3/17/2011

கோமாதா பூஜை செய்வோம்.....

புல்லைத் தின்னும்
பசுவின் பாலை
பிள்ளை குடித்து வளருதடா!

இதில் உள்ள சத்து 
உடலைக் காத்து 
உயிரை வாழ வைக்குதடா! 

அன்னை போல 
எம்மைக் காக்கும் 
ஆவின் குணத்தை அறிந்தவர்கள் 

இன்றும் இதனை 
வணங்கி  இங்கே  
இதற்கும் பூஜை வைத்தனரே!

அன்னையர் தினம் போல்
இன்றயநாளை அனைவரும்
மகிழ்ந்து கொண்டாடி

இதன் ஆசிகள் பெற்று
ஆயுட் பலமும்
அமைதியுமுற்று வாழ்ந்தாரே!


No comments:

Post a Comment

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........