9/22/2013

நிழலாய் என்றும் நீயிருந்தாய்


நிழலாய் என்றும்  நீயிருந்தாய்
நிஜமாய்  உன்னை நான் தொடர்ந்தேன்
நிழலும் நிஜமும் பிரியும் நேரம்
நின்மதி நிலைக்காதே!

உழலும் மனதைக் கேட்டுப் பார்
உண்மை உனக்கும்  புரியும் பார்
களவும் பொய்யும் கற்று மறவாக்
கண்கள் சொல்வதும் மெய்தானே?

வலியைத் தாங்கும் இதயம் என்ன
உன் போல் வலிமை நிறைந்ததா ?
என் வலியே நீதானடி பெண்ணே
ஏன் தான் வலிய வந்தாயடி ?

மனமே மனமே அழுவாதே நீ
மறந்தும் அவளை நினையாதே என
மறக்க நினைத்த நினைவெல்லாம் என்
மதியை வென்று கொன்றது ஏன்!

அன்பை முறிக்கும்  விஷம் எங்கே?
அதை அருந்தத் துடிக்குது மனம் இங்கே!
பெண்ணே என்னைத் தொடராதே இனி நீ
போகும் போதும் என்னை நினையாதே..

பஞ்சாய் பறக்குது உள்ளமடி என்னைப்
பாடாய் படுத்துது உன் நினைவு வெள்ளமடி
இனியும்  தஞ்சாவூருப் பொம்மையடி நான்
தலையை ஆட்டுவேன் நீ சொன்னபடி ..

எனக்கெனத் தந்த இதயமதை
அறுத்தெடுத்தெங்கோ போனவளே
என் உயிர் துடிப்பதனை அறிவாயோ?
இதற்கொரு நீதி  கிடையாதோ!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6 comments:

  1. வரிகள் - மனம் துடிதுடிக்கும் வலிகள்...

    ReplyDelete
  2. //பஞ்சாய் பறக்குது உள்ளமடி என்னைப்
    பாடாய் படுத்துது உன் நினைவு வெள்ளமடி

    என் உயிர் துடிப்பதனை அறிவாயோ ......
    இதற்கொரு நீதி உன்னிடம் கிடையாதே ..........//

    அருமையான பாடல் வரிகள்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. காதலே விஷம் தானே.

    இன்னொரு விஷம் கொடுக்கச்சொல்லி என்ன அது வேண்டுதலை?

    அதுவும் சரி தான்.

    ஒரு விஷத்தை இன்னொரு விஷம் தனது தானே
    முறியடிக்கவேண்டும்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  4. வலியைத் தாங்கும் இதயம் என்ன
    உன் போல் வலிமை நிறைந்ததா ?..
    என் வலியே நீதானடி பெண்ணே
    ஏன் தான் வலிய வந்தாயடி ?..

    சிறப்பான வரிகள்..

    ReplyDelete
  5. காதல் வேதனை படுத்தும் வலியை வரிகளில் உணர முடிந்தது! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. பஞ்சாய் பறக்குது உள்ளமடி என்னைப்
    பாடாய் படுத்துது உன் நினைவு வெள்ளமடி
    இனியும் தஞ்சாவூருப் பொம்மையடி நான்
    தலையை ஆட்டுவேன் நீ சொன்னபடி ..

    அருமை! ஓசை நயம் !

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........