5/20/2014

அடடா அடடா அழகிதடா அமுதைப் பொழியும் நிலவிதடா



அடடா அடடா அழகிதடா
அமுதைப் பொழியும் நிலவிதடா!
உதடா உதடா தேன் கூடா
உலகம் சுற்றுதே என் தோழா!

கனவில் வந்தவள் அவள் தானே என்
கைகளைப்  பிடித்தவள் அவள் தானே!
நினைவில் நின்றவள் அவள் தானே என் முன்
நீச்சலடித்தவள் அவள் தானே!

மின்னலடிக்கும் கண்ணழகி  உயிர்
மூச்சைத்  தடுக்கும் பெண்ணழகி!
அன்ன நடை அது நடையழகு என்னை
ஆட்டிப் படைக்குதே  அவள் இடையழகு!

கன்னமிரண்டும் செவ்வாழை -அவள்
கழுத்தினில் தொங்குதேன் என்  மூளை!
சிக்கனமாய் அவள்  சிரிக்கையிலே நான் ஏன்
சிக்கித்  தவிக்கிறேன்  மச்சானே!

ஐயோ ஐயோ ஐயோ  ஓரம் போங்கடா- இவன்
காதல் வலையில் விழுந்து புட்டான் தூரம் போங்கடா!
மச்சம் உள்ள இடத்தை மட்டும் விட்டுப்புட்டானே
மத்ததெல்லாம் சொல்லிச் சொல்லி மனசத் தச்சுப்புட்டானே!

கெட்டி மேளச் சத்தம் கேட்கும் நேரம் வந்தாச்சு
நம்ம நட்பு மெல்லத் தூரம் போகும் காலம் வந்தாச்சு
நண்பனுக்கு ராஜ யோகம் கூடி வந்தாச்சு அந்த
ராணியோட சேரும் காலம் தேடி வந்தாச்சு ...

பீப்பீ  பீப்பீ பீப்பீ பீப்பீ ...
டும் டும் டும் டும்..
பீப்பீ ...பீப்பீ...பீப்பீ..பீப்பீ ..
டும் டும் டும் டும்....

அழகா அழகா அழகிதுவா?
அமுதைப் பொழியும் நிலவிதுவா?
உதடா உதடா தேன் கூடா?
உன் உலகம் சுற்றுதா என் தோழா?

பட்டு வேட்டி கட்டிக்கோ மெல்லப்
பாவை மனசில் ஒட்டிக்கோ
எட்டுப் பத்துப் பெத்துக்கோ
ஏன் தான் தாமதம் என் தோழா?

ஆஞ்சநேய பக்தனுனக்குக் காதல் வந்தாச்சு
அம்மா சொன்ன பொண்ணோடு தான் மோகம் வந்தாச்சு
நேந்து வச்ச நேத்திக்கேத்த பொண்ணு தானடா
நெத்தியடி பந்தயத்தில் நாம் செயிச்சுப் புட்டோம்டா!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

29 comments:

  1. வணக்கம்!

    அடடா! அடடா! அரும்அம்பாள் பாட்டைப்
    படிடா படிடா பயன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  2. படமும் பாட்டும் தலைப்பும் படா ஜோரா இருக்குது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  3. படமும் பாட்டும் தலைப்பும் படா ஜோரா இருக்குது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ஆஞ்சநேய பக்தனுனக்குக் காதல் வந்தாச்சு
    அம்மா சொன்ன பொண்ணோடு தான் மோகம் வந்தாச்சு//

    ஆஹா! நல்லது .
    வாழ்த்துக்கள். வளமோடு வாழட்டும் மணமக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி இப்பாடலை வெறும் பாடலாகக் கருதாமல்
      நன்கு ரசித்தும் வாழ்த்தியுள்ளீர்கள் :))))))

      Delete
  5. பாடிக்கொண்டே எழுதுவீர்களா....?
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் தோழி அருணா பாடிக்கொண்டேதான் எழுதுவது
      என் வழக்கம் .மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  6. பிரமாதம்...

    வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அன்புச் சகோதரா தங்களின் பாராட்டிற்கும் இனிய
      நல் வாழ்த்திற்கும் .

      Delete
  7. "கனவில் வந்தவள் அவள் தானே என்
    கைகளைப் பிடித்தவள் அவள் தானே
    நினைவில் நின்றவள் அவள் தானே என் முன்
    நீச்சலடித்தவள் அவள் தானே..." என்ற அழகிய வரிகளுடன்

    "பீப்பீ பீப்பீ பீப்பீ பீப்பீ ...
    டும் டும் டும் டும்..
    பீப்பீ ...பீப்பீ...பீப்பீ..பீப்பீ ..
    டும் டும் டும் டும்..." என்ற இசை வரிகளுடன்

    கவிதை சிறப்பாக உள்ளதே!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  8. நல்ல கவிதை. ரசித்தேன்.

    த.ம. +1

    ReplyDelete
  9. #அழகிதடா #
    ரசித்து பார்த்தால் அழகியும் போடுவாளோ தடா !
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஒரு பெண்ணின் அனுமைதியின்றி அவள் அழகினை ரசிப்பது குற்றமே இருப்பினும் கண்ணிருந்தால் ரசிக்கத் தானே செய்யும் இதற்கெல்லாம் "தடா" போட முடியாது பகவஞ்சியாரே :)))

      Delete
  10. அற்புதம்
    அந்த பாடலுக்குரிய மெட்டோடு
    இரண்டுமுறை படித்து ரசித்தேன்
    மிகப் பொருத்தமாக வார்த்தைகள் இப்படி
    அர்த்தத்துடன் அமைய அதிகப் பாண்டித்தியம் வேண்டும்
    உங்களிடம் அம்பாள் அருளால் அது நிறைந்து இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி ஐயா தங்களின் வருகைக்கும் மனமார்ந்த பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  11. நல்ல மெட்டுடன் கூடிய கவிதை சகோதரியே! மிகவும் ரசித்தோம்! நல்ல ரசனையான வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் மனமார்ந்த பாராட்டிற்கும் .

      Delete

  12. /// பட்டு வேட்டி கட்டிக்கோ மெல்லப்
    பாவை மனசில் ஒட்டிக்கோ///
    அப்படியா அப்ப யாராவது எனக்கு வேட்டிகட்ட சொல்லித்தாருங்களேன்

    ReplyDelete
    Replies
    1. ஆச தோச அப்பளம் வட இருக்கிற உருட்டுக் கட்ட போதாதா இன்னொரு உருட்டுக் கட்ட வேணுமா ?...எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஓர் ஆசை தலை தூக்கும் இந்த மதுரைத் தமிழனுக்கு !! :))) வேட்டி இல்ல பெட்டி கட்டத் தான் வருவினம் தம்பி :))))))

      Delete
  13. பாடல் அசத்தல் தோழி மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  14. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  15. மனமுருக்கும் பாடல் மகிழ்வோடு பாட
    நினைவிழந்து நின்றதென் நெஞ்சு !

    அழகோ அழகோ உன் கவி அழகு
    அருமை அருமை சகோ
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    11

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........