3/28/2013

தேர்ந்தெடுக்கும் நீங்கள் தான் தெளிவு பெற வேண்டும் !



குப்பைக்குள்தான் கிடக்கிறது
குண்டு மணிகள் இவைகளைக்
கோத்தெடுத்து வைப்பதாரு
கோபுரத்திலே !

அப்பப்பா பொழுதெல்லாம் ஆனந்தத்திலே
அவரவர்க்கு வேண்டியது கிடைத்தனாலே
தப்பாத்தான் போகிறது அரசியலும் இங்கே
தவிக்கின்ற மக்களுக்கு நீதி சொல்வதாரு!

ஒப்பற்ற விலை உயர்வு ஏழை மக்களை
ஒடுக்கித்தான் வைக்கிறது எந்நாளும் இங்கே
கற்கின்ற கல்விக்கேனும் காமராசர் போல்
கை கொடுக்கும் தெய்வம் இங்கு யாரும் இல்லையா!..

பிற்போக்கு வாதிகளாய் நாமிருப்பதால்
பின்தங்கிப் போகாதோ நன் நாட்டின் வளம்!
நற் போக்கு நமக்குள்ளே வேண்டும் என்றால்
நல்லவர்களே  அரசியலில்  இருந்தாக வேண்டும்

கற்போரை ஊக்குவிக்கக் கை கொடுத்தாலே
காலத்தின் கட்டளைகள் மாறும் தன்னாலே
நற் போரிதை நாம் தொடக்கி முடிக்கும் போதிலே
நன்மையின்றி வேறில்லை என்றுணர்வாயே!

தன் மான உணர்வு உள்ளது ஏழைகளிடத்திலே
தயங்காமல் அவர்கள் பெயரை முன் மொழியுங்கள்
எம் மானம் காப்பதற்கு உரிய தலைமைக்கு
எவன் மனிதன் என்றுணர்ந்து வாக்களியுங்கள்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/26/2013

உள்ளம் அது ஒளி வெள்ளம் என...


உள்ளம் அது
ஒளி வெள்ளம் என
துள்ளும் நிலை
அது போதும் இங்கே
இது தான் வாழ்க்கை
அன்பே கேளு!

சொல்லித் தரவா
பள்ளிப் பாடம்?
அதில் இல்லை இது போல்
இன்பம் ஏதுவும்!

முத்தம்  மழையாகும்
இங்கு உயிர் மூச்சில்
சுகம் சேர்க்கும்
சித்தம் தடு மாறாமல்
இன்பத் தேனை
அது வார்க்கும்

அன்பால் பொங்கும்
இன்பம் நூறு அதை
ஏற்றுக் கொண்டால்
துன்பம் ஏது!
உன்னில் எனைக்  காண
அட என்னில் உனைக்  காண
வண்ணக் கவி பாடும்
என் எண்ணம் உனதாகும்!

கண்ணே கதை கேளு
கனியாத மனம் ஏது?
விண்ணே குடையாகும்
ஆனந்த விழிநீர் மழையாகும்

பொன்னின் நிற மானே!
அதைச் சொன்னால் புரியாதே!
அள்ளிக் கொள்ள வா ...
என்  அன்பைப் பொழிவேனே ....

                                        (  உள்ளம் அது ஒளி.....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/21/2013

தமிழனுக்கு தேவை இங்கு தமிழீழம் மட்டும் தான் .



கொன்று குவித்த
பிண வாடை நடிவினிலும்
நின்று சிரிக்குது தனக்கான
சமரசத்தை ஏந்திய வண்ணம் அநீதி!

பச்சைக் கம்பளம் விரித்தது போல்
இயற்க்கை எட்டுத் திக்கிலும்
கொட்டி வைத்த பசுமை இன்றும்
தமிழனின் இரத்த வெள்ளத்தில் மிதக்கிறதே!

கண்கள் இருந்துமா இக்
காட்சிகள் புரியவில்லை!
சுதந்திரப் பறவைகளும் இங்குதான்
சுயமாகப் பறக்கவில்லை!

கை கட்டி வாய் பொத்தி
உயிர்ப் பிச்சை போதும் என்று சில
உணர்வுகளைக் கொன்ற தமிழனிடம் அல்லவா
வாய்ப்பாடும்  கையளிக்கப் படுகிறது!

சமரசப் பேச்சு என்பதே சிறு துளியும்
சமரசம் அற்று இருக்கையில்
நீதிக்கு இங்கு என்ன  வேலை
நீர் மேல் எழுத்துப்  போல்!

கருவறை கிழித்த கைகளாலும்  தமிழனை
அழித்து ஒழித்த விழிகளாலும்  இன்னும்
அடங்கி ஒடுங்கிப் போவதற்க்காகவா  எம்
ஆருயிர்கள் மண்ணினில் புதைந்தார்கள்!

சொகுசு வாகனக் காரர்கள் சும்மா
சுத்தித் திரிந்து பார்த்த காட்சிகள்
உண்மை இல்லை என்று தெரிந்த பின்னும்
நீதியைக் காக்க இன்னும் என்ன தடை!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/19/2013

கருணைக் கடலே கண் திறவாயோ...

அசல்  இங்கே
நகல்  அங்கே
நகலை  நம்பும் மக்களுக்கு
அசலை  நம்ப வைப்பதாரு!....

பகலென்ன இரவும் என்ன
படுத்துறங்கும் வேளையிலும்
இறைவா உன் காலடிதான்
எனக்குள்ளே தெரிகிறது !.....

இது நீதி என்றுரைக்க
எழுந்தருள நீ மறந்தால்
உ(ன்)னை நம்பும் பக்தர்க்கு
உயிர் மூச்சு நின்றுவிடும்

பரிகாரம் ஏதும் இல்லை
பரந்தாமா உன் அருளே எல்லை
விழி நீரை நெய்யாக்கி
விடை தேடி அலைகின்றோம்...

விதி வரைந்த கைகளினால்
விடை எழுதிச் சென்று விடு
மதி மயங்கி நிற்போர்க்கும் 
மன அமைதி தந்து விடு

ஓர் உயிரை ஈருடலில்
ஒருங்கிணைக்க முடியாது
நீ எழுதும் தீர்ப்பினில் தான் இனி
நீதி என்றும் நிலைத்திருக்கும் !...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/15/2013

செய்வன திருந்தச் செய் அதையே துணிந்தும் செய்!



உப்புக் கல்லை வைரம் என்று
ஒப்புக் கொள்ளச் சொல்வார்!- அதையே
ஒப்புக்கொள்ள மறுப்போரிடத்தில்
மேலும் ஒழுக்கக்கேடாய் நடப்பார்!

சிலர் கற்றுக் கொண்ட அறிவை மறந்து
கயமை உணர்வுடன் இருப்பார்!- இந்தச்
சுற்றம் சூழல் பெரிதென நினைத்தால்
வரும் சுமைகளை இங்கே யார் சுமப்பார்!

பட்டிக் காட்டு மனிதர்கள் இவர்களைப்
பகைத்தால் துயரம் என்றே  நீயும்
கட்டுக்கடங்கிப்  போவாயானால் பின்னர்
வாழ்க்கை என்றும்  கசக்கும்!

கற்றுக் கொள்வாய்  வாழ்வில் இனியும்
எம்மைக் காக்கும் சிலரே  போதும் என்று!
விட்டுத் தள்ளு ஏனையவை எல்லாம் வீண்
விரக்தியை ஊட்டும் பதர்கள் என்று!

எதிலும் குற்றங் கண்டே  பிழைப்பவரிடத்தில்
கூர்மையாக நின்றிடுவீர்!
பயபக்தியோடும் பாசத்தோடும் பழகும்
உறவுகளை வென்றிடுவீர்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/11/2013

உன்னோடு தான் உறவாடினேன்


உன்னோடு தான்
உறவாடினேன்
உனக்காகத்தான்
உயிர்  வாழ்கிறேன்
மண்ணோடு கலந்தாலும்
மறையாத நேசம்
என் வாழ்வில் ஏன் தந்தாய்
இது போல் ஓர் ஏக்கம்

கண்ணா நான் அழைக்கின்றேன்
கவி பாடிக் களைக்கின்றேன்
சும்மா ஏன் வெறுக்கின்றாய்
சோகத்தில் குளிக்கின்றாய்

தள்ளாடித் தள்ளாடி
மனம் ஏங்குதே!
தலையணையோடு கதை பேசி
விழி வாடுதே!
உன்னோடு நான் சேர
வழியில்லையா?
உயிர் அற்ற பிணம்
வாழ முடியாதைடா

என் சீவன்  உன் சீவன்  என்றான பின்
இதயத்தின்  ஓசைகள் வேறாகுமா?
நீ கொண்டாடும் இடம் வேறு என்றானதால்
அன்றாடம் என் வாழ்க்கை திண்டாட்டத்தில்

கண்ணாடிப் பொருள்மீது கல் பட்டாலும்
கல் மீது கண்ணாடி தான் பட்டாலும்
கண்ணாடி தான் இங்கு உடையுமடா
உன்னாலென் உயிர் போகக் கூடாதடா ....

                                     (  உன்னோடு தான் )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/07/2013

வாருங்கள் உறவுகளே ஒன்று சேருங்கள்!...

ஈழத் திரு நாட்டில்
எம் தமிழர் தாய் நாட்டில்
மானம் காக்கப் பிறந்த
மறத் தமிழனடா உன் அப்பன்!...

ஏரைப் பிடித்த கரமும்
எடுத்துரைக்கும்  சுதந்திரத்தின்
வேரை ஊன்றியவன்
வெற்றிப் பாதைகளில்
சாதனைச் சுவடுகள் பதித்தவன்

அன்னை திரு நாட்டின்
அடிமை விலங்குடைக்கத்
தன்னைத் தந்து தாயாக நின்றவன்
உன்னை மட்டும் நினைத்திருந்தால்
உலகில் தமிழன் என்றோ தோத்திருப்பான் :(((
உனக்கும் வாழ்வு வந்திருக்கும்!......

பொன்னில் வடித்த சிலை போல
பரந்த மார்பில் குண்டேற
என்ன துடி துடித்தாயோ
இரக்கம் அற்ற அரக்கர்கள் முன்னால்!...:((((

வண்டு காதில் துளைத்தாலே
வருந்தும் மழலை உன் மார்பினிலே பல
குண்டுகள்  துளைக்கும் அளவுக்கு
கொடுமை என்ன நீ செய்தாய்
இதை இன்று கேட்க்க நாம் தவறினால்
ஈனத் தமிழன் என்றாவோம் !.........
                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

இப்போது சொல் உன் வாழ்த்துரைகளை !

நிலவென்று சொல்லாதே
இருள் சூழ்ந்த வாழ்விற்குள்
இன்னமும் ஒளியற்றுக் கிடக்கும்
பெண்ணினம் தான் ஏராளம் ஏராளம்!

மலர் என்று சொல்லாதே
மணம் வீசி நின்றாலும்
மதியாதோர் கால்களுக்குள்
மிதிபட்டுப் போகும் பெண்ணினம் தான்
ஏராளம்! ஏராளம்!

என் உயிர் என்று சொல்லாதே
உரிமையைக் கொடுத்து விட்டு
இன்னமும் உயிரற்ற பிணமாக
அலையும் பெண்ணினம்தான் ஏராளம் ஏராளம்!

மான் என்று சொல்லாதே அவள்
மயக்கத்தில் இருக்கும் போதே
வீணாக்கப் பட்டு வீசி எறியப்பட்ட
பெண்ணினம்தான் ஏராளம் ஏராளம்!

மயில் என்று சொல்லாதே
குயில் என்று சொல்லாதே
அடக்குமுறைக்குள் இன்னமும்
அடங்கிக் கிடக்கும் பெண்ணினம்தான்
ஏராளம்..ஏராளம்!

விழியிரண்டும் கெண்டை மீனா!
நீ விரட்டி அடிக்கும் போதெல்லாம்
கடல் நீரைக் கூட கடன் கேட்டாளே!
எதற்கு இத்தனை உவமைகள்!

பெண்ணைப் பெண்ணாகப் பார்ப்போம்!
பெண்ணை பெண்ணாகவே  மதிப்போம்!
பெண்ணுக்கென்றே உள்ள உரிமைகளைப்
பெண்ணிடமே விட்டு விடுவோம்!

                                                                அம்பாளடியாள் 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/04/2013

வெக்கித் தவித்தேன் வேதனை தீரவில்லை



வெக்கித் தவித்தேன்
வேதனை தீரவில்லை
நான் வெந்து மடிந்தேன்
உன் ஞாபகம் போகவில்லை
கட்டழகு கட்டிக் கரும்போ  உன்
கண்களிலே தவழும் நிலவோ!
முத்தமிட்ட கன்னங்களில்
முத்து முத்தாய் நீர்த்துளிகள்
சித்தரிக்க வார்த்தை இன்றி
சிந்தனைகள் வாடுதடா!

                          (வெக்கித் தவித்தேன் )

பள்ளியறைப் பாடம் சொல்லி
என்னுயிரில் நீ கலந்தாய்
தள்ளி வைத்துத் தாளம் போட
இன்னும் என்ன வேண்டுமடா?
கல்லில் முள்ளில் தூக்கம் என்ன .
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை
என்றன்  உயிர் வேகுதடா

பெண்ணின் துயர் கேட்பதாரு
பேச்சு நின்று போச்சுதடா!
உள்ளத்திலே உள்ள சோகம்
ஊமை நெஞ்சை கொல்லுதடா!
பாடல் தந்த தலைவனுக்கு
நான் பாடும் பாடல் கேட்கிறதா...
வீறாப்பு ஏன் உனக்கு இன்னும்
வேண்டாமே தப்புக் கணக்கு .......

                             (வெக்கித் தவித்தேன் )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/02/2013

பூங்காற்றே பூங்காற்றே இந்தப் பூவை இனியும் தீண்டாதே



பூங்காற்றே பூங்காற்றே
இந்தப் பூவை இனியும் தீண்டாதே
ஏங்காத ஏக்கம் இல்லை
என் வாழ்வில் தூக்கம் இல்லை

ஊமத்தம் பூவின் சொந்தம்
உள்ளூரத் தந்த துன்பம்
நீ வந்து தீண்டும் போதும்
என் நெஞ்சைக் கொல்லும் கொல்லும்

ஆராரோ ஆரிரரோ
நான் பாடக் காத்திருந்தேன்
யார் யாரோ சொந்தம் என்று
என் வாழ்வைக் கொன்றதாரு!

வானத்தைப் பூமி தொடுமா?
வடக்கைத்தான் தெற்கும் தொடுமா?
காலத்தின் கேள்வி இதற்க்கு
கண்ணீரே பதிலானதே ..

மானத்தில் சிறந்த மங்கை
இவள் மனதுக்குள் ஓடும் கங்கை
இனிச் சேராத இடத்தைச் சேர்ந்து
செறாகிப் போனால் தகுமா!


வாழத்தான் வாழ்க்கை என்றாய்
வடிவாகப் பேசிச் சென்றாய்
நான் உந்தன் சொந்தம் என்று
சொன்ன நாவும்தான் போனதெங்கே!


                   ( பூங்காற்றே பூங்காற்றே)
                            
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.