5/25/2015

தமிழ்! எங்கள் உயிரின் இருப்பு !

                                               

பொன்போன்ற செந்தமிழைப் போற்றுவதே என்கடன்
வன்முறையால் இவ்வெண்ணம் வற்றாதே!- அன்றில்
பறவையான்  பாடாது போனாலும் என்னுள்
உறவாடும் நீயே உயிர்!

சொல்லாமல் போனாலும் சோகத்தில் நின்றாலும்
எல்லாமும் என்வாழ்வில் இன்தமிழே!- நல்ல
கனியுண்ட நாவும்தான் காத்திருக்கும் பாரில்
இனிய தமிழுக்கே(து) ஈடு !

எண்ணம் அலைபாயும் இன்பத்தேன் நீயென்று
வண்ணம் நிறைந்திட  வா..தமிழே !-வெண்பா
வகையறிந்து நான்பாட வேண்டுமிங்கே நாளும்
பகைவிரட்(டு) என்னுள் படர்ந்து !

சொல்லாட்சி மேலோங்கச்  சொந்தங்கள் கூடிவரும்
நல்லாட்சி நீதருவாய்  நாளுமிங்கே !-அல்லல்
இனியேது ?..வாழ்வருளும் ! இன்பத்தேன் பாயும் !
தனித்தமிழால் ஓங்கும் தரம்!

வண்டமிழால்  நாம்வாழும் வாழ்வினிக்கும் செந்தேனை
உண்டதோர் ஆனந்தம் ஊடுருவும் !-அண்டம்
கடந்தெங்குச்  சென்றாலும் கற்றவர்க்(கு) இன்பம்
தொடர்ந்திங்கு நல்கும் சுகம் !

எண்ணற்ற நற்பலனை எந்நாளும் பெற்றிடலாம்
வண்ணத் தமிழ்போதும் வாழ்வினிலே !-மண்ணில்
முதுமொழியாய் நின்றாளும் முத்தமிழே! என்னுள்
புதுமொழி பூப்பாள் பொலிந்து !

                                               
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

34 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    அழகான வார்த்தையால் அழகாக சொல்லிய கவியை கண்டு மகிழ்ந்தது மனம். பகிர்வுக்கு நன்றித.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் கவி கண்டு
    மகிழ்கின்றேன் சகோதரியாரே
    தம 2

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      உண்மைதான் சகோதரா தங்களின் அன்பான நற் கருத்தினைக் கண்டதும் நானும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .இனிய வரவுக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரா

      Delete
  3. தாய்மொழி போற்றும் அழகான கவிதையைப் படித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !

      மிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் ! .

      Delete
  4. இன்பத்தேன் பாய்கிறது அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரா !

      Delete
  5. வண்ணத் தமிழ்போதும் வாழ்வினிலே !-மண்ணில்
    முதுமொழியாய் நின்றாளும் முத்தமிழே! //

    தமிழுக்கு...பா அருமை த ம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி !

      Delete
  6. தமிழ் பாடும் வெண்பாக்கள் மிக அருமை.

    தொடருங்கள் கவிஞரே!

    த ம . தமிழ் மணத்தில் நுழைய !

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      மிகச் சிறந்த கவிஞர் தங்களின் பாராட்டுகள் கண்டு நானும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன் ! மிக்க நன்றி சகோதரா .

      Delete
  7. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா !

      Delete
  8. //சொல்லாமல் போனாலும் சோகத்தில் நின்றாலும் எல்லாமும் என்வாழ்வில் இன்தமிழே!//

    மிகவும் அருமையான அழகான பாடல் வரிகள்.

    அம்பாளடியாளின் இந்தப்பதிவின் மூலமே நானும் தமிழ் மொழியின் சிறப்புக்களையும், அதன் மேங்கோ ஜூஸ் போன்ற இனிமையினையும் நன்கு உணரமுடிகிறது.

    வாழ்க ! நம் செந்தமிழும் அதனைப்பரப்பிடும் நம் அம்பாளடியாளும்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா !

      தங்களின் வரவும் பாராட்டும் எப்போதும் என்னை மகிழ்வித்து ஊக்கமளிக்கத் தவறியதில்லை இதை எண்ணி நானும் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் ! இனிய மேங்கோ ஜூஸ் போன்ற தங்களின்பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா :)

      Delete
  9. காதில் பாய்கின்றது தமிழ்த்தேன் மழை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரா !
      தங்களின் பாராட்டுக் கண்டு மகிழ்ந்தேன் !இப் பெருமைகள் யாவும் என் குருநாதர் கி .பாரதிதாசன் ஐயாவையே சேரும் !இந்த வல்லமையை எனக்களித்தவர் அவரே ! மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  10. கவிதை மணக்கிறது! எங்கே காணோம் நலமா மகளே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா !
      தங்களின் பாராட்டுக் கண்டு மகிழ்ந்தேன் !நான் மிக்க நலமாக உள்ளேன் ஐயா தங்களின் இந்த அன்பான விசாரிப்பு என்னை மென்மேலும் மகிழ்ச்சிப் படுத்தியது! வணங்குகின்றேன் ஐயா .

      Delete
  11. வற்றாத உங்களின் தமிழ்க் காதலை எண்ணி வியக்கின்றேன் :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      எப்போதும் நகைச்சுவையாகப் பேசிப் பழகும் தங்களின் வரவும் பாராட்டும் கண்டு நானும் மகிழ்ந்தேன் சகோதரா :)

      Delete
  12. தமிழ் அன்னைக்கு அருமையான பாமாலை.... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரா !

      Delete
  13. பேத்தியின் அருமையான கவிதை மகிழ்ச்சி அளிக்கிறது.!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      என் அன்புத் தாத்தாவின் மகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்ந்தேன் பாராட்டுக்கு மிக்க நன்றி தாத்தா !

      Delete
  14. உயிரின் இருப்பு தங்கள் கவிதைக்குள்ளும்..
    அற்புதம் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      மிக்க நன்றி ரமணி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் !

      Delete
  15. நலம் தானே தோழி ! பார்க்கவே முடிவதில்லையே. எல்லா நலன்களும் கிட்டட்டும் தோழி !

    தேன்சிந்தும் வெண்பாக்கள் தந்தாய் வியப்பூட்ட
    விண்ணும் புகழும் இனி !

    வாழ்க வளமுடன் ...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      நான் மிகவும் நலமாக உள்ளேன் தோழி !

      நான்சிந்தும் வெண்பாக்கள் நாள்தோறும் ஒங்கத்தான்
      தேன்சிந்தும் வாழ்த்துப்போ தும்!

      உள்ளம் மகிழ்ந்தது தோழி உன்னத வாழ்த்தினைக் கண்டு !மிக்க
      நன்றி தோழி .

      Delete
  16. தமிழுக்கு இனிமை சேர்க்கும் கவிதை!
    தங்கள் தளத்திற்கு முதல் முறையாக வந்து இணைந்திருக்கிறேன். வரும் பதிவுகளில் தொடர்கிறேன்.
    த ம 14

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      முதல் வருகைக்கும் முத்தான நற் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரா என்றும் தமிழோடு இணைந்திருப்போம் !வாழ்க தமிழ் !தொடரட்டும் தங்கள் நட்பும் !

      Delete
  17. அருமையான் தமிழ் அன்னைக்கு சூட்டப்பட்ட மாலை.....தமிழும் அமுது! இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே! அருமை!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........