12/10/2012

swiss lotto விழுந்தால் எப்படி இருக்கும்.....


ஐந்து கோடியும் வேண்டாம் அம்மா
பத்துக் கோடியும் வேண்டாம் அம்மா
ஒரு கோடி வீழ்ந்தால் போதும் இந்த
உலகில் உன்னை நான் மறவேன்!!!....

தொண்டு செய்து காலம் கழிப்பேன்
துலங்க வைத்து உன்னை ரசிப்பேன்
கஞ்சி ஊத்தி மனம் குளிர வைப்பேன் என்
காலமெல்லாம் உன்னை நினைத்திருப்பேன்!....

என்ன ஒரு வேண்டுதல் !!!!................
இவர்கள்  போல் பலர் எங்குமே  உள்ளார்
சொந்த நலன் கருதித் தினமும்
கேட்க்கும் வரம்  நிறைவேறுமா !!!!!.......

கொடுத்தால் அது சாமி என்பார்
கூட இருந்தும் பாட்டுப் படிப்பார்
அடுத்தவர் நலனை நினைக்காதவர்க்கு
ஆண்டவன் மீதும் ஆத்திரம் இருக்கும்!....

பாத்திரம் அறிந்து பிச்சை இடவும்
படைத்தவன் அவனுக்கு நன்கு தெரியும்
பல சாத்திரம் கற்று முடித்தவராயினும்
பக்குவம் இழந்தவர் ஏதும் அற்றவரே!!!!....

உட் பொருள் அறியாத் தத்துவம் போல்
உலகினில் தெய்வம் இருந்தாலும்
அதன் அற்புத சக்தி வேறாகும் அதை
அறிந்தவர் உள்ளம் வெண் மதியாகும்!!!!!......

நிற்பதும் நடப்பதும் அவன் செயல் என
நினையா மனதுடன் போட்டி என்ன!!!!! .....
எப்பொழுதும் எமைக் காத்திட வல்ல
இறைவன் இருக்கின்றான்  என வணங்கு!....

2 comments:

  1. எப்பொழுதும் எமைக் காத்திட வல்ல
    இறைவன் இருக்கின்றான் என வணங்கு!....


    இறைவனுக்கு பெருமை சேர்க்கும் ஆக்கம் .. பாராட்டுக்கள்..

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........