10/10/2011

மீனாட்சி அருளாலே .......

மீனாட்சி அருளாலே 
அந்தக் காமாட்சி அருளாலே 
நான் பாட்டுப் பாடுகின்றேன் 
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....

வாராயோ மகமாயி ...........
வந்து குறை தீராயோ மகமாயி 
நாம் ஏறாத மலையில்லை
இனி எங்களுக்கோர் துணை இல்லை ...

மீனாட்சி அருளாலே 
அந்தக் காமாட்சி அருளாலே 
நான் பாட்டுப் பாடுகின்றேன் 
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....

ஆறோடும் வீதி எங்கும் 
அடி ஆத்தாடி உன் முகத்தை 
நாள்தோறும் தேடுகின்றோம் 
நமக்கொரு நல்ல வழி காட்டாயோ .....

பௌர்ணமி தினத்தின்று உனக்கொரு 
பட்டுடுத்திப் பார்க்கவென்று 
பச்சை இலைபோல் மனமும் இங்கே 
உன் பக்க துணை தேடுதடி .............

நட்ட நடு ராத்திரியில் 
நல்ல சோதி ஆனவளே............
எட்டி அடி வைத்து இங்கே 
எழுந்தருளி வாருமம்மா ...........

மீனாட்சி அருளாலே 
அந்தக் காமாட்சி அருளாலே 
நான் பாட்டுப் பாடுகின்றேன் 
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

26 comments:

  1. மீனாட்சி அருளாலே பாடல் அருமை...

    ReplyDelete
  2. பாடல் நல்லா இருக்குங்க சகோ!

    ReplyDelete
  3. மீனாட்சி பாடல் அருமை

    தமிழ் மணம் மூன்று

    ReplyDelete
  4. நல்ல பாடல்... அருமையான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. நன்றாக உள்ளது கவிதை.

    ReplyDelete
  6. பௌர்ணமி தினத்தின்று உனக்கொரு
    பட்டுடுத்திப் பார்க்கவென்று
    பச்சை இலைபோல் மனமும் இங்கே
    உன் பக்க துணை தேடுதடி .............
    நல்ல வரிகள்.

    ReplyDelete
  7. பொருள் வேட்டி அல்ல அம்மன்
    அருள் வேண்டி வந்த பாடல்
    நன்று!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. அசத்தலான கவிதை சகோதரி

    ReplyDelete
  9. அருமையான பாடல் சகோதரி
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  10. சந்தம் கொண்டு அம்மன் அருளால் பாடல் பாடும் கவிதாயினியின் உணர்வுகளைச் சொல்லும் அருமையான கவிதை

    ReplyDelete
  11. த.ம.10
    மீனாட்சி அருளால்,கவி மழை பொழியுங்கள்!

    ReplyDelete
  12. அருமையான, இதயம் தொட்ட வரிகள். மீனாட்சியின் அருள் உங்களுக்குக் குறைவின்றிக் கிட்டும்.

    ReplyDelete
  13. பக்திக்கவிதை

    ReplyDelete
  14. அன்புநிறை சகோதரி ...
    கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
    பொறுத்தருள்க...

    மனம் நிறையும் மீனாட்சி அம்மை பாடல்
    குளிரச் செய்தது.

    ReplyDelete
  15. நல்ல பக்திப்பாடல்.

    //மீனாட்சி அருளாலே
    அந்தக் காமாட்சி அருளாலே
    நான் பாட்டுப் பாடுகின்றேன்
    இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
    இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....//

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வணக்கமம்மா..
    நம்ம அம்பாளுக்கு பக்தி பாடல்ன்னா சொல்லவும் வேண்டுமா..? பாடல் அருமையம்மா வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. பாட்டு நல்லாத்தான் இருக்கு...!!

    ReplyDelete
  18. மீனாட்சி அருளாலே
    அந்தக் காமாட்சி அருளாலே
    நான் பாட்டுப் பாடுகின்றேன்
    இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
    இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....

    பாடல் அருமை வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  19. மதுரை அரசாளும் மீனாட்சி!மிக அருமையான பதிவு.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  20. எங்கள் ஊர் மீனாட்சி பாடல் அருமை சகோ....

    ReplyDelete
  21. மீனாட்சி அருள் புரிவாராக....

    ReplyDelete
  22. தேரோடும் வீதியெங்கும் தேடுகின்றோம் -மஞ்ச
    நீரோடு வேப்பில்லையும் சூடிடவே!

    பக்தி ஆறோடும் பாதைதோறும் பாடுகிறோம்
    பகவதி பாதம் பணிந்திடவே!

    நடுஇரவிலும் நாயகி அவளை நண்ணியகவி
    நன்று! நன்று!! நன்று!!!

    ReplyDelete
  23. கும்மி பாடல்களை ஒத்த சந்த நயம். நல்ல பாடல். அருமை

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........