2/20/2013

செய் அல்லது செத்து மடி.....



குப்பைக்குள் கிடக்குதென்றும் குண்டுமணி
குப்பையோ ஏறுது பார்  கோபுரத்திலே!
அப்பப்பா உலகம் ரொம்ப மாறிப் போச்சுது
அதனால்தான்  துன்பம் எல்லை மீறிப் போச்சுது!

முகம் பார்த்து முடிவுகளைத் தானே வகுக்குறார்
மீறி முன்னேறிச் செல்வோரைப்  பின்னே இழுக்குறார்!
உறவுக்குக் கை கோர்த்து உயர்த்தி விடுகிறார் சிலர்
உட் பகையை மனதில் வைத்து ஒதுக்கி விடுகிறார் !

வளர்கின்ற சந்ததியின் வாயை அடைப்பதும்
வருமானம் பார்த்து இங்கே தலைமை ஏற்பதும்
இது நாகரீகம் என்று சிலர் ஏனோ நினைக்கின்றார்!
இதில் ஏதும் அறியாதவர்களும் இங்கே கூட்டுச் சேர்கின்றார்!

தங்க முலாம் பூசி விட்டால் அது தங்கமாகுமா!
இது  தப்பென்று தெரிந்து விட்டால் வந்த வெக்கம் போகுமா!
கருக் கலைப்புப் பாவமென்று எண்ணித் துடிக்கையில்
இப்படிக் கருக் கலைத்துச் செல்வோரை உலகம் ஏற்குமா!

உருப்படியாய்த் தகமைகளை ஊக்குவிப்பதும்
உணர்வொன்றிச்  சேவைக்கென தன்னை அர்ப்பணிப்பதும்
மிகப் பெரிய பண்புகளில் ஒன்றாகுமே இதை
உணர்ந்து  மனிதன் செயற்ப்பட்டால் நன்றாகுமே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

No comments:

Post a Comment

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........