2/25/2011

திருச்சிற்றம்பலம்

ஈராறு கரமும் இடர் தீர்க்கும் மனமும்
இணையில்லா அழகின் திருவுருவே
ஈசன் மைந்தா எமையாளும்  முருகா
உனையன்றி வேறு துணையேதும் உண்டோ 
இம்மானிடர்க்கு  விளையாடும்
வண்ணமயில் வாகனனே நீ எம்
துணையாக வேண்டி நின் பதம் 
தொழுதேற்றினோம் வரவேண்டும்
வரம் வேண்டும் தமிழ் தந்த குமரா
முருகா சண்முகா  அவ்வைக்கருளிய
சரவண பவகுகா சஞ்சலம் தவிர்க்கவா
சிவ சக்தி பாலகா சர்வ லோக நாயகா
அவலங்கள் தீர்க்கவா ஆதிசக்தி வேலவா 
தமிழன்னைக் கருளவா தாயகத்தை மீட்க்கவா
மொழி தந்த வேலவா முன்னின்று காக்கவா 
அழியாத கீர்த்தி புகழ் அனைவர்க்கும் தந்தருளும்
முருகா உன் பொற்பதம் போற்றி போற்றி.......   
     

No comments:

Post a Comment

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........