9/16/2011

ஆண்டொண்று செண்றதடா.....!!!

மின்னலாய்த் திரிந்தவனே ஓர் 
மெழுகுபோல் உருகியதென்ன ....!!!
விண்ணும் மண்ணும் அதிர உன் 
உறவுகள் அழுத குரல் கேட்டாயோ  ....

கண்ணை மூடித் தூங்குவதற்குக் 
காலம் இதுவென யாருரைத்தார்!..... 
வேலும் மயிலும் உடையவனோ ...
உனற்கு மிகவும் வேண்டியவனோ !.....

ஊரைத் தேடி உறவு சேர்த்தாய்
அந்த ஊரே உன்னைத் தேடி வந்த வேளை
நீ யாரைத் தேடிப் பறந்து சென்றாய் ......!!!

கல்யாண மாலை சூட்டிக்
காளை உன்னை அலங்கரித்து 
ஊரெல்லாம் பாட்டிசைக்க 
உறவெல்லாம் வாழ்த்துரைக்க 

ஊர்வலம் நீ வருவாய் என்று 
உள்ளத்தில்க் கனவு மலர 
மணக்கோலம் துறந்து நீயும் 
பிணக்கோலம் பூண்டதேனோ...!!!

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து 
சுற்றம் வாழ்த்த உனக்கொரு 
துணையொன்று வரும் முன்னே 
சுன்னம் இடித்து இங்கே சொர்க்கத்துக்கு 
வழியனுப்ப என்ன அவசரமோ 
இந்த சின்ன வயதினிலே.................!!!

முத்தான புன் சிரிப்பால் எங்கள் 
முழு மனதையும் கவர்ந்தவனே 
நித்தமும் உன் நினைப்பில் வாடுகின்றோம் 
நீ மீண்டும் வரவேண்டும் என்று 

ஆழ்கடலில் சங்கொலிபோல் 
அடிமனதில் வேதனையுடன் 
துடி துடிக்கக் காத்திருக்கும் 
உன் உறவுகளின் வேதனை தீர 

ஆண்டொன்று சென்றதென்று 
அயர்ந்து நீயும் எழுந்து எம் முன் 
மீண்டும் வந்து பிறந்துவிடு 
எம் மீளாத் துயரைத் தீர்த்துவிடு.....

கடந்த ஓராண்டிற்கு முன் இருபத்தைந்து வயதில் 
ஓர் சாலை விபத்தில் உயிர் நீத்த என் உடன்பிறவா 
அருமைச் சகோதரன்(முருக பக்தன்)  குமரேசன் 
நிர்மலனிற்கு இந்த ஓராண்டு நினைவஞ்சலியினைச் 
சமர்ப்பணம் செய்கின்றேன்..ஓம் சாந்தி சாந்தி சாந்தி .... 
             
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/13/2011

அச்சச்சோ மனசுக்குள்ள ........

அச்சச்சோ மனசுக்குள்ள 
ஆயிரம் கவிதைகள் வந்தாச்சு .......
அம்மம்மா நான் எழுதுற எழுத்தைப் 
பாக்குற கூட்டம் அலைமொதாதோ ........
                                 (அச்சச்சோ மனசுக்குள்ள )
வச்சுக்கோ வச்சுக்கோ ......
என் நினைப்பா வச்சுக்கோ .....
தச்சுக்கோ தச்சுக்கோ ..
உன் மனசில வச்சுத் தச்சுக்கோ ....


என் பாட்டால உலகத்த நான் 
பாழடிக்க மாட்டேனே .............
எந்தப் பாட்டுக்குள்ளும் நடக்குற நடப்ப 
எழுதாம விட மாட்டேனே .......
                                 (அச்சச்சோ மனசுக்குள்ள )
அடி டிங்கி நோனா 
டிங்கி நோனா 
டிங்கி நோனா 
என் செந்தமிழைப் 
பளிச்சவங்க நொந்தாங்களாம்!...... 
தமிழுக்குத்  தலைவணங்கு 
தலைவனுக்கு நன்றி சொல்லு
என் தாயாரே எந்தன் நெஞ்சில் 
உந்தன் விம்பம் என்றும் தங்கும்...
                                (அச்சச்சோ மனசுக்குள்ள ) 
நான் தமிழோடு விளையாடத்தான் 
இத் தரணியிலே வந்தேனாம் .............
அந்தத் தாய்ப்பாலால் வந்த ரெத்தம் 
உறையும்வரைக்கும் நான் 
எழுதாமல் விடமாட்டேன் ........
                       (அச்சச்சோ மனசுக்குள்ள ) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/12/2011

மாமா மாமா..என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா .......



மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்குக் கூச்சமா ?

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா ?

மைனஸ் ஓட்டுப் போடுற மாமா
மனசக் கொஞ்சம் பார்த்துக்கோ ஆமா 
மைனஸ் ஓட்டுப் போடுற மாமா
மனசக் கொஞ்சம் பார்த்துக்கோ  ஆமா 

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்குக் கூச்சமா ?
 மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்குக் கூச்சமா ?
                                                         
ராத்திரிப் பொழுதில ராவா அடிக்கிற 
மாமா உனக்கிது புரியாது 
ராத்திரிப் பொழுதில ராவா அடிக்கிற 
மாமா உனக்கிது புரியாது 

காத்திருந்து  காத்திருந்து
கண்கள் ரெண்டும் பூத்திருந்து 
செத்துப்போன மனசுக்குள்ள 
சேந்த கதைய சொன்னா 
தப்பா ?தப்பா? தப்பா?.....

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா ?
மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா ?

புத்திசாலி மாமா நீதான் 
புரிஞ்சுக்காம போயிற்ற 
குத்தம் சொன்ன மாமா உனக்கு 
அந்தப் பாட்டின் 
அர்த்தம் சொல்லத் தெரியுமா ?

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்குக் கூச்சமா ?

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா?

வலைத்தளம் என்பது உன் வீடோ?
எங்கள் வார்த்தைச் சுதந்திரம் 
அதைப் பறிப்பதற்கு?
கலைக்கு ஏது ஈடு இணை 
அதைக் கத்துக்கொண்டு வா மாமா 
அட கலைக்கு ஏது ஈடு இணை
அதைக் கத்துக்கொண்டு  வா மாமா
                                              (மாமா மாமா...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/08/2011

கடல்போல அன்பு ......


கடல்போல அன்பு 
கசிந்தோடும் நெஞ்சில் 
தினம்தோறும் துன்பம் 
அது ஏனோ  ஏனோ!
புரியாத கேள்வி 
புதிரனா வாழ்க்கை 
இதுதானா எனக்கிங்கு 
நீ தந்தது !

கிழக்கும் மேற்கும் இணையாது !
என் கேள்விக்குப் பதிலும் கிடையாது !
உலக வாழ்க்கை வெறுத்து நானும் 
உயர உயரப் பறக்கின்றேன் !

புரியவில்லை எனக்கு 
எதுவும் புரியவில்லை
தெரியவில்லை எனக்கு
எதுவும் தெரியவில்லை
                  
வழியும் இல்லை எனக்கு
இங்கு வாழ மனமும் இல்லை
வருந்துகின்றேன் நானே 
 இறைவா வா ......
                   
கருணை இல்லை 
இங்கு உனக்கென்பேன்
கண்களில்லை அதுவும் 
எனக்கென்பேன்
நீ தொடுத்த கதையை முடித்துவிடு 
என் தோல்விக்குப் பரிசைக் கொடுத்துவிடு 

அடுத்த பிறவி தேவையில்லை 
இதற்கும் மேல் ஒரு துன்பமில்லை 
உன் மனக்கணக்கு முடிந்ததிங்கே 
விடியாத பாதைகள் தொடர்வதெங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/05/2011

இவள்தான் தமிழ்ப் பெண்ணோ ......!!!

ஒரு கேள்வியும் இல்லைப் 
பதிலும் இல்லை இங்கே 
நம் நட்பை அவளேன் 
முறித்துச் சென்றாள்......!!!

இனியொரு தடவை அவள் 
எனக்கினி வேண்டாம் என் 
இதயம் கல்லாய் ஆனபின்னால்
 இதையே பலமுறை நினைத்தேன் 
அவளை மறந்திடத் துடித்தேன் 
பாவி அவள் நினைப்போ மறையவில்லை !...

கருகிய இதயம் காற்றினில் மிதந்து 
அவள் கண்களைத் திறக்க மாட்டாதோ ...!!!
தெருவினில் நின்று ஏங்குகின்றேன் 
தினமும்  அவளைக்காண வாடுகின்றேன் 

எனக்கென்ன என்று வாழ்ந்திடும் பெண்ணே 
என் இதயத்தை இன்றே திருப்பிக்கொடு 
உன் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை நான் 
சிந்திடும் கண்ணீரும் உனக்குத் தெரியவில்லை... 

பருவம் நிறைந்த பெண்ணே நீ என்
பக்கம் வந்தால்த் தவறென்றோ 
இதுவரைகாலமும் பழகிய நட்பை 
இத்துடன் முடிக்கப் பார்க்கின்றாய் ....!!!

இதனால் வென்றதுன் பெண்மை 
தோத்தது நம் நட்பு 
என்றதன்  கவலை இல்லாமல் 
புன்னகைப் பூக்களை வீசுகின்றாயே 
உன்னை என்னால் 
புரிந்துகொள்ளவே  முடியவில்லை ..........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.