12/26/2013

வானகமும் வையகமும் செழித்திடவே


வானகமும் வையகமும் செழித்திடவே
வாழ்வினிலே இன்ப நிலை கொழித்திடவே 
கானகத்தில் தொழுவமதில் இஜேசு பிறந்தான்
காற்றினிலும் ஒளிக்கீற்றினிலும் தவழ்ந்து திரிந்தான் !

பாசமலர்க் கிளைகளெல்லாம் பரந்து விரிய
பாவப் பட்ட உயிர்களெல்லாம் மகிழ்ந்து சிரிக்க
காசினியில் தேவ தூதன் கண்ணைத் திறந்தான்
காதல் மலர்கள் மலர்ந்திடவே  மண்ணைக் கவர்ந்தான் ...

இனிப் பேசும் வர்த்தை அத்தனையும் இஜேசு நாமமே எங்கள்
இல்லமெங்கும் ஒளிரும் தீபம் உண்மை பேசுமே ...........
ஆசையோடு அவனுருவைக் கண்டு மகிழ்ந்தவர்
ஆனந்தமாய் ஆடிப் பாடிக் கொண்டாடித் திரிந்தனர் ..

ஆடு மாடு சுற்றி வந்து அன்பைப் பொழியவும்
ஆயர் பாடிக் கண்ணனைப்போல் அகத்தில் நிறைந்தவன்
வேறுபாடு களைந்து உயர் பக்தி பொங்கிட
வேதனைகள் தீர்க்கும் சிவன் போல தோன்றினான் !!

மாயவலை கிழித்துலகில் மனிதம் வென்றிட
மாசு மறையற்ற ஜோதி உன்னைத் தொழுகிறோம்
நேசக் கரம் நீட்டி எங்கள் குறைகள் தீர்த்திடு
நேர்வழியைக் காட்டி மன நிறைவைக் கூட்டிடு ....



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/22/2013

மரணமும் தோற்றதே இவர்களிடத்தில் !




ஆடை நெய்யும் நெசவாளி
அங்கமெல்லாம் புண்ணாகிப் 
பாடையிலே போகும் போது 
பருத்தி மட்டும் சிரித்ததடா!

மானம் காக்கப் பிறந்தவனை 
மரம் போல் எண்ணி வாழ்ந்தவர்கள் 
வாடும் போது மனம் வாடாமல் 
வாட்டும் போது அழுதார் ஏன்!

கூடு விட்டுப் பறந்த பின்னால் 
கொந்தளிக்கும் மன நலத்தைக் 
காடுவரைச் சுமப்பவரா  
கருணையுள்ள மனிதரிங்கே!

வாழும் போது வாழ்த்துவதும் 
வறுமை நிலையைப் போக்குவதும்
தேடற்கரிய சுகம் என்று 
தெரிந்தால் மட்டுமே வாழ்வுண்டு!

இயேசு நாதர் போல் புத்தர் 
எங்கும் நிறைந்த காந்தி மகான் 
பாசம் மிகுந்த மனிதர்கள்  
பாதை எதுவோ அதைப் பாரீர்!

வாசம் நிறைந்த மல்லிகையாய் 
மலர்ந்தார் மக்களை வாழ வைத்தார்! 
தேசம் விட்டுப் போன பின்பும் நாம் 
தேடிக் கொண்டாடிடும் தெய்வங்கள்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/20/2013

விலங்கினமாகிரான் மனிதன்



விலங்கினமாகிரான் மனிதன்
விம்மியே அழுகிறான் புனிதன்
பணம் தரும் துன்பம் இது போதும்
பராசக்தி உன்னருளே வேண்டும் ...

விலையுயர் வாழ்விதன் எல்லை
வித வித மான பெரும் தொல்லை
இருண்டிடும் உலகினில் தாயே
இன்னருள் புரிந்திடுவாயே .....

கொடி மலர்க் கம்பங்கள்  சிரிக்கக்
கொஞ்சிடும் சலங்கைகள் ஒலிக்க
இனியன பேசிட வரமருள் வாய்
இகபர சுகமெல்லாம் அருள்பவளே ...

செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்
செந்தூரப் பொட்டே புன் சிரிப்பே
எண்ணாமலே துயர் வந்து போக்கிடுவாய்
எம் சக்தி பரா சக்தித் தாயே அம்மா ....

கண்ணொன்று காட்சியது வேறாகுமா
கருணைக்குப் பெயர் பெற்ற தாயே அம்மா
பொன் விளையும் பூமியிதன் நலனைக் காக்கும்
பொக்கிசமாய் நீயமர்ந்தால்  போதுமம்மா ........

                                                                           



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/18/2013

ஆடும் மயிலே அகவும் மயிலே


ஆடும் மயிலே
அகவும் மயிலே
பாடும் குயில் நான்
அழைக்கின்றேன் .....

உன் தோகை விரித்தொரு
ஆட்டமாடிடத்
தோன்றும் அழகில்
நான் வியக்கின்றேன் ...

                             (ஆடும் மயிலே )
காடும் அழகுறும்
கவியும் அழகுறும்
சுகம் தேடும் விழிகளில்
மயிலிங்கே .......

வாடும் மனத்தின்
வாட்டம் தீர்த்திடும்
வண்ணத் தோகையின்
எழில் இங்கே ......!!
             
                                 (ஆடும் மயிலே )
குமரன் என்ற
அழகன் அமரக்
குறைகள் போக்கும்
மயிலே வா ............

மழையும் பொழியும்
கலையும் வளரும்
தமிழன் வணங்கும்
மயிலே வா .........

                                   (ஆடும் மயிலே )


                                 http://gmbat1649.blogspot.ch/2013/12/blog-post_17.html 

வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே !

இன்றைய பகிர்வானது "கவிதை எழுதலாமே"என்ற தலைப்பின் கீழ்
எங்கள் பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய பாலசுப்பிரமணியம்
ஐயா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதப்பட்டுள்ளது .
தாங்களும் இந்த அழைப்பினைப் பின் தொடர்ந்து கவிதைகள் எழுதலாம்
தங்கள் கருத்தினையும் பகிர்ந்துகொள்ளலாம் .மிக்க நன்றி உறவுகளே .
ஐயா அவர்களின் இந்த முயற்சிக்கும் அழைப்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ..........

                                                         
                                                                 வாழ்க தமிழ் ...
                                                     


                    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/16/2013

காரிருள் கண்களை மறைத்தாலும்





காரிருள் கண்களை மறைத்தாலும் நான்
கைதொழும் தெய்வம் நீ என் தாயி ....
பேரருள் பெற்றிட வரமருள்வாய்
பெருமையோ சிறுமையோ கொள்ளாமல்

நாரொடு மலர்போல் இணைந்தவளே
நறுமணம் வீசிடும் என் தாயி .....
வேரொடு பகைக்கும் நிலை வரினும்
வரம் வேண்டியே தொழுவேன் உனை நானே ....

மாறிடும் வையகம் ஒரு நாளில்
மலர் விழி திறந்திங்கு  நீ பார்த்தால்
தேறிடும் உயிர் வளம் உகமெலாம்
தேவியுன் புன்னகைப் பூ பூத்தால் ...

மேவிடும் துயர்களைக் களைபவளே
வெண் மேகமாய் ஊர் வலம் வருபவளே
என்  ஆவியே பொருளே அங்கமே நீ
ஆனந்தக் கூத்துகந் தாடிடுவாய் ........

                                                              அம்பாளடியாள்   





    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/14/2013

இதய வீணையை இதமாக மீட்டுகிறான் இஜேசு பிரான் !




நிலவு தேய்ந்து வளர்வது போல் சில
நினைவும் தேய்ந்து வளருதே!
இறைவன் இல்லை என்றவர் முன்
இரண்டு விழியும் நனையுதே!

உனதருமை பெருமையெல்லாம்
உணர்த்தும் நல்ல நேரமே!
உலக  மக்கள் நன்மைக்காக
உயிர் துறந்த தேவனே!

எளிமையான தோற்றத்தோடு
எங்கும் உலாவும் சக்தி நீ!
இருள் கடத்தி ஒளி பரப்பும்
இன்பமான சோதி நீ!

சிலுவையிலே தொங்கும் காட்சி
சிந்தை அதை வாட்டுதே!  நீ
மறுபடியும் பிறந்த செய்தி
மனதில் இதம் ஊட்டுதே!

இரக்கமுள்ள இஜேசுவின்
இன்முகத்தைக் காணவே
பரந்து விரிந்த சமூகத்தில்
பல சமையமும் நிக்குதே!

மன வினைகள் போக்கும் தேவன்
மலர்ப் பதத்தைத் தொட்டதும்
இருந்த துன்பம் பறந்து மீண்டும்
இளமை நெஞ்சில் பொங்குதே ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/12/2013

ரஜனிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

                                                               
                                                                         


சூப்பர் ஸ்ரார் ரஜனிக்காந்த்  அவகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! திறமைகளைக் கண்டு பாராட்டுவதிலும் வாழ்த்துவதிலும் ஒரு தனி சுகம் இருக்கின்றது .என்னைப் பொறுத்தவரையில் ரஜினி ஒரு சிறந்த நடிகன் அவரது நடிபினில் வெளிவந்த படங்கள் பழைய புதிய படங்கள் எதுவாகினும் மிகவும் ரசித்து ரசித்துப் பார்க்கும் ரசிகை நான் .அவரது நடை உடை பாவனைகள் என்றுமே தனித்துவமானது .அவர்  நடித்து வெளிவந்த படங்களில் உள்ள பாடல்கள் அனைத்தும்  மனதில் நீங்காத இடத்தில் நிலைகொண்டிருக்கும் .சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும் இவரது நடிப்பிற்குப் பின்னால் நான் அதிகம் ரசிப்பது இவரது கடுமையான உழைப்பைத் தான் .காலத்தை நேரத்தை மதிப்பவர்களால் மட்டுமே சிகரத்தை எட்ட முடியும் .பண்பு நிறைந்த இந்த நடிகரின் பேச்சும் நடிப்பும் இறைவன் அவருக்குக் கொடுத்த வரம் என்றே சொல்லலாம் !.....

                                                                 

தென்றலைப் போலொரு பார்வையாலே
தென்மாங்கு பாடிடச் செய்பவனே உயர் 
வண்டினம் ரெண்டது கண்ணுக்குள்ளே 
வற்றாத நடிப்பு உன் நடிப்பே !!............. 

அன்றல்ல இன்றல்ல நேற்றுவரை 
அகத்தினில் குடிகொண்ட நாயகனை
என்றுமே காத்திட வேண்டுமிங்கே 
எம் சக்தி பராசக்தி  துணையாய் நின்று ...

கன்று போல் மனத்தில் இளமை பொங்க 
கற்றவர் மற்றவர் வாழ்த்துரைக்க 
வென்றிடு சுகத்தை எந்நாளுமே 
வெம் சினம் தவிர்த்த நாயகனே ....

நன்றது நாட்டிற்கும் சேவை செய்து 
நற் பெரும் பேறுகள் பெற்று விடு 
உன் குடி தழைக்கும் அது போதுமே 
உயரிய பண்புள்ள நாயகனே ...........

மண்ணது போற்ற மலையெனவே 
மருவிடும் துயர்கள் சிதைந்திடுமே
இன்னலைத் துடைத்து மென்மேலும் 
இதயத்தில் குடிகொள்வாய் இனியவனே ..

பன்னெடுங் காலம் மண்மீது 
படம் பல நடித்து நீ வாழியவே ..........
வெண் திரை ஏற்ற உயர் நட்சத்திரம் உன்னிடம் 
வெற்றிக் கனிகள் வந்து கொட்டட்டுமே ....








தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/11/2013

மகா கவி பாரதி நீ வாழிய வாழிய வாழியவே ...


அடிமை விலங்குகள் தெறிக்கட்டும்
அகதி வாழ்விது  முடியட்டும்
கொடிய விலங்குகள் திருந்தட்டும்
கொட்டு முரசு நீ கொட்டு பாரதியே .....

விடிய விடிய சுதந்திரத்தை
விழித்திருந்து பெற்றவனே
மடியும் யுகத்தைப் பார்த்தாயா ?...!!
மறுபடியும் நீ வர வேண்டும் ...

நெடிய பார்வைக் கணை வீசி
நெருப்பை வெல்லும் பாவலனே
பொதிகை மலையில் அமர்ந்தவனைப் போல்
பொங்கி எழுந்து நீ வர வேண்டும் ........

அசுர குலத்தின் அழிவுக்கோர்
அடிக்கல் நாட்டித் தர வேண்டும்
இடியும் மின்னல் மழையோடும்
இருண்ட கண்டம் விடியட்டும் ...

துணிச்சல் மிகுந்த பாவலனே
தும்பைப் பூ நிற மனத்தவனே
இனிக்கும் ஒரு நாள் இந்நாளாம்
இனியவன் நீ பிறந்த பொன்னாளாம் ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/08/2013

பத்தரை மாதத்துத் தங்கமே உன்னை நான்




பத்தரை மாதத்துத் தங்கமே உன்னை நான்
பத்திரமாக வைத்தேனே ........
சித்திரை வந்ததும் நித்திரை ஏனடி
சிந்தையில் வந்தொரு பாட்டுப் படி ...

                                                             (  பத்தரை மாதத்துத்)

குற்றமாம் தமிழைக் கொன்றிடும் உலகில்
குற்றுயிரோடு நாம் கிடந்தால் எம்மைப்
பெற்றவள் தவிப்பாள் பெருந் துயர் கொள்வாள்
பெற்றெடுத்த தாய்மொழிக்கு ஈடேது ?......

கட்டிய சேலையும் வேட்டியும் மாறினும்
கண்ணியம் வேண்டும் எங்களுக்கு அதை
அந்நிய மொழியில் கண்டதும் உண்டோ சொல்
அருந் தவப் புதல்வர்கள் சொன்னது போல் ?..

                                                               (  பத்தரை மாதத்துத்)

கற்றவர் விரும்பும் கனி எங்கள் மொழியைக்
கற்றிட கற்றிட இன்பம் பொங்கும்
மற்றவர் போகும் பாதைகள் எதற்கு
மற்றுமோர் துயரைப் பெற்றிடவா ?....

பெற்றது போதும் பெருந்  துயர் வாட்டும்
பெண்மையைப் போற்றும் எம் நாட்டினிலே
அன்னியர் ஆட்சியும் அது தந்த வீழ்ச்சியும்
அழியவில்லையே  மன ஏட்டினிலே .....

                                                                  (  பத்தரை மாதத்துத்)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/04/2013

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா நம்புங்க .....


அழகென்ன அழகென்று
அகம் வியந்து நிற்கிறது!
இயற்கை அதன் அழகு கண்டே
இதயம் பறி போகிறது!

மனப் பாறை குளிர்ந்திடத்தான்
மழையும் இங்கே பொழிகிறது!
மனிதன் இனப்போரை நடத்துவதால்
மனதில்  இன்பம் குறைகிறது!

அகத் தூய்மை இல்லாதார்
அறிவாரோ இத் துயரை!
அன்று தொட்டு இன்று வரை
அதே கேள்வி எழுகிறது!

குண்டு மழை பொழிந்துலகைக்
குப்பை மேடாய் ஆக்கி வைக்கும்
பண்பிழந்த மனிதர்கட்கு நல்ல
படிப்பினையை யார் தருவார்!


எங்கும் உயிர்கள் போகிறது!
எதிலும் குறைகள்  நேர்கிறது!
அரசியலில் இதுவெல்லாம்
அவசியமாய்ப் படுகிறது!

அந்த நாடு இந்த நாடு
எந்த நாடு என்ற போதினிலும்
சொந்த நாட்டைக் காப்பதற்கே
சூழ்ச்சி செய்வார் உலகினிலே!

ஒட்டுமொத்த நாட்டினிலும்
இன ஒழிப்பை எதிர்த்து வந்தால்
கட்டித் தங்கம் இவர்களைத்தான்
கடவுள் என்றும் நாமுரைப்போம்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/01/2013

மானே தேனே மயிலே என்று மறு படி அழைக்கேனே...


மானே தேனே மயிலே என்று
மறு படி அழைக்கேனே உன்னைக்
காணும் பொழுதில் கண்களில் கூட
அந்த நினைவதை நிறுத்தேனே!

போடி போடி பெண்ணே உன்
பாசம் எல்லாம் பொய்யே!
தீயில் வாடுது மனமே உன் விழி
தீண்டியதனால் வந்த ரணமே!

                                              ( மானே தேனே...)

நேசம் வைத்தது யாரோ!- என்
நெஞ்சைச் சுட்டது யாரோ!
மானம் போனது எதனாலே உன்
மதியை மயக்கிடும்  கண் அதனாலே ..

நான் ராமன் அல்ல ராவணன் என்று
சில ராட்சியம் சொல்கிறது -அதை
ராவும் பகலும் நினைக்கிற பொழுதில்
மனம் பூச்சியம் ஆகிறது!

                                                 
உறவோ பிரிவோ
உனை நான் வாழ்த்திட
ஒரு போதும் மறவேனே...
மனம் சருகாய்ப் போகும்
போன பின்னாலும்
தந்த சத்தியம் தவறேனே!

குயிலின் பாசை புரிகிறதா?- மனக்
குமுறல் எதுவெனத்  தெரிகிறதா?
உறவைக் காக்க மறந்தாலும் நல்
உணர்வைக் காத்துத் தந்து விடு .............

                                                            ( மானே தேனே....)  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/28/2013

காலை இளந் தென்றற் காற்றே


காலை இளந் தென்றற் காற்றே
கண் சிமிட்டும் நேரம் இதோ!
பூவும் இலையும் தலையை ஆட்டப்
புன்னகை வருகிறதே!

சோலை வண்ணம் என் எண்ணம்
கூடும் நேரம் இந்நேரம்
மாமன் நெஞ்சில் மஞ்சம் போடும்
தோழி நான் தானே!

                                              ( காலை இளந் )

தாயைப் போன்ற உள்ளத்தில்
தாவிக் குதிக்கும் கிள்ளை நான்
காலம் எல்லாம் நம் சொந்தம்
காண வேண்டும் ஊர்கோலம் ..

ஆசை உள்ள நெஞ்சுக்குள்
ஆலவட்டம் நான்  போட
மீசை துடிப்பதேன் மச்சானே! - நீ
பேசும் வார்த்தைகள் நான் தானே?

                                                       
கூவும் குயிலும் மயிலும் எங்கே
நாம் கூட்டுச் சேர்ந்த பொழுதினிலே
ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான்
அடடா சிரித்திடும் வெண்மேகமே!

ஊரைக் கூட்டித் தாலி கட்டி
உறவை வளர்த்த மச்சானே
நீ நாரைப் போல சேர்ந்திருந்தால்
எந்நாளும் இங்கே கொண்டாட்டம்தான் ......

                                                      (  காலை இளந்)


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/24/2013

கார்த்திகை 27 கண்களில் ஒளிதீபம் ஏற்றுங்கள்


மறவர் புகழ் பெருமை காக்து
மண்ணில் புதைந்த வீரர்களே!
உறவு எங்கள் உறவு நீங்கள்
உயிரில் கலந்த தீபங்களே!

ஒளியைத் தந்து விழியைத் திறந்து
ஒதுங்கி நின்று காத்திடும்
மனதின் எண்ணம் மலருவது திண்ணம்
மறுமுறை பூப்பாய் கார்த்திகைப் பூக்களே!

அழுத விழிகள் சிரிக்கும் காலம்
அருகில் வந்து சேர்ந்திடும்!
அமுத மொழியில் உரைத்த சத்தியம்
அகிலம் முழு(வது)ம் பரவிடும்!

விதியின் பாதை சதியை விலக்கி
விடுதலைக்கு வித்திடும்!- இந்த
மொழியின் வலிமை உணரும் தருணம்
உனது கானம் ஒலித்திடும்!

எளிமையான வாழ்க்கைச் சூழல்
எம் இனத்தின் பலத்தைக் காத்திடும்!
என்றும் இல்லா ஆனந்தத்தில்
மனங்களிங்கே  திங்கள் போல சிரித்திடும்!

பொங்குதமிழ்க் குலத்தின் மரபே!
மாவீரத் திலகங்களே!
சங்கெடுத்து முழங்குகின்றோம்
உனது சத்தியம்தான் வெல்லுமிங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/23/2013

அதர்மத்தின் துணைகொண்டு தர்மத்தை அழிப்பீரோ




அதர்மத்தின் உச்சியில் நின்று
ஆணவத்தினால் மதிகெட்டு
விட்டெறியும் வார்த்தை அம்புகளுக்கு
வானவில்லும் வீழ்ந்திடுமா சொல்?

மதிகெட்டவர்கள்
மனதில் உறுதியற்றவர்கள்
கொலைக் களத்தையே விரும்பும்
கொள்ளிவாய்ப்  பேய்கள்

நீதி  அறியாதவர்கள் பிறரது
நின்மதியை விரும்பாதவர்கள்
சாதிக்க நினைப்பவை யாவும்
சர்வ நாசமாகும்!

மோதிப்பார் உலகினிலே
மோகத்தில் தழைத்தவர்கள்
பாதிப்பேர் அழியக் கண்டு
பரிகசிக்கும்  நன் மனங்களும் இன்று!

நீதிக்கே தண்டணையா!
இதை நிலவுலகம் தாங்கிடுமா!
பாதிப்பு அறியா மனமே
உன் நினைப்பு நிறைவேறாதிங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/03/2013

வெற்றி வேலாயுதப் பெருமானே

வெற்றி வேலாயுதப் பெருமானே
வெற்றி கிட்டியதே உன்றன் அருளாலே
பற்றியதே பாசம் மலை போலே உயிர்
மெச்சிடுமே  கந்தன் உனைத்தானே .....

உற்ற துணை என வந்த பெருமானே
கொடும் சூரரை வதைத்த மயிலோனே
நற்றமிழைத் தந்த முருகா எம்மை
எந்நாளும் காத்திட இங்கு வருவாயே ....

முக்கனியில் சிறந்த கனியோனே உன்னை
முன் நிறுத்தி விரதம் இருந்தோமே
அற்புதங்கள் நிகழ்த்த வாருமையா
ஆறுபடை வீடு கொண்ட எம் பெருமானே ...

முக்தி தரும் ஞான மொழியோனே எங்கள்
முன் வினையை அகற்ற வருவாயே
பக்தி தரும் பார்வை உனதாகும்
பன்னிரு கரத்தான் நீயே  எமக்கு வரமாகும் ....

கந்தன் என வந்த எங்கள்
தண்டபாணித் தெய்வமே உன்றன்
கந்த சஷ்ட்டி கவசம் சொன்னால்
இன்பம் வந்து சேருமே ....

                             (  வெற்றி வேலாயுதப் பெருமானே )
                                                         



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/01/2013

தீப ஒளியது அசைந்தாட



தீப ஒளியது அசைந்தாடத்
தீமைகள் எல்லாம் பறந்தோடத்
தெய்வீக ஞானத்தில் உள்ளங்கள் மகிழ்ந்தாடவே
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே

பாவத்தின் பங்கதை நீ நீக்கிட உலகில்
பாசத்தை எந்நாளும் உருவாக்கிட
எங்கள் தேசத்தின் நன்மைக்கும் வழி காட்டிட
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே

கோரப் பல் விழிப் பார்வை விலகட்டுமே உலகில்
கோடாடி கோடி நன்மைகள் பெருகட்டுமே  ..........
தூரத்தில் நீயிருக்கும் போதினிலும் இங்கும்
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே ......

ஊரோடு கூடி வந்தோம் காப்பெடுத்து
உயிர் ஊட்டத்தை நீயளிக்க வேண்டும் என்று
போராடும் எங்களுக்குச் சக்தி தந்து
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே .....

பூவோடு மஞ்சளிங்கே நிலைத்திடவும்
புரியாத புதிர் எல்லாம் விலகிடவும் 
பேசாத வார்த்தைக்கும் அர்த்தம் தந்து
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே ...






தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/31/2013

தீப ஒளித் திருநாளில் மகிழ்ச்சி பொங்க ஒரு நல்வழி



எங்கோ ஒரு தெரு முனையில்
ஏதோ ஒரு தெய்வத்திற்குப்
பொங்க வைத்துப் படைப்பதெல்லாம் அன்று
ஏழைகள் வயிறு நிறைவதர்க்கே!

எங்கள் வீட்டுச் சுப காரியத்திலும்
ஏழைகள் வயிற்றைக் குளிர வைப்பீர்!
தங்கும் மங்களம் எந்நாளும்
தக தக தகவென இல் வாழ்வினிலே!

ஒளியை ஏற்றும் திருநாளில்
வெடியைப் போட்டு மகிழாதீர்!
விடியும் காலம் வேண்டும் எனில்
மடியும் உயிர்களுக்கு உணவளிப்பீர்!

கருணை பொங்கும் இதயத்தில்
கடவுள் தெரிவான் எந்நாளும்
உயிரைக்  காக்கும் செயலொன்றே
உன்னதமான செயலாகும்!

வருவாய் இருந்தால் ஏழைக்கும்
வாழ்வளிக்கத் துணிபவரைத்
தொழுவார் உலகில் தெய்வமெனத்
தொண்டில் சிறந்தது இது தானே ?

இனிப்பாய் உண்ட பலகாரம்
இதமாய்த் தொண்டையில் இறங்கையிலும்
நினைப்பாய் ஏழைகள் நிலைப்பாட்டை இந்த
நினைப்பே போதும் நல் வழி காட்டும்!
                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/27/2013

கற்பழிப்பு குற்றத்திலும் பெரும் குற்றம் எனக் கருத வேண்டும்




கொடியிடையில் மயங்கிக்
கொடுமை தனை இழைக்கும்
கொடியவரை அழித்திடவே
கொண்டு வாரும் புதுச் சட்டம்!

அடிமையல்ல பெண்ணினத்தின்
அடி வயிறு பத்தி எரிகிறது!
துணிவுடனே துப்பாக்கியைத்
தூக்கி நில்லும் இவ்விடத்தில்!

வெறிப் பிடித்த நாய்களென்று
கொன்று குவிக்கும் சட்டத்திற்கு
ஐந்தறிவும் ஒன்றுதான்
ஆறறிவும் ஒன்றுதான்!

வாய் பேசா நாய்களுக்கு
வகுத்த சட்டம் இப் பேய்களுக்கும்
வர வேண்டும் .இவ்வுலகினிலே என்று
வரும் வரைக்கும் கொடி பிடிப்போம்....

பெண்ணினத்தின் பெருமை சொல்லி
பெரிதும் தாளம் போடாமல்
கண்ணிமைக்கு நிகராக அவளைக்
காக்க வேண்டும் சட்டமிங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/26/2013

அழகு நிலவு அசையும் பொழுதில்



























அழகு நிலவு
அசையும் பொழுதில்
இயமன் வந்தானே!
அதன் ஒளியைப் பறித்து
விழியை எரித்து
மரணம் தந்தானே!

துயரம் நிறைந்த
வனத்தில் இருந்து
பெற்ற மனங்கள் என்னாகும்?
இதை நினைத்து நினைத்து
வடித்த கவிதை
கண்ணீர்  தடுக்கும்  வித்தாகும்!

எமக்குள் இருக்கும்
தவிப்பை எழுத
எழுத்தும் கல்லாகும்!
வாகன விபத்தைத் தடுத்து
நிறுத்தும் வரைக்கும் மனித
மனங்கள்  புண்ணாகும்

அடித்த அடியில்
சிதைந்த உடலை
அடைத்தார் பெட்டியிலே
அதை எடுத்து வந்து
கொடுக்கும் பொழுதில்
உடைந்தார் உறவுகளே!

படித்த படிப்பை 
மறந்து போதையில் 
பறந்து செல்லாதே!
உயிர்களைப் பறித்த  பாவம்
உனக்கும் தொடரும் 
இந்த நினைப்பைக் கொல்லாதே!

கனக்கும் இதயம்
உனக்கும்  சொன்ன
தவிப்பு  புரிகிறதா? -மனிதா
மனித மனத்தைப் பார்த்து
உன் குணத்தை மாற்று
எம் மனமே வலிக்குதடா .....

                                       ( அழகு நிலவு )


கொடிய வாகன விபத்தில் மரணத்தைத் தழுவிய 
என் மனத்தை உறைய வைத்த அந்த அழகிய பிஞ்சு மலருக்கு 
இந்தப் பாடல் சமர்ப்பணம் .கண்ணீரால் அஞ்சலிகள்
பல தந்தாலும் தவமிருந்து பெற்ற மகளை இழந்தவர்களின் 
தவிப்பு அடங்காது .வாகன சாரதிகளே வலிக்கும் இதயங்களின் 
வேதனையை நினைத்துப் பார்க்க மறவாதீர்கள் ......இன்று இவள் 
நாளை ?...தொடரும் மனித வேட்டைக்கு முற்றுப் புள்ளி இடுவோம் .
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/20/2013

பன்னிரு கரத்தான் திருவடியைப் பற்றிட இன்பம் பெருகிடுமே

பன்னிரு கரத்தான் திருவடியைப்
பற்றிட இன்பம் பெருகிடுமே
வற்றிய குளத்தில் தாமரை போல்
வாடிடும் நிலை தான் ஓடிடுமே ....

முன் வினைப் பயனது அறுந்திடவும்
முகம் அது மலர்ச்சி பெற்றிடவும்
கந்தனின் அருளைப் போற்றி நிற்கும்
கந்த சஷ்டி கவசத்தை ஓதிடுங்கள்.....

அல்லலைப் போக்கிடும்  அவன் கவசம்
அமுதினும் இனிய சொற் குடமாம்
நல்லதை நினைந்து எந்நாளும் இங்கே
நவின்றவர் வாழ்விற்கோர்  துன்பமில்லை..

அரக்கர்களை  அழித்துத் தேவர்களுக்கும்
அமைதியைக் கொடுத்த முருகனுக்கு
மனம் அது பாற் கடல் என்றுணர்ந்தால்
மகிழ்வுடன் விரதம் இருந்திடுங்கள் ....

நினைத்தது நடக்கும் அவனருளால்
நினைத்தவர் உள்ளம் மகிழ்வு பெற
இனித்திடும் செந்தமிழ்க் காவலனை
இன்னிசையாலே போற்றிடுங்கள் ............. 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/15/2013

மாங்கனிச் சாறே மனம் இனிக்குது உன்னாலே...

                                                     

மாங்கனிச் சாறே
மனம் இனிக்குது உன்னாலே
கொடுத்தவர் உள்ளம் அதுவே
கொடையில் சிறந்த வள்ளம் !!

பருகிட இன்பம் பெருகிடும் போது
பார்வையில் புதுவித சுகம் வருதே ...!!!!
இனியன கூறிப் பெருமிதத்தோடு
இனியுனை நானும் வெல்வேனே .......

தரிகிட தரிகிட தரிகிட தரிகிட என்
தாளம் இனிமேல் தப்பாது ....
இடைவெளி கிடைக்கும் பொழுதினில் எல்லாம்
இனி உன்றன் படைப்பைத் தொடர்வேனே .......

பெரியவர் கூறும் செய்தியைக் காண
பெருமித்தத்தோடு  வாருங்கள்
இறைவனைப் போற்றும் இனிய நற் கருத்தை
இத்தளம் சுமப்பதைக் காணுங்கள்

தெளிவுற ஞானம் பெற்றிடவேனும்
தேடி இங்கு வாருங்கள் 
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளின்
நல் ஆசியும் கிட்டிடும் பாருங்கள் ...!!!!
                                                         
http://gopu1949.blogspot.ch/2013/10/63.html
http://gopu1949.blogspot.ch/2013/10/58.html
http://gopu1949.blogspot.ch/2013_07_01_archive.html

சுவையான இம் மாங்கனிகளைச்   சுவைத்து  
மகிழ்ந்தவர்கள் இட்ட கருத்திற்குப் பரிசுப் 
பொருளும் உண்டுங்க .மாங்கனிகளைச் 
சுவைத்தவர்களுக்கு 
இந்த மாங்கனிச் சாறும் கிட்டும் :)))))))

                                                           
                                                          http://gopu1949.blogspot.ch/
                                                                       
                                                                           


மிக்க நன்றி ஐயா .சிறப்பான தங்களின் படைப்புகளை
அனைவரும் கண்டு மகிழ வாழ்த்துக்கள் .


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/28/2013

அன்பு நிறைந்த நெஞ்சங்களே வாழ்த்துச் சொல்ல வாருங்கள்



பூவொன்று மலர்ந்ததென்று ஒரு 
பூந் தோட்டமே சிரிக்குது இங்கே 
வாவென்று அழைத்து எம்மோடு 
வாழ்த்துச் சொல்லலாம் வாருங்கள் உறவுகளே !!


தங்கப் பாதம் தவண்டு வரத்  
தரணி எங்கும் பூப் பூக்கும் 
எங்கள் அரும்பு நலமாக 
எல்லா வளமும் பெற வேண்டும் !

மங்காப் புகழும் கீர்த்தியும் 
மரு மகளே உனக்கு அவள் அருள்வாள்! 
பொங்கும் புன்னகை எந்நாளும்
பொலியப் பெற்ற சரஸ்வதியே !

அங்கம் ரோஜா இதழே தான் இதை 
அன்பாய் அணைத்திட நாமுள்ளோம் 
எந்தன் மருமகள் உன் வரவால்
எங்கள் வீடே சிரிக்கிறது .......

வண்ணக் கனவு மலர்ந்திங்கே 
வசந்த வாசலைத் திறக்கிறது இனி 
எம் எண்ணம் எல்லாம் நிறைந்திருக்கும்
எங்கள் வீட்டு எழில் அரசியே  நீ வாழியவே........


                                                         
                                                       இனிப்பான இதயத்தால் 
                                  இனியன சொல்லி வாழ்த்துங்கள் உறவுகளே !!



என்னை "அத்தை" என்று அழைத்திட ஒரு 
செல்ல மருமகள் பிறந்திருக்கிறாள் 
அவளை வாழ்த்த வந்த அன்பு நெஞ்சங்களுக்கு 
என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் .......



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

அன்பால் என்னைக் கட்டிப் போட்டு பேரறிவால் நீயோ...



அன்பால் என்னைக் கட்டிப் போட்டு
பேரறிவால் நீயோ திட்டம் தீட்டு
வெண்பா எழுதி முடிப்பதற்குள்
உன்பால் என்னைச் சேர்த்து விடு ...

மண்ணும் பொன்னும்
மதியை மயக்கும்
உன்னை எண்ணும் பொழுதில்
உலகை மறக்கும் !!.........

தன்னந் தனிமையில் நின்றுகொண்டே
நான் தரையைப் பார்த்துப் பேசுகின்றேன்
எண்ணம் முழுதும் இறை நாமம் அதை
அதை எண்ணிக் களிக்குது என் சாமம் ...

விண்ணைச் சேரவும் பாதையில்லை
உன்னைக் காணவும் யோகமில்லை
என்னை ஏனோ சீண்டுகின்றாய்
எதை எதையோ எழுதச் சொல்லித் தூண்டுகின்றாய் !!

பொன்னில் வடித்த சிலை தானோ நீ
பேசாதிருந்தால் விடுவேனோ ......
அன்னப் பறவை போலுன்னை
அறியத் தந்த இறைவா சொல் !.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/27/2013

happy birthday google-இனிதே வாழிய பல்லாண்டு


எண்ணற்ற கோடி மக்களின்
எண்ணங்களைச் சுமந்து நிற்கும்
வண்ணத் திரையே நீ
வாழிய வாழிய பல்லாண்டு !....

பல்சுவை விருந்ததனைப்
பகிர்ந்தளிக்கும் அனைவருக்கும்
உன் முகவரியே வரமாக
உருவெடுத்து வாழிய நீ ...........

செங்கதிரோன் போலிருந்து
செம்மையுறப் பணி புரிந்து
உன் திறனால் வெற்றி பெற்று
உலகெங்கும் வாழிய நீ ........

கூகுள் என்ற பெயர் கேட்டால்
குழந்தைகளும் மகிழ்ந்து குதிக்கும்
கணனியுலக நிலவே உனைக்கு மனம்
கசிந்துருகும் நல் வாழ்த்துக்கள் இங்கே ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.