11/13/2012

காதோரம் காதல் சொல்லும்


காதோரம் காதல் சொல்லும்
உன்  பாடல் கேட்டால் போதும்
உடலும் மனமும் தீயில் எரியுது
அடி பெண்ணே உன்னாலே !......
என்னை அளவும் தொழவும்
விட்டுச் சென்ற ஆணவக்காரி நீதானே !....

தெருவோரம் நான் தூங்க
என் விழி நீரில் பயிர்  வாழ
உனக்கென்ன பெண்ணே சொல் என்
உயிர் மூச்சைக் கொண்டு சென்றாயே!

கனக்கின்ற இதயத்தில் இங்கே
உனக்காகவே   நான் வடித்த
கவிதைக்குள் அர்த்தப்  பாரம் அதை
இறக்கத்தான்   துடிக்கின்றேன் நீ
எனக்காகப் பிறந்தாயோ.... போ ..போ போ ....

மலைப் பாம்பு போல் உன் ஆசை என்
மனதை  விழுங்கிச் செல்லத்தான்
தடு மாறுதே!  என் உள்ளம் இருளானதே!
விடியாத பாதைகள் விரிகின்றதே!- அதில்
போதை இன்றி நெஞ்சம் அலை மோதுதே!

கனாக் காணும் உள்ளங்கள்  உலாப் போகுதே!
நிலா கூட என்னைக் கண்டு இடம்மாறுதே!
இதுதான் உன் காதல் தந்த பாடம் இனிக்
கண்ணில் கங்கை ஓடும் .........புது ராகம்
உனைச் சேரும் அதில் சோகம் எனதாகும்
அது போதும் போதும் போதும் பெண்ணே ...

                                                             (  காதோரம் காதல்....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7 comments:

  1. ரசிக்க வைக்கும் பாடல்...

    நன்றி...
    tm1

    ReplyDelete
  2. துப்பாக்கி பட சர்சை. முஸ்லிம் எதிர்ப்பு நியாயமா?

    http://rajamelaiyur.blogspot.in/2012/11/
    vijay-movie.html

    ReplyDelete
  3. நல்லாயிருக்குங்க சகோ..பிடிச்சது..

    ReplyDelete
  4. காதல் பாடல் அருமை! நன்றி!

    ReplyDelete
  5. காதோரம் காதல்....ரசிக்க வைக்கும் பாடல்...

    ReplyDelete
  6. தாளம்போட்டு பாடவைத்துவிட்டது
    பாடல்...
    அருமை அருமை...

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........