10/31/2013

தீப ஒளித் திருநாளில் மகிழ்ச்சி பொங்க ஒரு நல்வழி



எங்கோ ஒரு தெரு முனையில்
ஏதோ ஒரு தெய்வத்திற்குப்
பொங்க வைத்துப் படைப்பதெல்லாம் அன்று
ஏழைகள் வயிறு நிறைவதர்க்கே!

எங்கள் வீட்டுச் சுப காரியத்திலும்
ஏழைகள் வயிற்றைக் குளிர வைப்பீர்!
தங்கும் மங்களம் எந்நாளும்
தக தக தகவென இல் வாழ்வினிலே!

ஒளியை ஏற்றும் திருநாளில்
வெடியைப் போட்டு மகிழாதீர்!
விடியும் காலம் வேண்டும் எனில்
மடியும் உயிர்களுக்கு உணவளிப்பீர்!

கருணை பொங்கும் இதயத்தில்
கடவுள் தெரிவான் எந்நாளும்
உயிரைக்  காக்கும் செயலொன்றே
உன்னதமான செயலாகும்!

வருவாய் இருந்தால் ஏழைக்கும்
வாழ்வளிக்கத் துணிபவரைத்
தொழுவார் உலகில் தெய்வமெனத்
தொண்டில் சிறந்தது இது தானே ?

இனிப்பாய் உண்ட பலகாரம்
இதமாய்த் தொண்டையில் இறங்கையிலும்
நினைப்பாய் ஏழைகள் நிலைப்பாட்டை இந்த
நினைப்பே போதும் நல் வழி காட்டும்!
                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/27/2013

கற்பழிப்பு குற்றத்திலும் பெரும் குற்றம் எனக் கருத வேண்டும்




கொடியிடையில் மயங்கிக்
கொடுமை தனை இழைக்கும்
கொடியவரை அழித்திடவே
கொண்டு வாரும் புதுச் சட்டம்!

அடிமையல்ல பெண்ணினத்தின்
அடி வயிறு பத்தி எரிகிறது!
துணிவுடனே துப்பாக்கியைத்
தூக்கி நில்லும் இவ்விடத்தில்!

வெறிப் பிடித்த நாய்களென்று
கொன்று குவிக்கும் சட்டத்திற்கு
ஐந்தறிவும் ஒன்றுதான்
ஆறறிவும் ஒன்றுதான்!

வாய் பேசா நாய்களுக்கு
வகுத்த சட்டம் இப் பேய்களுக்கும்
வர வேண்டும் .இவ்வுலகினிலே என்று
வரும் வரைக்கும் கொடி பிடிப்போம்....

பெண்ணினத்தின் பெருமை சொல்லி
பெரிதும் தாளம் போடாமல்
கண்ணிமைக்கு நிகராக அவளைக்
காக்க வேண்டும் சட்டமிங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/26/2013

அழகு நிலவு அசையும் பொழுதில்



























அழகு நிலவு
அசையும் பொழுதில்
இயமன் வந்தானே!
அதன் ஒளியைப் பறித்து
விழியை எரித்து
மரணம் தந்தானே!

துயரம் நிறைந்த
வனத்தில் இருந்து
பெற்ற மனங்கள் என்னாகும்?
இதை நினைத்து நினைத்து
வடித்த கவிதை
கண்ணீர்  தடுக்கும்  வித்தாகும்!

எமக்குள் இருக்கும்
தவிப்பை எழுத
எழுத்தும் கல்லாகும்!
வாகன விபத்தைத் தடுத்து
நிறுத்தும் வரைக்கும் மனித
மனங்கள்  புண்ணாகும்

அடித்த அடியில்
சிதைந்த உடலை
அடைத்தார் பெட்டியிலே
அதை எடுத்து வந்து
கொடுக்கும் பொழுதில்
உடைந்தார் உறவுகளே!

படித்த படிப்பை 
மறந்து போதையில் 
பறந்து செல்லாதே!
உயிர்களைப் பறித்த  பாவம்
உனக்கும் தொடரும் 
இந்த நினைப்பைக் கொல்லாதே!

கனக்கும் இதயம்
உனக்கும்  சொன்ன
தவிப்பு  புரிகிறதா? -மனிதா
மனித மனத்தைப் பார்த்து
உன் குணத்தை மாற்று
எம் மனமே வலிக்குதடா .....

                                       ( அழகு நிலவு )


கொடிய வாகன விபத்தில் மரணத்தைத் தழுவிய 
என் மனத்தை உறைய வைத்த அந்த அழகிய பிஞ்சு மலருக்கு 
இந்தப் பாடல் சமர்ப்பணம் .கண்ணீரால் அஞ்சலிகள்
பல தந்தாலும் தவமிருந்து பெற்ற மகளை இழந்தவர்களின் 
தவிப்பு அடங்காது .வாகன சாரதிகளே வலிக்கும் இதயங்களின் 
வேதனையை நினைத்துப் பார்க்க மறவாதீர்கள் ......இன்று இவள் 
நாளை ?...தொடரும் மனித வேட்டைக்கு முற்றுப் புள்ளி இடுவோம் .
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/20/2013

பன்னிரு கரத்தான் திருவடியைப் பற்றிட இன்பம் பெருகிடுமே

பன்னிரு கரத்தான் திருவடியைப்
பற்றிட இன்பம் பெருகிடுமே
வற்றிய குளத்தில் தாமரை போல்
வாடிடும் நிலை தான் ஓடிடுமே ....

முன் வினைப் பயனது அறுந்திடவும்
முகம் அது மலர்ச்சி பெற்றிடவும்
கந்தனின் அருளைப் போற்றி நிற்கும்
கந்த சஷ்டி கவசத்தை ஓதிடுங்கள்.....

அல்லலைப் போக்கிடும்  அவன் கவசம்
அமுதினும் இனிய சொற் குடமாம்
நல்லதை நினைந்து எந்நாளும் இங்கே
நவின்றவர் வாழ்விற்கோர்  துன்பமில்லை..

அரக்கர்களை  அழித்துத் தேவர்களுக்கும்
அமைதியைக் கொடுத்த முருகனுக்கு
மனம் அது பாற் கடல் என்றுணர்ந்தால்
மகிழ்வுடன் விரதம் இருந்திடுங்கள் ....

நினைத்தது நடக்கும் அவனருளால்
நினைத்தவர் உள்ளம் மகிழ்வு பெற
இனித்திடும் செந்தமிழ்க் காவலனை
இன்னிசையாலே போற்றிடுங்கள் ............. 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/15/2013

மாங்கனிச் சாறே மனம் இனிக்குது உன்னாலே...

                                                     

மாங்கனிச் சாறே
மனம் இனிக்குது உன்னாலே
கொடுத்தவர் உள்ளம் அதுவே
கொடையில் சிறந்த வள்ளம் !!

பருகிட இன்பம் பெருகிடும் போது
பார்வையில் புதுவித சுகம் வருதே ...!!!!
இனியன கூறிப் பெருமிதத்தோடு
இனியுனை நானும் வெல்வேனே .......

தரிகிட தரிகிட தரிகிட தரிகிட என்
தாளம் இனிமேல் தப்பாது ....
இடைவெளி கிடைக்கும் பொழுதினில் எல்லாம்
இனி உன்றன் படைப்பைத் தொடர்வேனே .......

பெரியவர் கூறும் செய்தியைக் காண
பெருமித்தத்தோடு  வாருங்கள்
இறைவனைப் போற்றும் இனிய நற் கருத்தை
இத்தளம் சுமப்பதைக் காணுங்கள்

தெளிவுற ஞானம் பெற்றிடவேனும்
தேடி இங்கு வாருங்கள் 
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளின்
நல் ஆசியும் கிட்டிடும் பாருங்கள் ...!!!!
                                                         
http://gopu1949.blogspot.ch/2013/10/63.html
http://gopu1949.blogspot.ch/2013/10/58.html
http://gopu1949.blogspot.ch/2013_07_01_archive.html

சுவையான இம் மாங்கனிகளைச்   சுவைத்து  
மகிழ்ந்தவர்கள் இட்ட கருத்திற்குப் பரிசுப் 
பொருளும் உண்டுங்க .மாங்கனிகளைச் 
சுவைத்தவர்களுக்கு 
இந்த மாங்கனிச் சாறும் கிட்டும் :)))))))

                                                           
                                                          http://gopu1949.blogspot.ch/
                                                                       
                                                                           


மிக்க நன்றி ஐயா .சிறப்பான தங்களின் படைப்புகளை
அனைவரும் கண்டு மகிழ வாழ்த்துக்கள் .


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.