9/05/2011

இவள்தான் தமிழ்ப் பெண்ணோ ......!!!

ஒரு கேள்வியும் இல்லைப் 
பதிலும் இல்லை இங்கே 
நம் நட்பை அவளேன் 
முறித்துச் சென்றாள்......!!!

இனியொரு தடவை அவள் 
எனக்கினி வேண்டாம் என் 
இதயம் கல்லாய் ஆனபின்னால்
 இதையே பலமுறை நினைத்தேன் 
அவளை மறந்திடத் துடித்தேன் 
பாவி அவள் நினைப்போ மறையவில்லை !...

கருகிய இதயம் காற்றினில் மிதந்து 
அவள் கண்களைத் திறக்க மாட்டாதோ ...!!!
தெருவினில் நின்று ஏங்குகின்றேன் 
தினமும்  அவளைக்காண வாடுகின்றேன் 

எனக்கென்ன என்று வாழ்ந்திடும் பெண்ணே 
என் இதயத்தை இன்றே திருப்பிக்கொடு 
உன் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை நான் 
சிந்திடும் கண்ணீரும் உனக்குத் தெரியவில்லை... 

பருவம் நிறைந்த பெண்ணே நீ என்
பக்கம் வந்தால்த் தவறென்றோ 
இதுவரைகாலமும் பழகிய நட்பை 
இத்துடன் முடிக்கப் பார்க்கின்றாய் ....!!!

இதனால் வென்றதுன் பெண்மை 
தோத்தது நம் நட்பு 
என்றதன்  கவலை இல்லாமல் 
புன்னகைப் பூக்களை வீசுகின்றாயே 
உன்னை என்னால் 
புரிந்துகொள்ளவே  முடியவில்லை ..........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

43 comments:

  1. அழகான கவிதை. அருமையான வரிகள் . தொடர்ந்து பல கவிதைகளை எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம் மேடம்! கும்புடுறேனுங்க!

    இன்னிக்கும் ஒரு அழகான கவிதை சொல்லியிருக்கீங்க!

    ‘ கருகிய இதயம் காற்றினில் மிதந்து
    அவள் கண்களைத் திறக்க மாட்டாதோ ...!!!’

    இந்த வரி எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு! அப்புறம் கடைசியா ஒரு மேட்டர் சொல்லியிருக்கீங்க

    ‘ இதனால் வென்றதுன் பெண்மை
    தோத்தது நம் நட்பு
    என்றதன் கவலை இல்லாமல்
    புன்னகைப் பூக்களை வீசுகின்றாயே
    உன்னை என்னால்
    புரிந்துகொள்ளவே முடியவில்லை .........’

    ஒலகத்துல எல்லா ஆம்பளைங்களுக்கும் இதுதான் பிரச்சனையே!

    இந்தப் பொண்ணுங்களையே புரிஞ்சுக்க முடியுறதில்ல!

    எனிவே, வாழ்த்துக்கள் மேடம் உங்கள் அருமையான கவிதைக்கு!

    ReplyDelete
  3. நட்பு என்றும் அழிவதில்லை...காதல் லேசாய் எட்டிப்பார்க்கும் வரை...

    கவிதை நல்லாயிருந்தது...சகோதரி...

    ரெவெரி

    ReplyDelete
  4. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இப்படியா ஏமாற்றுவது ...

    ReplyDelete
  6. சூப்பர் ஓ சூப்பர்
    அன்புடன்,
    கோவை சக்தி

    ReplyDelete
  7. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.............

    ReplyDelete
  8. அழகா சொல்லி இருக்கீங்க சகோ...கவிதை ஓஹோ!

    ReplyDelete
  9. கருகிய இதயம் காற்றினில் மிதந்து
    அவள் கண்களைத் திறக்க மாட்டாதோ ...!!!
    தெருவினில் நின்று ஏங்குகின்றேன்
    தினமும் அவளைக்காண வாடுகின்றேன்

    என்னமா ஒரு பீளின்
    உங்கட்ட பாடம் படிக்க வரட்டுமா

    ReplyDelete
  10. ///இனியொரு தடவை அவள்
    எனக்கினி வேண்டாம் என்
    இதயம் கல்லாய் ஆனபின்னால்
    இதையே பலமுறை நினைத்தேன்
    அவளை மறந்திடத் துடித்தேன்
    பாவி அவள் நினைப்போ மறையவில்லை !...///


    இருப்பதை இல்லாமல் செய்யா முயன்று
    இல்லாதது இருப்பதாக நினைத்துக்கொள்ளும்
    உணர்ச்சிக்கவிதை.

    கவிதை ஜோரு
    தமிழ்மணம் ஆறு.

    ReplyDelete
  11. தமிழ்மணம் ஏழாவது நானே

    ReplyDelete
  12. //தெருவினில் நின்று ஏங்குகின்றேன்
    தினமும் அவளைக்காண வாடுகின்றேன் //

    அனுபவம் போல....( சும்மா சொன்னேன்)

    கவிதை அருமைங்க. வாழ்த்துக்கல்

    ReplyDelete
  13. நட்புக்குள் காதல் வந்துவிட்டால் சிரமம் தான் கண்டிப்பா...

    ஆண் பெண் நட்பு கொள்வதில் தப்பில்லை எல்லை மீறாதவரை... அங்கே காதல் புகாதவரை...

    அழகிய பாடல் வரிகள் போலவே கவிதை வரைவது தான் உங்க சிறப்பம்சமே அம்பாளடியாள்.. வியக்கிறேன் நான்....

    அசத்தல் வரிகள் கொண்ட அழகிய கவிதைக்கு என் அன்பு வாழ்த்துகள் அம்பாளடியாள்...

    ReplyDelete
  14. உன்னை என்னால்
    புரிந்துகொள்ளவே முடியவில்லை ..........

    -பிடிச்சிருக்கு

    ReplyDelete
  15. அற்புத கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. எனக்கென்ன என்று வாழ்ந்திடும் பெண்ணே
    என் இதயத்தை இன்றே திருப்பிக்கொடு
    உன் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை நான்
    சிந்திடும் கண்ணீரும் உனக்குத் தெரியவில்லை...

    ஜீவனுள்ள வரிகள்.

    ReplyDelete
  17. வணக்கமம்மா எப்பிடியம்மா இப்பிடி ஒவ்வொருநாளும் உங்கலால் வித விதமான கவிதைகளை புனைய முடிகிறது.. எல்லாமே அருமையம்மா.. ஓட்டுப்போட முடியாத இடத்தில் இருக்கிறேனம்மா..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. அழகான கவிதை. அருமையான வரிகள் . தொடர்ந்து பல கவிதைகளை எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் .........

    ReplyDelete
  19. வணக்கம் மேடம்! கும்புடுறேனுங்க!

    இன்னிக்கும் ஒரு அழகான கவிதை சொல்லியிருக்கீங்க!

    ‘ கருகிய இதயம் காற்றினில் மிதந்து
    அவள் கண்களைத் திறக்க மாட்டாதோ ...!!!’

    இந்த வரி எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு! அப்புறம் கடைசியா ஒரு மேட்டர் சொல்லியிருக்கீங்க

    ‘ இதனால் வென்றதுன் பெண்மை
    தோத்தது நம் நட்பு
    என்றதன் கவலை இல்லாமல்
    புன்னகைப் பூக்களை வீசுகின்றாயே
    உன்னை என்னால்
    புரிந்துகொள்ளவே முடியவில்லை .........’

    ஒலகத்துல எல்லா ஆம்பளைங்களுக்கும் இதுதான் பிரச்சனையே!

    இந்தப் பொண்ணுங்களையே புரிஞ்சுக்க முடியுறதில்ல!

    எனிவே, வாழ்த்துக்கள் மேடம் உங்கள் அருமையான கவிதைக்கு!

    மிக்க நன்றி ஐயா தங்களின் வரவும் வாழ்த்தும் என் மனத்தைக்
    குளிரவைக்கின்றது.........!!!!

    ReplyDelete
  20. நட்பு என்றும் அழிவதில்லை...காதல் லேசாய் எட்டிப்பார்க்கும் வரை...

    கவிதை நல்லாயிருந்தது...சகோதரி...

    ரெவெரி

    மிக்க நன்றி சகோ .....

    ReplyDelete
  21. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி ஐயா வரவுக்கும் வாழ்த்துக்கும் ......

    ReplyDelete
  22. ம் ...

    மிக்க நன்றி வரவுக்கு ....

    ReplyDelete
  23. இப்படியா ஏமாற்றுவது ...

    பதில் சொல்ல்வது கொஞ்சம் கஸ்ரம் ஹி...ஹி ...ஹி ...

    நன்றி சகோ .....

    ReplyDelete
  24. சூப்பர் ஓ சூப்பர்
    அன்புடன்,
    கோவை சக்தி

    மிக்க நன்றி உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் .....

    ReplyDelete
  25. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.............

    மிக்க நன்றி சகோதரி தங்களின் வரவுக்கும்
    வாழ்த்திற்கும் என் தளத்தினைப் பின்தொடர்வதற்கும் ....

    ReplyDelete
  26. அழகா சொல்லி இருக்கீங்க சகோ...கவிதை ஓஹோ!

    மிக்க நன்றி ஐயா தங்களின் வரவுக்கும் பாராட்டுக்கும் ........

    ReplyDelete
  27. கவிதை கலக்கல் சகோ...உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...

    ReplyDelete
  28. ///இனியொரு தடவை அவள்
    எனக்கினி வேண்டாம் என்
    இதயம் கல்லாய் ஆனபின்னால்
    இதையே பலமுறை நினைத்தேன்
    அவளை மறந்திடத் துடித்தேன்
    பாவி அவள் நினைப்போ மறையவில்லை !...///


    இருப்பதை இல்லாமல் செய்யா முயன்று
    இல்லாதது இருப்பதாக நினைத்துக்கொள்ளும்
    உணர்ச்சிக்கவிதை.

    கவிதை ஜோரு
    தமிழ்மணம் ஆறு

    மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் ....

    ReplyDelete
  29. சூப்பரு கவிதை.....

    மிக்க நன்றி சகோ ...

    ReplyDelete
  30. தமிழ்மணம் ஏழாவது நானே

    நன்றி ...நன்றி ...நன்றி ....சகோ .

    ReplyDelete
  31. என்னதான் செய்தாலும் என்னவளை நானும் மறக்கமுடியவில்லையே...
    மனதை மண்ணிக்கவும் முடியவில்லையே....

    நல்ல கவிதை.
    தமிழ்மனம் எட்டாவதுடன்.
    நா.நிரோஷ்.

    மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
    ஒத்துழைப்புக்கும் .

    ReplyDelete
  32. //தெருவினில் நின்று ஏங்குகின்றேன்
    தினமும் அவளைக்காண வாடுகின்றேன் //

    அனுபவம் போல....( சும்மா சொன்னேன்)

    கவிதை அருமைங்க. வாழ்த்துக்கல்

    மிக்க நன்றி சகோ வரவுக்கும் வாழ்த்துக்கும் ...

    ReplyDelete
  33. நட்புக்குள் காதல் வந்துவிட்டால் சிரமம் தான் கண்டிப்பா...

    ஆண் பெண் நட்பு கொள்வதில் தப்பில்லை எல்லை மீறாதவரை... அங்கே காதல் புகாதவரை...

    அழகிய பாடல் வரிகள் போலவே கவிதை வரைவது தான் உங்க சிறப்பம்சமே அம்பாளடியாள்.. வியக்கிறேன் நான்....

    அசத்தல் வரிகள் கொண்ட அழகிய கவிதைக்கு என் அன்பு வாழ்த்துகள் அம்பாளடியாள்...

    வணக்கம் சகோ உங்களுக்கு நன்றி என்று ஒருவார்த்தையில் சொல்ல முடியவில்லைக் காரணம் இவ்வளவு பொறுமையாய்க் கருத்திட்டு
    பலரையும் ஊக்குவிக்கின்றீர்களே!....வாழ்த்துக்கள் உங்கள் செவைகண்டு மகிழ்கின்றேன் சகோ ........

    ReplyDelete
  34. ரொம்ப நல்லாருக்குது..

    மிக்க நன்றி சகோ .

    ReplyDelete
  35. அற்புத கவிதைக்கு வாழ்த்துக்கள்

    மிக்க நன்றி உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் ..

    ReplyDelete
  36. எனக்கென்ன என்று வாழ்ந்திடும் பெண்ணே
    என் இதயத்தை இன்றே திருப்பிக்கொடு
    உன் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை நான்
    சிந்திடும் கண்ணீரும் உனக்குத் தெரியவில்லை...

    ஜீவனுள்ள வரிகள்.

    மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் ...

    ReplyDelete
  37. வணக்கமம்மா எப்பிடியம்மா இப்பிடி ஒவ்வொருநாளும் உங்கலால் வித விதமான கவிதைகளை புனைய முடிகிறது.. எல்லாமே அருமையம்மா.. ஓட்டுப்போட முடியாத இடத்தில் இருக்கிறேனம்மா..

    வாழ்த்துக்கள்..

    மிக்க நன்றி காட்டானே உங்கள் வரவும் வாழ்த்தும்
    என் மனதை மகிழவைக்கின்றது ............

    ReplyDelete
  38. கவிதை கலக்கல் சகோ...உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...
    மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் ....

    ReplyDelete
  39. அழகிய கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. ஆகா... என்ன அருமையான கவிதை!!

    //உன் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை நான்
    சிந்திடும் கண்ணீரும் உனக்குத் தெரியவில்லை...//

    அருமை... அருமை...

    "இவள்தான் தமிழ்ப் பெண்ணோ ......!!! " - ஒரு தமிழ்பெண்ணையே படத்திலும் காட்டியிருக்கலாமே!!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........