலமும் நல்ல முறையில ஓடிற்று இருக்குது  ம்ம்ம் ...ஆனா இப்பெல்லாம் சனங்கள் அப்புடி இல்லப் பாத்தியாடி ?..! ஆமாங்க நீங்க சொன்னதுதான் சரி .ஒரு காலத்தில கோயில் குளம் எண்டு தவம் கிடந்து ,நினச்சதெல்லாம் நடந்ததால காணிக்கை காணிக்கையா அள்ளி அள்ளிக் கொடுத்த சனங்கள் இப்பெல்லாம் வருவாயும் வசதி வாய்ப்புகளும் ஏன் மூளையும் கொஞ்சம் அளவுக்கு அதிகமானதால பழசை எல்லாம் மறந்து அனாவசியமா தெய்வத்தக்  குத்தம் சொல்லுறதையே ஒரு புழைப்பா நினைச்சு வாழ்ந்திற்று இருக்குதுகள். எனக்கென்னமோ இதெல்லாம் அழிவு காலத்துக்கு எண்டுதானுங்க  படுகுது!...

                     அது சரீடி..... காலம் காலமா அழிவுகள் வந்தாலும் கடவுள் நம்பிக்கையை யாரும் கைவிடாததாலதானேடி   இத்தின தலங்களும் வரலாற்றுக் கதைகளும் மனுஷன் நினைசுக் கூட பார்க்க முடியாத அளவுக்கு விசித்திரமா உலகமெல்லாம் வியாபித்துக் கிடக்குது  .இதனால ஆருக்கு என்ன நட்டம் வந்திச்சு சொல்லு ?...! .எல்லாரும் ஏதோ ஒரு வழியில ஒரு சின்ன நன்மையைக் கூடவா அனுபவிக்கயில்ல?..அதுக்கு விட்டிற்று சனங்கள் கடவுள சில நாட்டில இருக்குற கொலைகார தலைவர்களை பாக்குரமாதிரி எல்லோடி  பாக்குதுகள் !...உண்ம தானுங்க அதையும் விட மோசமாத்தானுங்க இப்பெல்லாம் பாக்குதுகள்.சரி விடடி .  இப்ப ஒரு உதாராணத்துக்கு எனக்கு ஒரு ஆற்ற முடியாத கோவம் வந்தா நான் என்ன சொல்லுவன்?....  அவன் செயலுக்கு கடவுளாப் பாத்து ஒரு நல்ல தண்டணை கொடுப்பார். அப்ப அவனுக்கு புரியும். அவன் செய்த தவறு என்ன  எண்டு. வந்த கோவத்தை எல்லாம் இப்புடி நாங்க  தணிச்சதால தானே   எங்களால  ஒரு உயிருக்கும் எந்தத் தீங்கும்  நடக்காமல் போகுது .அந்த வழியில என்டாலும் இந்த மூட நம்பிக்கை நன்மையைத்  தானேடி செய்யுது ?..இதச் சொன்னாக் கூட  அந்தக் காலத்தில இருந்தவைக்கு ஒண்டும் தெரியாது எண்டுதான் சொல்லி எங்கட வாயப் பொத்த வைக்குதுகள் .இதுக்கு மேல என்னத்தத்தான் பேச முடியும்!..

இப்பெல்லாம் உண்மைக்கு மட்டும்தான் காலம் சரி இல்லடி .அதனாலதான் நல்லவங்கள் நாயை விடவும் கேவலமா கஸ்ரப் பட வேண்டி இருக்கு .சரி சரி இந்தா  மல்லிகைப் பூ வாங்கியந்து வச்சிருக்கிறன் நீ போய் மாலையைக் கட்டு முடிஞ்சா நாளைக்கும் உன்னோட நானும் கோயிலுக்கு வாறன் .இந்த நாரிப் பிடிப்பு வந்ததில இருந்து மனுசனுக்கு விடிஞ்சதும் எழும்பிக் குளிக்கக்  கஸ்ரமா இருக்குடி . இல்லை எண்டா உன்னோட நானும் ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு வருவன் .இத விட சந்தோசம் வேற என்னடி இருக்கு எங்களுக்கு .சரி விடுங்க உங்க நல்ல மனச  அந்த கடவுளுக்கும் தெரியும் .கவலப் படாதீங்க .இப்ப சாப்பிட வாங்க .வீமா நீயும் வாடா..... ஐயாவோட சேர்ந்து சாப்பிடலாம் இண்டைக்கு உனக்கு பிடிச்ச கறி... உங்க ஐயாதான் வாங்கி வந்தாரு சந்தோசத்தப் பாரு !...சிரித்தபடியே வள்ளியம்மை  சாப்பாடு பரிமாறிக் கொண்டாள் .
                                   தொடரும் ........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/08/2012

ஏக்கம் ....


ஆழிப் பேரலையே நீ 
அடங்கிப் போனதென்ன!
வாழிய நீ வாழிய என்று எம்மை 
வாழ்த்த இங்கு யார் வருவார்!

ஏழைக் குமரிகளோ நாம்
இருக்கும் இடம் முள் வேலி!
காலில் முள்ளுத் தைத்தால் 
கண்களிலே கண்ணீர் வரும்!

எம் தோழில் முள்ளுத் தைத்தும் 
துவண்டு விழாத ரோஜா மலர்கள் 
வாழும் தகுதி அற்று இங்கு நாம் 
வாழ்ந்தென்ன பயன் நீயே  சொல்?

ஊளைச் சதை பெருக எம் 
உள்ளம் தினமும்  கருக 
நாமும் படும் துயரை 
எந்நாளும் உரைப்பதெங்கே!

காலம் பனித்துளி போல் 
கரையும்  பொழுதினிலே 
வீணாய் எம் வயதும் 
விரைந்தே பெருகியதேன்!

பாழும் எம்  குடிசை 
பணிந்தே போவதனால் 
ஆளுக்கொரு சுகத்தை 
அடையத் துடிப்பாரிங்கே!

வாலை ஆட்டும் தெரு நாய்க்கும்
வசமாய் போகும் எம் வாழ்வு
இனி நீரில் கரைந்தால் என்ன!
நெருப்பில் எரிந்தால் என்ன!

கேள்விக் குறிகளுக்கே  வெறும்
கேலிக் குறியானவர்கள் எம்மை
நீயும் அணைக்காவிடில் இக் கடலை
நாம் நீந்திக் கடப்பதெப்படி!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/07/2012

கவிஞர் .கி .பாரதிதாசன் கவிதைகளா இவைகள் !!!!.....


குறை ஏதும்  இன்றித் தமிழினை எழுதிட
நாம் அறிந்திட வேண்டிய தளம் இதுவே !
மனம் கவர் கவிதை எம் மனங்களில் நிறைய
ஒரு தரம்  வாரீர்  உறவுகளே!

இனியது இனியது என மனம் புகழ்ந்திடும்
இவர்களின் ஆக்கம் அதைக்  கண்டு!
வியந்த என் விழிகள் பகிர்ந்திடத் துடிக்கும்
காரணம் எதுவென உணர்ந்திடுவீர்!

சிறகுகள் விரித்துச்  சிந்தையும்  பறக்கும்
அத்தனை ஆனந்தம் நெஞ்சினிலே!
படர் கொடியென இங்குப்  படர்ந்திடும் கவிதையைச்
சுவைத்திட இன்பம் பெருகிடுமே!


நாம் எழுதிடும் கவிதையின் தரம் அதைக் கூட
உயர்த்திட முடியும்  படிப்பதனால்
நான் அறிந்ததை பலரும்  அறிந்திட வேண்டும்
இதுதான் இன்றைய நோக்கம்  உறவுகளே!

வணக்கம்!
கி .பாரதிதாசன்  ஐயா அவர்களின்  ஆக்கங்களைக்  கண்டு 
மகிழ்ந்த என் கண்கள் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்வதன் 
மூலமாக பெரும்  மகிழ்ச்சி அடைகின்றது! வாழ்த்துக்கள்
தங்கள் கவிதைகளையும் சிறந்த ஆக்கங்களையும் அனைத்து 
வலைத்தள உறவுகளும் ,கண்டு  மகிழும் வாய்ப்புப் 
பெருகட்டும்! .மிக்க நன்றி ஐயா பகிர்வுகளுக்கு  .வாழ்க தமிழ்!
http://bharathidasanfrance.blogspot.ch/2012/10/blog-post_6.html
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/04/2012

மழைத் துளி சொட்டச் சொட்ட .....


மழைத் துளி சொட்டச் சொட்ட
மனதில் ஆசை முட்ட முட்ட
உனக்காகக்  கவிதை நூறு
அரங்கேறும் நேரம் இது
வளைந்தாடும் பெண்ணே உன்றன்
வளையோசை கேட்டால் என்ன!

தடுமாறும் நெஞ்சம் இங்கே
என்னைத் தாலாட்டும் கைகள் எங்கே?
மலைக் கோவில் மண்டபத்தில்
சிலையாகிப் போனதன்றோ!.
என் இசை கேட்டுத் தென்றல் காற்றாய்
எனக்குள்ளே வா வா பெண்ணே!

சுக ராகம் உன்னால்தானே
உருவாகும் எனக்குள் என்றும்
அறியாத பெண்ணா நீயும்
அடி போடி பைத்தியக்காரி
மனதுக்குள் தீயை மூட்டி
மறைவாக படகை ஒட்டி
விளையாட நினைக்கும் பெண்ணே
விடுவேனா உன்னை நானும்?

அழைக்காமல் வந்தால் என்ன?
அலைபோலே நீயும் அன்பே
இதமாக என்னைத் தீண்ட
இது போதும் சொர்க்கம் காண
வழி வேறு உண்டோ  சொல்லு?
என் அழகிய  செல்லக்  கண்ணே!

கவி வர்மன் ஏங்குகின்றேன்!
காதலைத்தான் வேண்டுகின்றேன்
ஒரு முத்தம் அதில் யுத்தம்
நித்தம் நித்தம்  தொடரட்டும்
அதில் சந்தம் தரும் ஆனந்தம் இது
போதுமடி பெண்ணே நீ வா வா என் முன்னே!

                                                            (  மழைத் துளி சொட்டச் )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/03/2012

பூமித்தாய் இங்கு சிரிப்பாளா!.....


காலம் பார்த்து பயிர் செய்து
கவலையின்றி வாழ்ந்த இனம்
எந்நாளும் படும் துயரம் இங்கு
எவர்தான் அறிவார் செண்பகமே!...

பூமி வறண்டு போயாச்சு !....
பெய்த மழையும் ஒஞ்சாச்சு
இதில் சாமி குத்தம் ஏதுமில்லை
எங்கள் சங்கடத்தைப் பார்த்தாயா!....

வரப்பு மூடி வளரும் பயிர்
வாடி இங்கு  நிக்குறது அதற்க்கு
உரம் வாங்கப் போனால்
அடுப்பில் பூனை தூங்குகிறது!...

அடித்துக் கட்டி வேலை செய்து
அலுத்துப் போன உடம்பு ஆறும்  முன்னே
அடுத்த போகமும் வந்து விடும்
அப்போதும் எம் கை வெறுங் கைதானே!...

கொடுத்து வைத்தவன் கமக்காரன்
என்ற கோசம் அடங்கிப் போனதிப்போ
அடுத்த வேளை சோற்றுக்கும்
அவலப்படும் எங்களைப் பார் !!!!!......

பன்னக்காரன் பெண்டில்
பணியக் கிடந்து செத்தாளாம்..
பரியாரி பெண்டில்
புழுத்துக்  கிடந்து செத்தாளாம்!!!!!.......

எங்கள் கதையும்  இதுதானே!....
வேறென்ன சொல்வேன் செண்பகமே !....
உன்னைப் பெத்த அப்பனுக்கு
உழைக்க வேறு வழி என்னதான் இருக்கு!!!!.......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/02/2012

மலர்கொண்டு பூஜித்தாலும் மகிழ்வான நாள்தான் இன்று!...



அகிம்சையின் வழியில் வாங்கிய சுதந்திரம்
அடடா கிடக்குது காலுக்கடியினிலே¨!!!....
இதை வாங்கித் தந்த காந்தித் தாத்தா அழகாய்
சிரிக்கிறார் பார் ரூபாய் நோட்டினிலே !!!.....

இனி இவர் போலொரு மனிதரை இந்தப்
பாரதம் பெறுமோ எந்தநாளினிலும் !......
இவர் எழுதிய சத்திய சோதனை படித்தால்
இதயம் மூழ்கும் கண்நீரினிலே !...........

மனிதருள் சிறந்த மாணிக்கம் இவரை
மதித்தென்றும் உலகமே போற்றுகையில் இவர்
அருமையும் பெருமையும் தெரிந்த  மண்ணில்
அன்றாடம் நடக்கும் கூத்தினைப் பார் !!!!......

அரசியல் மோகம் அடிதடி இன்றி
எவருமே இங்கு ஆட்சி செய்யவில்லை
வறுமையின் சின்னம் அதைத் தகர்த்திட இங்கே
காந்திபோல் ஓர் குணம் எவர்க்கும் இல்லை !......

எளியதோர் தோற்றம் என்றுமே விரும்பிய
காந்தியின் உள்ளம் ஓர் தேன்கிண்ணம்
இதில் இனியவை மட்டும் பிறந்தன அதனால்
இவரைப் போற்றிட மனம் ஏங்கும் !..........

காந்தி பிறந்த நாள்  இன்றேனும் அந்தக்
கடவுள் சொன்னதைக் கேட்டு நட
நீ வாங்கிடும் லஞ்சப் பணத்தினில் கூட
வருவார் உன் கண் முன் எந்நாளும் !!!!........
ஏன் இவர் இப்படி உழைத்தாரோ அவை
எல்லாம் மக்கள் நன்மைக்கே !..........
யார் மதிக்கின்றார் இவர் கருத்தை
யாவையும் இன்று பொய்தானே !!!!.....

காந்தியின் உருவப் படம் அது  மட்டும்
அரச காரிய அறைகளில் தொங்குமடா
ஏன் இதை இங்கு  வைத்தனர் என்று
எவருமே சிந்திக்கத் தவறுகின்றார் !!!!.....

ஊழலில் சிறந்த நாடென்று இனியும்
உலகம் பழிக்கும் நிலை இருந்தால்
காந்தியின் பெயரும் மங்கிவிடும் அதனால்
களவுகள் என்றுமே செய்யாதே!.....
ஆயிரம் துன்பம் அனுபவித்தே அன்று
அடிமை விலங்கை உடைத்தெறிந்தார்
அந்த நீதிமான் வாங்கிய சுதந்திர பூமியை
இனியேனும் நின்மதியாக வாழவிடு!...

தாயிலும் சிறந்த பண்பினில் உயர்ந்த ஒரு
புண்ணிய ஜீவன் பிறந்த நாள் இதனை
பாரினில் உள்ள மக்கள் எல்லாம்
பகிர்ந்திட்டால் மனதினில் இன்பம் பொங்கிடுமே!!!... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/01/2012

கோவப்படாதே பெண்ணே நீ என்னைக் கண்டு ....



மாவைப் பிசைந்த கையாலே என்
மனதைப் பிசைந்து போனவளே  கொஞ்சம்
தேனை ஊற்றிப் பிசைந்தால் என்ன!......
உன் தீந்தமிழ்போல் நான் வளர!....

ஆவின் பாலுக்கிணையான  உன்
அன்பைத் தானே நான் கேட்டேன்
கோவப் பட்டுப் பார்க்காதே உன் முன்
குழந்தை போல நிற்கும் என்னை  !......

பாலர் பள்ளிக் கூடத்தில் நான்
படிக்கச் சென்ற முதல் நாள் போல்
ஏனோ உன்னைக் கண்டதுமே
எதுவும் பேச முடியவில்லை !!!!......

வீரம் கொண்ட பெண்ணே  உந்தன்
விருப்பம் என்ன சொல்லு நீயும்
காலை மாலை எந்நேரமும் இங்கு
காத்துக் கிடக்கின்றேன் உனக்காக!...

ஓலை ஒன்று எழுதி அதை
உன்னிடத்தில் நான் கொடுக்க
நீ கிழித்து எறியக் கண்டால் என்
நெஞ்சுக் குழியில் நீர் வற்றிப் போகும் !...

பின் ஆளை வைத்து அடிப்பாயோ
இல்லை அன்பைத் தந்து மகிழ்வாயோ என
ஏதும் இங்கு தெரியாமல் பெரும்
ஏக்கம் எனக்குள் உள்ளதெடி பெண்ணே !...

காரணம் நீ தமிழிச்சி உந்தன்
கண்ணில் தீப்பொறி கண்டாச்சு!..
ஏழைக் குடிசையில் பிறந்தாலும்
எனக்கு நீதான் இளவரசி !!!!..........

மாலை மாற்றும் அந்நாளில்தான்
மண மகனைப் பார்க்கும் கூட்டம் !...
உன் தாய்வழி வம்சமும்  அறிந்தவன் நான்
அதனால் என்னைக் கண்டு முறைக்காதே!...

ஏழைப் பக்தன் உன்னையே எந்தன்
இடது புறத்தில் அமர்த்தி வைக்க
அந்தக் காலம் தொட்டு இன்று வரை
அழகிய கற்பனை சுமந்து வந்தேன் !...

இது வீணோ சொல்லடி என் தோழி
உன் விருப்பம் போல நான் நடப்பேன்
ஆணும் பெண்ணும் மணம் முடிப்பது
அன்பைப் பகிர்ந்து வாழ்வதற்கே !......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.