12/10/2016

வண்டி உருண்டோட


வண்டி உருண்டே ஓடும்
.....வாய்த்தால் இரண்டு மாடும்!
கண்டு கொள்வீர் இதுபோல்
.....கணவன் மனைவி வேண்டும்!
சண்டை இட்டுப் பிரிந்தால்
......சாகும் வரைக்கும் துன்பம்!
தொண்டில் சிறந்து விளங்கித்
......தோகை மயிலே வாழ்க!

உழவுத் தொழிலுக் குதவும்
....உண்மை யானதோ ழர்கள்!
பழகும் விதத்தில் என்றும்
....பசுவும் எருதும் எம்மின்
குழந்தை என்றால் வாழ்வில்
.....குலத்துக் கதுவே பெருமை!
இழப்பைத் தாங்க இனியோர்
.....இதயம் எங்கே கேட்போம்!

மண்ணின் வளத்தைக் காக்கும்
.....மழையைப் போல்தான் என்றும்
எண்ணக் கருத்தில் நிற்கும்
......எருதும் பசுவும் வாழ்வில்!
உண்ண உணவும் தந்தே
.....உயிரைக் காக்கும் தெய்வம்
கண்கள் முன்னே தோன்றும்
.....காளை மாட்டின் வம்சம்!

வணக்கம் அன்பு உள்ளங்களே!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.