5/13/2011

தரைமீது நானுறுண்டேன்

தரைமீது நானுறுண்டேன்
தலைமீது தீச்சட்டி
பாற்குடமும் நான் எடுத்தேன் 
மாரியம்மா... என்னைப் பார்க்காமல்
ஏனிருந்தாய் மாரியம்மா                                                                                                       
உலகெங்கும் உன் புகழை
ஓயாமல் நான் கேட்டும்
உனக்காக ஏங்கி நின்றேன்
மாரியம்மா.....உந்தன்                                                                                            உருவத்தைத் தாங்கி நின்றேன்
மாரியம்மா.......உந்தன்                                                                                          உருவத்தைத் தாங்கி நின்றேன்
மாரியம்மா........

ஒருகோடி ஜென்மங்கள்
உலகத்தில் நான் ஜெனித்தாலும் 
உன் நாமம் ஓத வேண்டும் 
மாரியம்மா.........நான் உனக்காக                                                                       வாழ வேண்டும் மாரியம்மா...........

கருமாரி அம்மா உன் 
கால் தொட்டு நான் பெற்ற 
பேரின்பம் பெற வேண்டும் 
மாரியம்மா......அன்பு குறையாத 
தாயே நீ வாடியம்மா... அன்பு
குறையாத தாயே நீ வாடியம்மா.... 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

No comments:

Post a Comment

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........