9/24/2015

பொங்கி எழு தமிழா !




பொங்கி எழு தமிழா !
                               
வருகின்ற துயரனைத்தும் விலகி ஓட
    வறுமையிலும் ஒற்றுமையைப் பேணல்  வேண்டும் !
தருமநெறி  காக்கின்ற செயலைச் செய்து
     தமிழர்நாம்  தமிழராக வாழ்தல்  வேண்டும்!
பெருமையுடன் தாய்மொழியைப் பேணல்  வேண்டும்
     பெரும்புகழைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும்
இருள்சூழ்ந்த நிலைபோக்கி என்றும் வாழ்வில்
     எம்மவர்கள் ஆட்சிமன்றில் அமர வேண்டும் !

கருமமதைக்   கண்ணாகக்  கொள்ள   வேண்டும்!
     களவின்றிப் பொய்யின்றி வாழ்தல்   வேண்டும் !
உருகாதோர்  மனமுருகச் செய்ய வேண்டும்
     உரிமையினை வென்றெடுதுச் செல்ல வேண்டும் !
அரும்பாடு பட்டேனும் சான்றோர் நாளும்
     அறிவுக்கண் திறக்கவழி செய்ய வேண்டும் !
விரும்பாத செயலுக்கு முற்றுப் புள்ளி
      வீறுகொண்டே  எவருமிங்கு  வைக்க வேண்டும் !

நடையாலும் உடையாலும் தமிழர் பண்பை
      நாட்டமுடன்  காத்துநிதம் செல்ல வேண்டும் !
மடைதிறந்த வெள்ளமென மாட்சி ஒங்க
     மனமொத்துப்   பணியாற்றிச் செல்ல வேண்டும் !
அடையாத இலட்சியத்தை அடைய வேண்டும்
      அடிமையென்ற சொல்மறையச் செய்ய வேண்டும்
தடையெல்லாம் உடைத்தெறியத் தமிழா நீதான்
       தரணியிலே பொங்கியெழ வேண்டும் இங்கே !

                                                                   
                                                      
இப்படைப்பு,‘வலைப்பதிவர் திருவிழா – 2015’   மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015’க்காக எழுதப்பட்டது.


வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை. 


இது என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் 

வெளியானதல்ல என்றும் முடிவு வெளிவரும் முன்பு வேறு எங்கும் வெளி

வராது என்றும் உறுதி அளிக்கின்றேன் !

இப்படிக்கு 

உண்மையுள்ள 

அம்பாளடியாள் 

நன்றி .

                                                        



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

41 comments:

  1. தாங்கள் தேர்வு செய்த படமும் சொல்லிச்சென்ற கருத்துகளும் வெகு சிறப்புங்க தோழி. தங்கள் உடல் நலனை முதலில் கவனியுங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்கும் மிக்க நன்றி தோழி !

      Delete
  2. கடமைகளைச் செயற்படுத்தப் பொங்கி எழச்சொன்னீர்கள்.
    மிக மிக அருமை தோழி!

    வெற்றியீட்ட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

      Delete
  3. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா !

      Delete
  4. அருமை! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் !

      Delete
  5. "நடையாலும் உடையாலும் தமிழர் பண்பை
    நாட்டமுடன் காத்துநிதம் செல்ல வேண்டும்!" என்ற
    கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் !

      Delete
  6. வணக்கமா, நலமா,
    மடைத்திறந்த வெள்ளம்போல் வார்த்தைகள் ஓட்டம்,
    ஆஹா அருமையான அழகான வார்த்தைக் கோர்வை,,,,,,
    வாழ்த்துக்கள்,
    போட்டியில் வெல்க என வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் நலமே ! மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  7. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா !

      Delete
  8. நல்ல கருத்துள்ள கவி வரிகள். பாராட்டுகள் அம்பாளடியாள். போட்டியில் வெற்றிபெற இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

      Delete
  9. வணக்கம் சகோ !

    அழகான விருத்தப் பா இளையோர் கற்க வேண்டிய பாடம்
    வெற்றி உமதாக நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
    தம +1

    .....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா தங்களின் வாழ்த்தினைக் கண்டு மகிழ்ந்தேன் !

      Delete
  10. மரபு கவிதை மறக்க முடியாத கவிதை ...போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா தங்களின் வாழ்த்தினைக் கண்டு மகிழ்ந்தேன் !

      Delete
  11. அருமை.வெற்றி பெற வாழ்த்துகள்(தாத்தா என்றால் வாழ்த்து வாபஸ்)!!

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய அன்புத் தாத்தா பதினாறு வயதிற்கு உட்பட்டவர் அது எல்லாருக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அதனால ஒன்றும் இல்லை :))) வாழ்த்திற்கு மிக்க நன்றி
      குட்டித் தாத்தா :))

      Delete
    2. எளிமை ! அருமை ! வாழ்த்துக்கள் !

      Delete
  12. மிக்க நன்றி சகோதரா !

    ReplyDelete
  13. வணக்கம் !
    மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் !

    ReplyDelete
  14. அழகிய மரபுக் கவிதை சொல்லாடல் வெகு சிறப்பு உளமார்ந்த வாழத்துக்கள் வெற்றி பெற !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

      Delete
  15. அருமையான படைப்பு! வெற்றிபெற புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் தோழி!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

      Delete
  16. அருமையான ஆக்கம்.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா !

      Delete
  17. அம்மா தங்களை விமர்ச்சிக்க வயதில்லை இருந்தும் கவிதை மிகவும் அழகு
    தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா !

      Delete
  18. செய்தி அறிந்தேன்;விரைவில் முழு நலம் பெறப் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  19. ஆற்றொழுக்காய் அமைந்த உங்கள் கவிதை அருமை அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா !

      Delete
  20. பொங்கி எழுந்துமனப் பார்வை கவர்ந்துயிரில்
    தங்கி இனிக்கும் தமிழமுது! - கங்குல்
    கலைக்க வருகதிராய் காண்போரை வென்று
    நிலைக்கட்டும் இம்மா நிலம்!

    அருமையான விருத்தப்பாக்கள் பாவலரே!
    தங்களின் படைப்புப் போட்டிக்குச்

    சென்றுபுலம் வென்றுவரட் டும்!

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா !

      Delete
  21. அருமையான முழக்கக்கவிதை.போட்டியில் வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. எளிமையான கரு, இனிமையான கவி.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........