8/28/2011

நான் படிக்கப் போகணும்............

பழைய நினைப்புத்தான் மாமா 
எனக்கு பழைய நினைப்புத்தான்
பாட்டி சொன்ன கதையைக்கூட 
நான் இன்னும் மறக்கவே இல்ல!....

வலைய விரிக்குற நீயோ எனக்கு
வலைய விரிக்குற.....................!!!!¨
வயசுப்பெண்ணா நினைச்சுக்கிட்டு 
றொம்பத்தான் வலைய விரிக்குற!.....

சின்னவயசில திருமணம்தான் 
செஞ்சுக்கலாமா மாமா செஞ்சுக்கலாமா..
அப்புறம் சிக்கல்வந்து பிரிஞ்சுப்புட்டா 
மனசு தாங்குமா மாமா மனசு தாங்குமா.......

கல்விக்கூடம் செல்லும் வயசில் 
கர்ப்பம்தாங்கினால் நானும் 
களத்துமேட்டில் உன்னுடன்தான் 
காலம் தள்ளனும் மாமா காலம்தள்ளணும்

என்ன இந்த உலகத்திலே இருக்குதென்றேதான்
ஏறெடுத்தும்  பார்க்காத வாழ்க்கை வாழணும்
இதனால் நம் சந்ததிகள் அத்தனையும் சங்கடப்படும் 
இந்த சனத்தொகையைப் பெருக்கிக்கிடா போதுமா மாமா..

பாரதியின் புதுமைப் பெண் பாட்டிலேதானா 
மாமா வெறும் பாட்டிலேதானா!......  உனக்கும்
பக்குவமா சொன்னா இதக் கேட்டுக்கோ மாமா 
அட நீயாவது இதைக் கேட்டுக்கோ மாமா.........!!!

வயிறுமட்டும் நிறஞ்சால் இங்கே போதுமா மாமா...
நாம் வந்ததற்கும் ஒண்ணு ரெண்டு கத்துக்கலாமே 
அறிவுப்பசி எடுத்து நானும் ஓடுகின்றபோ நீயோ
அதன் நடுவில் வந்து நின்று வலையை விரிக்குறாய்.....!!!

கருவிபோல வாழ எனக்கு இஸ்ரமே இல்ல
மாமா எதில் எனக்கு இஸ்ரமே இல்லை.............//
இந்தக் கஸ்ரம் நஸ்ரம் புரிசுக்காம நீதான் 
வலைய விரிக்குற எனக்கு இங்க வலைய விரிக்குற...!!!

சொந்தம் பந்தம் பாத்துக்கிட்டா போதுமா மாமா உனக்கு
அந்த சொத்துப்பத்து வேணுமுன்னா நீயே வச்சுக்கோ மாமா
தூத்துக்குடி பட்டினத்தில் நானும் கல்வி பயிலனும் அந்த
துறைமுகத்தில் என்னை நீயும் இறக்கிவிடு மாமா.........:)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/25/2011

மரணம் என்ற வலையில் விழுந்து.....

மரணம் என்ற வலையில் விழுந்து 
மனிதன் எரிந்து கருகும்போது 
மனதில் உள்ள துயரை என்றும் 
மறைத்து வைக்க முடியாதன்பே.!

எதிரிகூட நண்பன் ஆவான் 
இறந்தபின்னால் தெய்வம் ஆவான்
உடலைவிட்டு உயிர் பிரிந்தால் 
உயர்ந்த குணங்கள் நெஞ்சை வாட்டும்....

கருணை உள்ள தெய்வம் நீயே 
கண்ணிறைந்த கணவன் நீயே
இயமன்  அழைத்துச் சென்றபோது
எவரை நினைத்துத் துடித்தாய் அன்பே!

வரும்பகலில் பாதை மாறும் 
வாழ்க்கை என்ற ஓடம் தாழும்
பிறக்கும்போதே இறப்பின் கணக்கை 
படைத்தவன்தான் வகுத்தான் இங்கே....

வலுவிழந்த மனிதன் எல்லாம் 
மண்ணில் விழுந்து புரண்டாலும் 
அழுது அழுது கண்கள் வீங்கி 
ஆறு குளமாய் ஆனால்  

சென்ற உயிர் திரும்பாதென்று
வந்த உயிர் அறிந்த உண்மை 
உன்னை நானும் இழந்தேனே 
என்னை நானும் மறந்தேனே !

வாச முயலை வாடுதிங்கே 
வந்த  பந்தம் மாறுமா !
தேசம் விட்டுப் பறந்தாலும் 
தென்றல் இங்கே சாகுமா ?


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/20/2011

இது ஒரு நட்பின் வேண்டுகோள்.........

கரும்பாறை என நான் இருந்தேன் 
கண்கவர் சிலையாய் எனை மாற்றினாய் !...
இருந்தாலும் இது போதாதென்று 
இன்னுயிர் தந்து என்னை வாழவைத்தாய்....!!!

பின் இதை விருபாதவர் சொல்லைக் கேட்டு 
வீதியில் நீயே என்னை விட்டெறிந்தாய்....
அரும்பாடுபட்டு உன்னிடத்திற்கு  அன்று
ஆயிரம்முறை நான் வந்தபோதும் 

திருந்தாதது என்றும் உன் தவறே ....
என் கதை தீர்ந்தபின் அழுவதில் பயனில்லை
வருதாதிரு என் நெஞ்சமே இனியேனும் 
வரும் வதந்தியைக்கேட்டு ஏமாராதே...//

உள்ளதை மறைத்து உண்மையை சிதைத்து 
சொன்னதையே சொலிச் சொல்லி என்றும்
உன்னைச் சோதிப்பவர் முன்னிலையில் 
நல்லது கெட்டது எதுவென  அறிந்து நீ 

பொய்யரின் உறவுக்கு புறமுதுகு காட்டி  
நல்லவரை எப்போதும் நல்லபடி  நம்பி 
உள்ளதை ஒழிவின்றி உள்ளபடி உரைத்து 
அன்போடு வாழ்ந்திரு அதை என்றும் நான் ரசிப்பேன் ...

வள்ளலாக இருந்தாலும் சந்தேகம் கூடாது ..
வலுவிழந்து போனாலும் வால்ப்பிடிக்கக் கூடாது
உள்ளன்பு வைத்தால் ஒருபோதும் மறத்தல் ஆகாது ..
கள்ளத்தனம் இருதால் நட்பு கடசிவரையும் தொடராது

நான் சொல்வதைக் கேட்டு இனி சொன்னபடி நட 
நடந்ததை மறந்து நல்லபடி வாழ்ந்திடவே 
அகத்தினில் தூய்மையை அடிக்கடி பேணு 
வம்பளக்கும் உறவுகளின் வழிக்கு என்றுமே போகாதே!.....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.