6/29/2012

உனக்கொரு தாஜ்மகால்


உனக்கொரு தாஜ்மகால்
உள்ளத்தில இருக்குது
அதை உள்ளபடி காட்டிட
என் உள்ளம் இங்கே தவிக்குது!...

நீயொருத்தி இல்லை என்றால்
நெஞ்சமதைத் தாங்குமோ
நீ நடக்கும் பாதை தாண்டி
நான் நடக்கல் ஆகுமோ!.....

                                      (உனக்கொரு)

வான் பரப்பில் நிலவுபோல்
வந்துபோகும் தேவதை அடி
நீ கொடுக்கும் ஒளியில்தான்
நான் மின்னுகின்ற தாரகை

ஏழ் பிறப்பும் நீ வேண்டும்
என்னுடனே வந்துவிடு
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
உன்னொளியில் வாழவிடு...

எனக்கெனப் பிறந்தவளே
என் எண்ணங்களில் தவழ்பவளே
உனக்கென வாழும் என்னை
உன் மனதில் தைத்து விடு ..
                                         
பெண் :

மனதினில் துயர் எதற்கு?..
என் மன்னவனே வந்துவிடு
இருவிழி காண்பதென்றும்
தனித் தனியாவதுண்டா ?.....

என் கனவினில் நினைவினில் உன்னை
எந்தன் காலமெல்லாம் சுமப்பேனே
உன் மடிதனில் தவழ்ந்திடவே
எனக்கொரு ஆணையிடு!

ஆண் :

அடி பெண்ணே இது
நீதானா நீதானா நீதானா!
உன் இரு விழி சொல்லும் வார்த்தை
அது நிஜம்தானா?
நிஜம்தானா`?   நிஜம்தானா?
உன்னால் இன்பம்
வந்தது வந்தது வந்ததிங்கே
உள்ளத்தில் ஆனந்தம்
பொங்குது பொங்குது
பொங்குதிங்கே...

                                      (உனக்கொரு.....)  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/27/2012

இருகரம் அணைத்து

இருகரம் அணைத்து இறைவனின் முன்னே
இதயத்தைத் தந்த என் உறவே -அன்று
முதன் முறை பேசிய வார்த்தையைக்கூட
முழுமையாய் மறந்ததென்ன!

நான் உனக்கெனப் பிறந்தவளோ?
உந்தன் உயிரினில் கலந்தவளோ?
இதை அடிக்கடி நினைக்கிற மனதினில்
துயரை நீதான் அறிவாயோ!

                                        ( இருகரம் அணைத்து)

வெள்ளிப் பனிமலை உருகுது என்றன்
மனமது தவிக்குது உன்றன்  இரு விழி
காண ஒரு வழி இல்லையோ?
வள்ளிக் குறத்தியின் அன்புத் தலைவனே
உந்தன் இதயத்தில் இன்று நானில்லையோ!

சின்னஞ் சிறு குயில் உள்ளம் முழுவதும்
உன்றன்  நினைவது வந்து துயர் தரவே
தன்னந் தனிமையில் நீ சொன்ன கதைகளை
எண்ணி எண்ணி நெஞ்சம் துடிக்கிறதே!.....

                              
கல்லில் முள்ளில் அன்று நடந்து வந்தேன் 
இரு கண்கள் இரண்டும் சிவந்து நின்றேன் 
அல்லும் பகலும் என்னை அணைத்த கரம் 
இன்னும் தழுவ வரவில்லையே அது 
ஏன்?......ஏன்?..ஏன்?

பெண்:

என்னை என்ன செய்ய நினைத்தாயோ?
என்றன்   உயிர்த் தலைவா நான் 
வெண்ணிலவு போல்தான் இங்கு 
உன் நினைவால் தேய்கின்றேன்!

அன்னை அவள் துணையும் இல்லை 
ஓர் அன்பு செய்ய யாரும் இல்லை 
உன்னைத் தினம் தேடுகின்றேன் 
ஒரு உமைபோல பாடுகின்றேன் 
வா வா வா என் அன்பே வா...........
                                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/25/2012

இது நடக்கிற கதையா!...........



துலைந்தது சனியன் என்றே நாமும்
தூக்கியே எறிந்துவிட்டாலும்
குடைந்துதான் பார்க்கும்
ஒருமுறையேனும் மனக் கதவைக்
கொலை வெறி கொண்ட ஆசை!!......

நிரந்தரமாய் விட்டகன்றால்
நீ மிதப்பாய் தெப்பம் போலே
அகன்ற சனி தொடர்ந்து வந்தால் 
அதுபோல துன்பம் இல்லை.......

பிறந்தவுடன் தொற்றிய தோசம்
இது பிரியாமல் உடன் இருக்க
வருந்தும் உடல் காலம் முழுதும்
எது சொன்னாலும் கேட்காது என்றும்

தனக்கடிமை ஆக்கி எம்மைத் தினம் 
நினைத்தபடி ஆட்டிவிக்கும்
ஆசை ஒன்றே பேரெதிரியடா 
இதை அழித்துவிட்டால் பின்
வாழ்வில் ஏது துன்பம்!!!.............



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/13/2012

உன்போல் ஏது ஒரு சொந்தம்!...


               
உன்னை என்ன சொல்லி நான் பாராட்ட 
என் உள்ளமதில் வைத்துத் தாலாட்டத் 
தோழி எந்தன் தோள்களிலே சாய வா...
விழி நீரிறைத்து நீர்க்குடமாய் நான் மாறவா....

ஒரு அன்னை இல்லை என்றேதான் 
தினம் ஆர்பரித்து நின்றேன் நான் 
இன்று உன்னைக் கண்ட பின்னாலேதான் 
என் உள்ளம் பொங்குதே தன்னாலே..........!!!!


கோழை என்னும் நிலை மாறுதடி உன்னாலே 
ஒரு கோடு போட்டுக் காட்டினாயே கண் முன்னாலே
 ஏழை எந்தன் நெஞ்சுக்குள்ளே ஓர் ஆனந்தம் 
இந்த இன்ப சுகம் என்றும் தங்க நீ வேண்டும்

வா வா அன்பே என் வாசல் தேடி -நீ 
வரும் காலம் எல்லாம் பொன்னாகும் 
நீதிக்கு நீயே என்றும் காவலடி நீரில் பூக்கா 
செந்தாமரையும் நீதாநெடி என் தோழி!..

பள்ளிக் காலம் தொட்டு வந்த இந்தப் பாசம் 
ஒரு எல்லை இன்றி என்னாளுமே வீசும் 
கல்லில் முள்ளில் சென்றால் போதும் என் பாதம் 
உன் கண்களிலே இரத்த வெள்ளம் தோன்றும்...!!!

இந்த அன்பிற்கு இணை ஏதும் இல்லை என் தோழி 
உந்தன் ஐந்து விரல் பட்டால் போதும் இந்நாளில். 
அஞ்சும் நெஞ்சில் வந்த பஞ்சம் நீங்கும்  
உந்தன் கொஞ்சும் மொழி நெஞ்சில் நின்றாடும்!.....  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.