12/10/2016

வண்டி உருண்டோட


வண்டி உருண்டே ஓடும்
.....வாய்த்தால் இரண்டு மாடும்!
கண்டு கொள்வீர் இதுபோல்
.....கணவன் மனைவி வேண்டும்!
சண்டை இட்டுப் பிரிந்தால்
......சாகும் வரைக்கும் துன்பம்!
தொண்டில் சிறந்து விளங்கித்
......தோகை மயிலே வாழ்க!

உழவுத் தொழிலுக் குதவும்
....உண்மை யானதோ ழர்கள்!
பழகும் விதத்தில் என்றும்
....பசுவும் எருதும் எம்மின்
குழந்தை என்றால் வாழ்வில்
.....குலத்துக் கதுவே பெருமை!
இழப்பைத் தாங்க இனியோர்
.....இதயம் எங்கே கேட்போம்!

மண்ணின் வளத்தைக் காக்கும்
.....மழையைப் போல்தான் என்றும்
எண்ணக் கருத்தில் நிற்கும்
......எருதும் பசுவும் வாழ்வில்!
உண்ண உணவும் தந்தே
.....உயிரைக் காக்கும் தெய்வம்
கண்கள் முன்னே தோன்றும்
.....காளை மாட்டின் வம்சம்!

வணக்கம் அன்பு உள்ளங்களே!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4 comments:

  1. நல்லதோர் கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. தங்க முத்திரை பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அம்பாளடியாள் நலமோ? எப்படி இருக்கிறீங்க... தொடர்ந்து வாங்கோ அனைவரும் கலக்குவோம். மிக அருமையான கவிதைப் பாடல்.. தங்க முத்திரைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........