7/06/2013

உயிரே...... என் உயிரின் உயிரே..........


உயிரே! என் உயிரின்  உயிரே
உணர்வும் நீயே 
வந்து விடு 
நீயே வந்து விடு 

இந்தத் தனிமை 
கொடுமை கொடுமை 
இதனைக் கொன்று விடு 
நீயே.. கொன்று விடு 
                                             உயிரே...... என்  
ஏழிசையில்  கலந்து 
எனக்குள் புகுந்து
என் தலைவன் என நீ நின்றதென்ன! 
அந்த உறவைக் கலைத்து எம் 
உயிரைப் பிரித்து 
விதி சதியை வளர்திங்கு  சென்றதென்ன! 
அன்பே சென்றதென்ன!

மலர் கருகும் நேரம் 
இன்றும்   உனது தாகம்
அதை அறிய வேண்டும் நீ தானே!
ஒரு மெழுகைப் போல 
உருகி உருகி உன்னால் இங்கு 
கவிதை வடித்தேன்
நான் தானே 
                                   
அன்பை ரசித்து மகிழ்ந்து நீ 
என்னுள்  இருக்கும் பொழுதில்  தான்
இந்த மலர் சிரித்து மகிழ்ந்தது   
அன்பே வா அன்பே வா ......

நீ வரும் வழியைப் பார்த்து 
இந்த விழிகள் பூத்திருக்கும்  
என் உயின் கீதமென 
அன்பே வா  அன்பே வா  

                                       (உயிரே என் உயிரின்)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

22 comments:

  1. நல்ல பாடல்...

    ஏங்க வைக்கும் வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  2. பிராத்தனைப் பலிக்கட்டும்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் .

      Delete
  3. நல்ல கவிதை. வாழ்த்துகள்....

    ReplyDelete
  4. நல்ல பாடல், அழகாக உள்ளது. பாட்டாக படிக்கலாம் என முயற்ச்சித்தேன், எனக்குத்தான் பாட தெரியல. ஏக்கம் நிறைந்த அழகான பாடல்...

    த.ம: 3 போட்டுட்டேன்...

    அழகு கவிதை, வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. இப் பாடலைப் பாடிப் பார்த்தே தான் எழுதியுமுள்ளேன் சகோதரரே .
      மிக்க நன்றி வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete

  5. வணக்கம்!

    தமிழ்மணம் 4

    இசைத்தேன் ஒழுக எழுதிய பாட்டை
    இசைத்தேன்! இனித்..தேன் எதற்கு?

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு



    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      மிக்க நன்றி ஐயா வருகைக்கும் சிறப்பான நற் கருத்திற்கும் .

      Delete
  6. ஏக்கத்தினை மனவோட்டத்தினை உணர்த்தும் வரிகள் அருமை

    ReplyDelete
  7. அழகான சினிமா பாட்டு வரிகள் போல உருகுவதாக இருக்கிறது கவிதை...!

    ReplyDelete
    Replies
    1. கவிதையல்ல பாடலே தான் சகோ .மிக்க நன்றி சகோ வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  8. மிக மிக அருமை
    இதைவிட அருமையாகத் தனிமையின் சோகத்தை
    தலைவனை எதிர்பார்க்கும் தாகத்தைச் சொல்வது கடினமே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் சிறப்பான நல் வாழ்த்திற்கும் .

      Delete
  9. அருமையான பாடல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  10. நீ வரும் வழியைப் பார்த்து
    இந்த விழிகள் பூத்து இன்றும்
    என் உயிரைத் தேடுதிங்கே
    அன்பே வா .....அன்பே வா ......

    ரசிக்கவைத்த வரிகள்..!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........