6/08/2011

மனம் உவந்து ஒரு வாழ்த்து.....

தங்கக் கலசம்
இத் திங்களின் முடிமேல்
என்றும் தங்கிட  வாழ்த்துங்கள்
இசையெனும் இன்பக் கடலில்
எங்கும் தவழ்ந்திடும் சீமான் 
இனிதே வாழ வாழ்த்துங்கள்....
தந்தை புகழையும்  இம் 
மைந்தன் காத்தான் என்றே 
நாமும் மனம் மகிழ்ந்திடும் 
எம் செந்தமிழ் கற்ற நாவினால் இவரை 
சிறப்புடன் வாழ வாழ்த்துங்கள்.......//
தித்திக்கும் குரலோசை  அதிலும்
தெளிந்த நற் தமிழோசை 
திக்கெட்டும் பரவச்செய்
சீர்காழி சிவசிதம்பரம் -என்றும்போல்
இன்றும் கலைவாணியின் அருள்பெற்று
நிலையான புகளின் உச்சியில் 
இவர் தந்தைபோல் என்றென்றும் வாழ
இன்றே வாழ்த்துங்கள்¨!......
வாழ்க வாழ்க பல்லாண்டு
நல் வளமும் ,நலனும் ,புகழும் பெற்று.....  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7 comments:

  1. மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா!....
    முத்தமிழில் இசைத்தமிழில் கொடிகட்டிப் பறக்கும் இவர்களை வாழ்த்துவது என்பது எம் தமிழுக்கு நாம் கொடுக்கும் பெருமதிப்பு!...
    வாழ்த்துங்கள் வாழ்த்துவதால் நாமும் நல்வளம் பெறுவோம்......

    ReplyDelete
  3. உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  4. உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்!

    மிக்க நன்றி பெரியவரே தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்...

    ReplyDelete
  5. என் வாழ்த்தையும் சேருங்கள்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

    ReplyDelete
  6. என் வாழ்த்தையும் சேருங்கள்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா

    நன்றி சகோதரரே நிட்சயமாக தங்கள்
    வாழ்த்தும் சென்றடையும்!......

    ReplyDelete
  7. வாழ்க வாழ்க பல்லாண்டு
    நல் வளமும் ,நலனும் ,புகழும் பெற்று.....

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........