12/12/2010

யே ராசா ராசா.....

யே ராசா ராசா.....

யே  ராசா   ரசா.....
என்  நெஞ்சுக்குள்ளே
வந்து நீயும் 
என்னை  யென்ன
யென்ன செய்யப் போகிறாய்?

தினம் லேசா  லேசா வந்து
என்னைத்  தொட்டு 
எங்கே  நீயும் போகிறாய்?
இது பருவம் தந்த காதல் மயக்கமோ?
உன்றன்  பார்வை என்றும்
என்னை  மயக்குமோ?
யே  ராசா  ராசா
யே ராசா  ராசா                                   
                                         (யே  ராசா ராசா.....) 
மின்னல்போலே
முன்னே வந்து
என்னைத்  தொட்டுச் 
செல்லும் உன்னைக் 
கண்ணுக்குள்ளே வைத்து
நானும் பார்க்கிறேன்
அட என்னென்னமோ  
செய்யச் சொல்லிக் கேட்கிறேன்

என்  நாணம் இங்கே 
விட்டுப் போச்சு
நாளும் தூக்கம்
கெட்டுப் போச்சு
நீயில்லாமல்
என்னன்னமோ ஆகிறேன்
அட  நீரில்லாமல்
நீச்சல் இங்கே போடுறேன்

...........................(யே  ராசா ராசா)

ஊருக்குள்ளே போகும் போது 
உன்னை மட்டும் தேடும் கண்கள் 
எங்கே எங்கே எங்கே என்று பார்க்குதே!
தினம் ஏக்கத்தாலே 
தூக்கம் கெட்டுப் போனதே
நீயும்  இன்றி நானும்  இல்லை 
நெஞ்ச்சுக்குள்ளே ஈரம் இல்லை 
என்  தாகம் தீர்க்கும் 
தண்ணி உன்னைத்    
தேடி நெஞ்சம் ஓடுதிங்கே

............................(யே  ராசா ராசா)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2 comments:

  1. அழகான காதல் பாட்டு பாடிப் பார்த்தால் சூப்பர். தோழி wow

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........