மலர் கொண்டு வந்தேன்
மண மாலை தொடுக்க
மலர் வாடும் முன்பே உன்
உடல் வாடிப் போனதேன்!!..
கலையாத கனவு சிலையாகி நின்றதே
கண்ணே உன் விழிகளில் காணாத என்னை
உனக்குள்ளே தேடினேன் மனம் இன்று
உருக்குலைந்து வாடினேன் சொல்......
என் உயிரை நீ என்ன செய்தாய்?......
திருக்கோவில் வாசலில் உனக்காக
ஒளிதீபம் ஏற்றினேன் அதற்கும் எந்தன்
விழி நீரை நான் உற்றினேன் ஏன்!!......
மணக்கோலம் கலைந்திங்கு உன்னை
பிணக் கோலத்தில் காண்பதற்கா....!!
உருவான அன்பிற்கோர் எல்லை இல்லை
இவ் உலகத்தில் நீயின்றி நானும் இல்லை
நிலவுக்கு வானம்தான் சொந்தம் அம்மா
எந்த நிலை வந்தும் மாறாத பந்தம் அம்மா
வளர் பிறையாக நீ வந்து எனைச் சேரும்வரை
வாழ்வேனே உனக்காக என் ஆயுள்வரை!....







