12/30/2011

புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே ....

இன்பம் பொங்கும் நல்லாண்டாய் 
இதயம் மகிழும் பொன்னாண்டாய்
அன்றும் இன்றும் நாம் பட்ட துயர் 
அகற்ற வருவாய் புத்தாண்டே !

பிரிந்த உறவுகள் இணைந்திடவும் 
பரந்த உலகம் நல் ஒளி பெறவும் 
விரைந்து நன்மை தந்திடவே 
வருவாய் இங்கே புத்தாண்டே!

தனமும் தான்னியமும் கல்வியும் 
தழைத்து எங்கும் புவிதனிலே 
வறுமை நிலையைப் போக்கிடவே 
வருவாய் இங்கே புத்தாண்டே!

மனதில் சஞ்சலம் அகன்றிடவும் 
மனிதன் மனிதனாய் வாழ்ந்திடவும் 
உயரிய பண்பைத் தந்திடவே நீ 
வருவாய் இங்கே புத்தாண்டே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/29/2011

என் மூச்சுக் காற்றே உன்னை விடுவேனா!....

நட்பைக் குலைத்து நாசம் செய்து 
நாட்டைச் சுடுகாடாக்கிவிட்டால் இங்கு 
வேற்றுக் கிரகம் குடி வரும் வரைக்கும் 
வீழ்ந்த தமிழன் எழமலா போவான் !

இன்று பட்டுப் போனது இலையும் கிளையும் 
வேர்கள் அல்ல நாம்  உறங்க !
அன்னை கற்றுத் தந்த மொழியின் வலிமை 
மூச்சுக் காற்றாய் மாறும் உயிர் கொடுக்க!

ஒற்றைத் தமிழன் பலத்தை எதிர்க்கப்
பத்து யானைகள் பின்வாங்கும் இதில் 
கட்டிப் போட்ட கைக்குள் அடங்க என்றும் 
கைக்குட்டை அல்லவே நாம் கற்ற தமிழ்!

இனியும் வட்டி குட்டி போட்டுச் சந்தம் 
எட்டுத் திக்கும் பரவி வரும் இந்த 
வண்ண நதியைக் கண்டு மிரளும் நரிகள்  
அதில் குட்டிக்கரணம் போட்டு மடியும்!

தத்தித் தத்தி நடந்த குழந்தை என்றும் 
தன்னம்பிக்கையை இழப்பதில்லை அதுபோல் 
முத்து முத்தாய்க் கவிதை வடித்தவர் 
முடங்கிக் கிடக்க நினைப்பதில்லை!

கொட்டும் மழையின் பயனை நோக்கி 
முகில்கள் என்றும் திரள்வதில்லை !
நாம் விட்டுச் செல்லும் கவிதை வரிகளும் 
வீணாய்ப் போகப் போவதில்லை!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/27/2011

மனிதா ...மனிதா ...மனிதா!.....


வருவதும் போவதும் வாழ்வில் 
என்றும் புதுமை அல்ல............
புரிதலில் வரும் சுகம் அதை 
உணர்தலே புதுமை என்பேன்!....


அன்று கருவறை வந்தவன் பின் 
கல்லறை செல்கிறான் இதில் 
வாழ்வை சிறையறை என்றவன் 
வாழும்போதே சல்லடையாகிறான்!...


ஒருவரை ஒருவர் தாங்கிடும்போது 
வரும் துயர் எல்லாம் பறந்திடுமே 
இருகரம் எழுப்பிடும் ஓசையின் இன்பம் 
இருதயம் வரைக்கும் ஒலித்திடுமே!......


பிரிதலும் நன்றோ பகைமையை வளர்த்து 
பிறவியில் இதுவே பெரும் துன்பம் !.............
நாம் அரிதெனக் கருதும் மானிட வாழ்க்கை 
அகத்தினை நோக்கினால் பேரின்பம்!............


வறுமையில் செல்வம் இளமையில் கல்வி 
முதுமையில் அமைதி தேடித் தினம் இங்கு 
அலைபவன் மனிதன் அலைகடல் போல 
அவன் அலைந்திங்கு வாழ்வில் என்ன கண்டான்!...


பணமெனும் மூட்டை படுத்துறங்குது 
அது பாட்டில் பகைவரை நினைத்தே 
இவன் தினம் விழிக்கின்றான்!.....
அறிவதை வளர்த்தவன் பேராசையால் 
இன்று அகிலமே தலைகீழ் ஆனது பார் !....


இனி முதுமையில் அமைதியும் 
முத்தான தூக்கமும் தத்துப் பிள்ளைதான் இங்கே... 
பொறுமையும் பண்பும் புவிதனில் அன்பும்
எவன் அவன் தேடி அடைந்தானோ 


அவனது வாழ்வே அடுத்திங்கு புதுமை 
அதை என்றும் வாழ்வில் நாம் உணர்வோமே!....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/24/2011

உன்னைமட்டும் தவிக்க விட்டேனா!.....

உன்னையே நினைந்து 
உயிர் உருகி தினம் என் 
உள்ளத்தில் எரிந்த அந்தப் 
பெரும் நெருப்பு அதை  நீ அறியாய்!.....


தன்னையே வதைத்த தாயிடத்தில் 
பிள்ளை உன் கோவம் நீதியன்றோ!...
வல் வினை அதைக் கடந்து வந்து உன்னை 
வாரியே அணைத்திடத் தவித்தவளை.......


புன்னுருவி என்று நினைத்தாயோ 
இந்தப் பேதைமை நெஞ்சை வாட்டுதையோ!..
கண்ணினைக் காக்க இமை மறந்ததாய் உன் 
கற்பனை அது மிக மிக அற்புதம் அற்புதம்!... 


விண்ணவரும் போற்றிடும் தாய்மை உன்னை 
நடு வீதியில் விட்டெறிந்ததெனப் புலம்பாதே!...
முன்வினைப் பயனது அறுத்தெறிந்து உயிர் 
மூச்சுள்ளவரை உன்னோடு சேர்ந்திருக்கவே 


இன்னல்கள் நிறைந்த இடு காட்டினிலே 
இதுவரை நான் பட்ட துயர் நீ அறியமாட்டாய்...
சொல்வது இலகு எதையும் வார்த்தைகளால் 
வாழ்க்கை சுகப்பட மாட்டாது தடைகள் இருப்பின்...


இது எல்லாமே விதியின் விளையாட்டு 
நீ இல்லாமல் போயாச்சு என்றோ என் மூச்சு!..........
இனியும் கல்லான உன் மனம் இளகி வரும் வரை 
நான் காத்திருப்பேன் உனக்காகக் கை தொழுதபடி!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/14/2011

பேசடா என் செல்லக் கிளியே!....

அன்னையின் பாடல் கேட்டு 
பிள்ளையின் தோற்றம் பாரு 
இந்த முல்லைப்  பூ சிரிப்பழகு 
முகத்தினை மறப்பார் யாரு !....


இன்னலைப் போக்கும் விழிகள் 
இதழ்களில் தேன் துளிகள்  
மெல்ல நீ அணைத்தால் போதும் 
சில்லென இதயம் குளிரும்!...........


என்னொளி தீபம் உன்னைக்
கண்டதும் இன்பம் பொங்கும் 
உன் நெஞ்சிலே நானும் சாய்ந்தால் 
கொஞ்சிடும் கவிதை வரிகள்!......


முத்தத்தால் மழை பொழிந்து
என் மேனியை நனைப்பவனே 
என் சித்தத்துள் உன்னைத்தவிர 
சிந்திக்க வேறு என்ன உண்டு!....


கத்துத்தா மழலை மொழிகள் 
என் கண் கண்ட தெய்வம் நீயே 
பித்தத்தால் உறைந்து போனேன் உன் 
பேச்சைத்தான் கேக்க ஏங்குகின்றேன்!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/11/2011

நோயிலும் கொடிய நோய் இதுதான் அன்பே!...

தப்புத் தப்பாய் புரிந்துகொண்டான் 
தன் தாயைத் தானே தள்ளி வைத்தான்
நித்தம் துயரில் வாடுகின்றான் இருந்தும் 
அவன் நினைப்பை மட்டும் மாற்ற மாட்டான்!...


எத்தனை நாள் தொடரும் இந்த 
ஒளியைத் தேடா வாழ்வு என்று 
தாயவளும் உருகுகின்றாள் இன்றும் 
தன்னிலை மறந்து கருகுகின்றாள்!....


வீணாகிப் போகும் இந்த 
வெறுப்பான காலம் எல்லாம் பின் 
நாம் விரும்பிக் கேட்டால்க்கூட 
நமக்காகத் திரும்பி வருமா .........!!!


உள்ளன்பை அறியா மனமே 
உன் அறிவை ஊரார்கூடி வாழ்த்தினாலும்
என் அளவில் ஏழைதான் நீ ............
எடுத்தெறிந்துப்பார்  உன் பிடிவாதத்தை


கல்லும் உன்னைத் தொழுது நிற்கும் 
இன்பக் கவிபோல் வாழ்வு இனித்திருக்கும் 
உன் ஒரு சொல் கேட்க்க உயிர்கள் தவிக்கும் 
உலகம் உன்னைக் கண்டு மகிழும் !...........


என்னதான் கற்றார் ஆயினும் 
உண்மை அன்பை உணராதவரை 
வாழ்க்கை என்னும் அழகிய தோட்டத்தில் 
வீணாய் செழித்த அகத்தி என்பேன் ........


சிறு துரும்பும்தான் நற் பயன் தரும் 
அகக் கண்ணைக் கவர்ந்து நின்றால் 
இது அறியா உறவுகள் என்றும் நாம் 
எது சொன்னாலும் கேட்க்க மாட்டார் !...


வாத்தத்தில் தீயதிந்த வாத்தத்தால் 
நாளெல்லாம் துன்பம் சேரும் இங்கே 
இனிய நாத்தத்தை இசைக்கும்போது வரும் 
இடிபோல்த்தான் சினத்தைத் தூண்டும்!....


பார் அன்பே உந்தன் நிலையை 
வெறும் பரிகாசம் ஆகிப்போச்சு 
இந்தக் காலத்தை வெல்ல நீயும் 
எடுத்தெறிவாய் உன் பிடிவாதத்தை
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/07/2011

வானம் கறுக்குது பார் ....


வானம் கறுக்குது பார் !
 வண்ண மயில் ஆடுது பார்! 
காற்று வீசுது பார்! 
கடலலைகள்  மோதுது பார்!


தவளை கத்துது பார்! 
தண்ணீர் சொட்டுது பார் !
மின்னல் மின்னுது பார்! 
மேகத்தில் இடி இடிக்க 
மழை வந்து கொட்டுது பார்!


தண்ணீர் பெருக்கெடுத்து 
தரை எங்கும் ஓடுது பார்! 
குப்பை கூளமெல்லாம் அதில் 
மிதந்து செல்வதைப் பார் !


முத்தன் வயலுக்கு 
வரப்பு கட்டி நிற்பதைப் பார்! 
அட்டை ஊருது பார்! 
நத்தை ஊருது பார்! 
பட்டுப் பூச்சி கொட்டுது பார் !


தம்பி குளிப்பதற்கும் 
அம்மா சமைப்பதற்கும் 
மண்ணில் உயிர் வாழ 
மரங்கள் செழிப்பதற்க்கும் 


உடுப்பு துவைப்பதற்கும் 
உண்டு களிப்பதற்கும் 
மண்ணில் மழை வேண்டி 
நீயும் மகிழ்ந்து துதி பாடு !                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/02/2011

இது தேவன் வரும் நேரம்!.....

அழுது அழுது தொழுத விழிகள் 
இறைவன் முகத்தைப் பார்க்குது இருள் 
அகற்றும் தேவன் முகத்தில் இருந்து 
கருணை ஒளியைக் கேக்குது !...........


விதியும் சதியும் போட்டி போட்டு 
வாழ்க்கை எங்கோ போகுது இதில் 
சதி வலையில் விழுந்த உயிர்கள் 
நீயின்றி சங்கடத்தில் நீந்துது!........


உருகும் மெழுகு போல இங்கே 
உள்ளம் உருகிப் போகுது!...........
எவரும் அறியா மனதில் துன்பம் 
எல்லை மீறிப் போனது!..............

கருணை உள்ளம் கொண்ட தேவன் நீ 
மண்ணில் பிறக்க வேண்டுமே உன் 
அருமை பெருமை அறிந்து  உயிர்கள் 
அன்பில் திளைக்க வேண்டுமே!.....

வறுமை என்ற கொடிய நோயை நீ 
விரட்டி அடிக்க வேண்டுமே இங்கு 
தரும சீலர் பிறந்து வந்து எங்கும் 
தர்மம் நிலைக்க வேண்டுமே!...........

ஒரு கொடியில் பூத்த மலர்கள் 
ஒற்றுமையாய் வாழ்ந்திட 
வளர் பிறைபோல் நன்மைகளை 
நீ வாரி வாரித் தந்திடு!...............


உலக நன்மை வேண்டித் தினம் 
உயிர்கள் உன்னை அழைக்குது 
விரைந்து வந்து நீயும் எங்கள் 
வேண்டுதலை நிறைவேற்றிடு!..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.