7/26/2011

அடிமை விலங்கை உடைக்க வா............

நெஞ்சில் உரம்கொண்டு 
வஞ்சகரை அழித்திடவேண்டி
அன்னையவள் பாதம் தொழுது 
அஞ்சாது கவிதை மழை பொழிந்தேன் 
 
அன்புக்கு அடிமையானவள் 
அரசனின் தவறான தீர்ப்பைக்கண்டு 
பொங்கி எழுந்தாள் அன்று கடலென 
இன்றும் புவிபோற்றும் அந்தக் காப்பிய நாயகி 
 
என்றும் அனலினில் இட்ட  புழுவாய்
அவதியுறும் எங்கள் உறவுகளின் 
வேதனை தீர்த்திட வரமாடடாளோ என்று 
என் இதயத்தைக் குடைந்த உணர்வினால் 
 
கண்ணீர்க் குடம் உடைந்து 
கசிந்துருகிய என் நினைவுகள் 
ஒரு பாடலாய் இன்று உங்கள் முன் 
இதுவும் என் தாய்த்திரு நாட்டிற்கு சமர்ப்பணம்!...
 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

31 comments:

  1. கற்ப்புக்கரசி கண்ணகியின் அடிதொழுது
    வேண்டும் அருமையான பாடல்.
    கண்திறந்து பார்ப்பாள்
    கவலைகள் தீரும்

    ReplyDelete
  2. அழகாக எழுதுகிறீர்கள் நண்பா ..

    ReplyDelete
  3. வணக்கம் என் உறவுகளே. இந்தப் பாடல்
    என் தாய் நாட்டிற்கு நான் சமர்ப்பணம்
    செய்த பாடல் இதை என் உறவுகளின்
    காதுகளுக்கு எட்டும்படி செய்வது உங்கள்
    அனைவரினதும் பொறுப்பு .பாடல் பிடித்திருந்தால்
    வாக்களிக்கத் தவறாதீர்கள்.இது என் பணிவான
    வேண்டுகோள்.மிக்க நன்றி வரவுக்கும் வாழ்த்துகளுக்கும்.

    ReplyDelete
  4. கண்டிப்பாக வாக்களிப்போம் சகோ..

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. அருமையான பதிவு

    ReplyDelete
  7. இன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்....மன்னிச்சு...

    ReplyDelete
  8. கவிதை நயம் சூப்பராக உள்ளது.......... தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!!!!!!!!!

    ReplyDelete
  9. கற்ப்புக்கரசி கண்ணகியின் அடிதொழுது
    வேண்டும் அருமையான பாடல்.
    கண்திறந்து பார்ப்பாள்
    கவலைகள் தீரும்

    நன்றி என் அருமைச் சகோதரரே
    தங்கள் வாக்கு பலிக்கட்டும் ......

    ReplyDelete
  10. அழகாக எழுதுகிறீர்கள் நண்பா ..

    நன்றி நண்பி ஹி....ஹி..ஹி....

    பாடிக்காட்டிய பின்னருமா!.....

    ReplyDelete
  11. கண்டிப்பாக வாக்களிப்போம் சகோ..

    நன்றி சகோதரரே கருத்துக்கள் எங்கே?..

    ReplyDelete
  12. பகிர்வுக்கு நன்றி!

    நன்றி ஐயா...........

    ReplyDelete
  13. அருமையான பதிவு

    மிக்க நன்றி வரவுக்கும் பாராட்டுக்கும்.......

    ReplyDelete
  14. //ன்றும் அனலினில் இட்ட புழுவாய்
    அவதியுறும் எங்கள் உறவுகளின்
    வேதனை தீர்த்திட வரமாடடாளோ //
    உங்கள் ஆதங்கம் நியாயமானதே!

    நன்றி சகோதரரே வரவுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  15. இன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்....மன்னிச்சு...

    நன்றி சகோதரரே வரவுக்கும் கருத்துக்கும்..........

    ReplyDelete
  16. கவிதை நயம் சூப்பராக உள்ளது.......... தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!!!!!!!!!

    மிக்க நன்றி சகோ..

    ReplyDelete
  17. அம்மன் பாடல் அருமை. தமிழ்மணம் எங்கே?

    ReplyDelete
  18. சகோதரி!
    கவிதையின் கருத்தும் கணீ
    ரென்ற குரலும் காதுகளில் தேனாப்
    பாய்த்தாலும் இதன் ஊடே வடிந்த
    சோகம் இடையே வந்து போன
    படக் காட்சிகள் நெஞ்சை இன்னும்
    வாட்டிக் கொண்டிருக்கிறது.
    அமைதிகாண வேண்டுகிறேன்
    மேலும் பித்தர் வழியே தங்கள்
    சித்தம் கண்டு கொண்டேன்
    உங்கள் பதிவை, படித்து
    கருத்துரைத் தருவேன்
    உங்கள் மறுமொழியை உங்கள்
    வலைய்யிலேயே போடுங்கள்
    போதும் துன்பப்பட வேண்டாம்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. இருட்டில் உள்ள சில பெண்களின் வாழ்க்கைகள் உங்களின் இந்தப் பதிவால் நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்.

    ReplyDelete
  20. அம்மன் பாடல் அருமை. தமிழ்மணம் எங்கே?

    விரைவில் இணைப்பேன் சகோதரரே..நன்றி உங்கள்

    வரவுக்கும் பாராட்டுக்கும்............

    ReplyDelete
  21. சகோதரி!
    கவிதையின் கருத்தும் கணீ
    ரென்ற குரலும் காதுகளில் தேனாப்
    பாய்த்தாலும் இதன் ஊடே வடிந்த
    சோகம் இடையே வந்து போன
    படக் காட்சிகள் நெஞ்சை இன்னும்
    வாட்டிக் கொண்டிருக்கிறது.
    அமைதிகாண வேண்டுகிறேன்
    மேலும் பித்தர் வழியே தங்கள்
    சித்தம் கண்டு கொண்டேன்
    உங்கள் பதிவை, படித்து
    கருத்துரைத் தருவேன்
    உங்கள் மறுமொழியை உங்கள்
    வலைய்யிலேயே போடுங்கள்
    போதும் துன்பப்பட வேண்டாம்

    புலவர் சா இராமாநுசம்

    அன்பெனும் இன்பச் சரம்தொடுத்து
    இந்த அடியவள் தமக்கொரு மாலை இடுவேன் என் சிந்தையில் நிறைந்த புலவர்பெருமானே
    என் தமிழ்தந்த தாய்க்கும் நீ நிகரானவன் நொந்தமனதைக் குளிரவைத்தாய் மனம் நோகாமல்
    மீண்டும் எம் உறவை மலர வைத்தாய்... நன்றிகள்
    பலகோடி என்னை நாடிவந்த தந்தையே நீ வாழிய என்றும் பல்லாண்டு!......

    ReplyDelete
  22. இருட்டில் உள்ள சில பெண்களின் வாழ்க்கைகள் உங்களின் இந்தப் பதிவால் நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்.

    நன்றி சகோதரரே வரவுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  23. //அன்புக்கு அடிமையானவள் //
    தாயை அன்புடன் வணங்குவோம்

    ReplyDelete
  24. வணக்கம் சகோ, எம் அவலத்தினைக் கண்டு, உறைந்து போய் விட்ட இறைவனைத் துயில் எழுப்பும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள எழுச்சி மிகு பாடல். நிச்சயம் இறைவன் காதுகளுக்கு எட்ட வேண்டும். பாடலுக்கு ஏற்றாற் போல குரலும் அமைந்து பாடலின் சிறப்பிற்கு துணையாகின்றது.

    ReplyDelete
  25. வேதனை தீர்த்திட நிச்சியம் வருவாள் அன்னை.

    ReplyDelete
  26. //அன்புக்கு அடிமையானவள் //
    தாயை அன்புடன் வணங்குவம்

    நன்றி சகோதரரே வரவுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  27. வணக்கம் சகோ, எம் அவலத்தினைக் கண்டு, உறைந்து போய் விட்ட இறைவனைத் துயில் எழுப்பும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள எழுச்சி மிகு பாடல். நிச்சயம் இறைவன் காதுகளுக்கு எட்ட வேண்டும். பாடலுக்கு ஏற்றாற் போல குரலும் அமைந்து பாடலின் சிறப்பிற்கு துணையாகின்றது.

    நன்றி சகோதரரே வரவுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  28. வேதனை தீர்த்திட நிச்சியம் வருவாள் அன்னை
    நன்றி சகோதரரே வரவுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  29. சிறப்பான பதிவு சகோ

    ReplyDelete
  30. சிறப்பான பதிவு சககோ

    மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும்

    ReplyDelete
  31. //கண்ணீர்க் குடம் உடைந்து
    கசிந்துருகிய என் நினைவுகள்
    ஒரு பாடலாய் இன்று உங்கள் முன்
    இதுவும் என் தாய்த்திரு நாட்டிற்கு சமர்ப்பணம்!...//
    நன்றி கலந்த பாராட்டுக்கள் .

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........