3/07/2013

வாருங்கள் உறவுகளே ஒன்று சேருங்கள்!...

ஈழத் திரு நாட்டில்
எம் தமிழர் தாய் நாட்டில்
மானம் காக்கப் பிறந்த
மறத் தமிழனடா உன் அப்பன்!...

ஏரைப் பிடித்த கரமும்
எடுத்துரைக்கும்  சுதந்திரத்தின்
வேரை ஊன்றியவன்
வெற்றிப் பாதைகளில்
சாதனைச் சுவடுகள் பதித்தவன்

அன்னை திரு நாட்டின்
அடிமை விலங்குடைக்கத்
தன்னைத் தந்து தாயாக நின்றவன்
உன்னை மட்டும் நினைத்திருந்தால்
உலகில் தமிழன் என்றோ தோத்திருப்பான் :(((
உனக்கும் வாழ்வு வந்திருக்கும்!......

பொன்னில் வடித்த சிலை போல
பரந்த மார்பில் குண்டேற
என்ன துடி துடித்தாயோ
இரக்கம் அற்ற அரக்கர்கள் முன்னால்!...:((((

வண்டு காதில் துளைத்தாலே
வருந்தும் மழலை உன் மார்பினிலே பல
குண்டுகள்  துளைக்கும் அளவுக்கு
கொடுமை என்ன நீ செய்தாய்
இதை இன்று கேட்க்க நாம் தவறினால்
ஈனத் தமிழன் என்றாவோம் !.........
                                      

1 comment:

  1. உரக்க குரல் கொடுப்போம்! சிங்களன் முகத்திரை கிழிப்போம்!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........