4/18/2013

சிவபுராணம் சொல்லச் சொல்ல சிந்தை மகிழும் தன்னாலே !


உறங்கும் போதும் உன் நாமம்
விழிக்கும் போதும் உன் நாமம்
எமக்குத் தெரிந்தது அதுவொன்றே
நாம்  என்ன செய்வோம் இறைவா சொல் !..

மறக்க முயன்றால் முடியாது
மனதின் சுமைகளும் குறையாது
நாம்  தொடுக்கும் காரியம் அத்தனையும்
துலங்கும் உன்றன் அருளாலே!...........

விரித்த சடை முடியோனே
நால் வேதமும் போற்றும் நாயகனே
துடிக்கும் மனமிதை அறிவாயோ
மேவிடும் துயர்களைப் போக்க வருவாயோ

சிவ சிவ சிவ என்று சிந்திப்போம்
சிந்தையில் நல்லதை நாம் நினைப்போம்
அவனருளாலே வரும் நன்மைகளை
அவனியில் என்றும் நாமடைவோம்

தேவர்கள்  படும் துயர் தீர்த்தவனை
எம்மைத் தேடியே நன்மைகள் அருள்பவனை
எந்நாளும் பாடியே பரவசம் அடைந்திடுவோம்
இறை பக்தியை விட ஒன்றும் சிறந்தில்லை .....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/03/2013

கவச குண்டலங்கள்....


கவச குண்டலங்கள்
இழந்து மண்டலத்தில்
குழந்தை போலே நானுறங்க
அதில் படரும்
கொடி போல்
எனது தலைவா
காட்டு உன்றன் கைவரிசை !


உயிரில் பிரியமில்லை
என்னுடலில் எதுவுமில்லை
உணர்வில் மட்டும் நீ கலக்க
நல்ல  தருணம் இதுவே
சரணம் எனதே
காட்டு உன்றன் கைவரிசை!

மெழுகில்  திரியைப் போல
என் உயிரில் கலந்த உன்னை
ஒளியை ஏற்ற அழைக்கின்றேன்
வரும் இருளைத் தகர்த்தி
அமுதம் பொழியக்
காட்டு உன்றன் கைவரிசை!

மலரில் மணமும் உண்டு
உன் மனதில் இடமும் உண்டு
என் நினைவை மட்டும்
ஏன் மறந்தாய்?
இரு கரங்கள் தொடுத்து
வரங்கள் கொடுத்தவனே
காட்டு உன்றன் கைவரிசை

                          (கவச குண்டலங்கள்)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.