1/25/2011

இருள் மேகம் கலையட்டும்........

தரம் பார்த்து உயர்கல்வி நடை போடுமோ!
இல்லை முகம் பார்த்து ஆசிரியை                                              மனமொரு எடைபோடுமோ!
நிலையான கல்வி இங்கு விலை போகுமோ!
நீரூற்றும் கரம் எமக்கு வரமாகுமோ!
இமை மூடா  விழியிரண்டும் குளமாகுமோ!
இடு கல்வி மனம் நின்றும் 
தோல்வி  நிலையாகுமோ!
எமையாளும் சரஸ்வதிக்கு இது தர்மமோ?
எதிர்காலம் எமக்கும்  நல் ஒளிகாட்டுமோ?
இருள்மேகம் கலைந்தால் 
நல் ஓளி தோன்றுமே! 
இது ஏனோ இவ்வுலகுக்கு ஒரு  சாபமே?   
  

No comments:

Post a Comment

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........