4/15/2017

காதல் கலாட்டா கவிதைப் போட்டி!





ஆண்
-----------------------------------

மாலைப்பொழுதில் மயக்கும் பெண் நிலவடி 
அவள் சேலை கட்டி வந்த சிலையடி!
குயிலின் குரலோசை தானடி! 
பூக்களில் அவள்தான் அழகோ அழகடி!

பெண் 
----------------------------------------------------
எரிமலை நானடா குமுறக் குமுற 
வரும் துயர் பாரடா.....
உன்னோடு என்ன வழக்கு! தன்னாலே தீரும் கணக்கு! 
கண்ணுக்குள் நோயிருக்கு உன் நெஞ்சுக்குள் பேயிருக்கு!

ஆண்
-------------------------

பேயென்று சொல்லதடி! நெஞ்சைக் கொல்லாதடி! 
என் உயிராய் வாழும் தேவதை நீயடி 
திட்டும் போதும் வலிக்கும் பாரடி 
தேன்முத்தம் தந்து என்னை அள்ளடி! உணர்வே நில்லடி!

பெண் 
-------------------
சண்டாளனே! என்னை ஏதேதோ செய்கிறாய்! 
உன்னோடுதான் வாழ்க்கை என்கிறாய்! 
உயிரோடு விளையாடுறாய்! நீயாரடா? பதிலொன்று கூறடா?
புரியாத புதிரிங்கே நீயடா! என் உயிரும் தானடா!


ஆண்!
---------------------- 
சும்மாதான் சொன்னேன் நானடி அவள் நீ இல்லடி!
கொம்புத்தேனுக்கு ஆசையென்னடி!
கொலுவிருக்கும் பூங்கொடி! எண்ணிப் பாரடி 
நான் ராஜாதி ராஜனடி பல ரோஜாக்கள் தேடுமடி!

பெண்
-----------------
நீ ஒன்றும் அழகு இல்லையடா 
கற்பனையால் வந்ததிந்தத் தொல்லையடா! 
பூவெல்லாம் ஒன்றுதானடா 
நீ தேன் தேடும் வண்டுதானடா! என்முன்னே நில்லாதடா!

ஆண் 
------------------------------

கிளி மூக்கில் கோவம் வந்ததா அது 
அழியாத கோலம் ஆனதா! 
உளிகொண்டு சிதைத்தாலும் நீதானடி 
உயிருக்குள் உயிர் வாழும் என் பைங்கிளி 

பெண்!
------------------------
இனியென்ன சொன்னாலும் நம்பேனடா 
எல்லாமே என் வாழ்வில் பொய்தானடா!
வலி மேவுதே! அதில் காதல் பலியானதே! 
விளையாட்டும் உன்னால்தான் வினையானதே 
என் நெஞ்சம் தனியாய் வாடுதே!

                                                             


கவிஞர் .அம்பாளடியாள் 
சாந்தரூபி 
சுவிஸ்
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6 comments:

  1. Replies
    1. பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரா!

      Delete
  2. நன்று. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரா!

      Delete
  3. பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரா!

    ReplyDelete
  4. சிறப்பாகப் புனைந்த பாவிது
    அருமையான எண்ணங்கள்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........