10/23/2016

இன்னும் உறங்கிடும் ஞாபகமோ!



செந்தமிழ் போற்றிடும்  சேவக னே -உன்னைச்
சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே
அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள்
அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ!

கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு
கைவிர லாலெனை வென்றவ னே
கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா
கோடிச்சு கம்தரும்  மோகன மே!

என்னை ஈர்த்தவன்  நெஞ்சினி லே  - பொங்கும்
இன்தமிழ்க்  கற்பனைக் காவிய மே
தன்னில் சரிபாதி என்றவ னே -உள்ளம்
தஞ்சமென் றுன்னடி தேடுதிங் கே!

தென்னை மரக்கிளைக் கீற்றினி லே -நாளும்
தெம்மாங்கு பாடும் பூங்குயி லே
இன்னும் உறங்கிடும் ஞாபக மோ -அதில்
இன்றுமே நான்வரும் ஓர்கன வோ!

மல்லிகை முல்லையும் பூத்திடிச் சே -அந்த
மஞ்சள் நிலவதைப் பார்த்திடிச் சே
அல்லியும் தன்னிதழ் மூடிடிச் சே - இன்னும்
அந்தப்புறத் திலுன்னைக் காணலி யே!

கள்ளூறும் பார்வையைக் கண்டிட வே -உள்ளம்
காத்திருக் குமென்றன் காதல னே
துள்ளி யெழுந்துவா  இக்கண மே -மெல்லத்
தூண்டிடும் ஞாபகம்  வாட்டிடு தே!

அன்பெனும் இன்பச் சோலையி லே -இரு
அன்றிலும் கூடிடும் வேளையி லே
தன்னிலை மறக்க வைத்திடு  தே -அந்தத்
தென்றலும் உன்பெயர் சொல்லிடு தே!

சத்திய வாக்குத் தந்தவ னே - இன்னும்
சங்கடம் மெத்திடச் செய்வா  யோ
முத்தமிழ் வித்தகா கூந்தலி லே -வைத்த
முல்லைப்பூ வாடுமுன் வாரா யோ!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4 comments:

  1. அழகான கவிதை. உரிய படம். நன்றி.

    ReplyDelete
  2. marvellous
    poem...
    the portrait is a rare beauty.....

    ReplyDelete
  3. கவிதை அருமை சகோ
    த.ம.1

    ReplyDelete
  4. #சிறுகைவிரலாலெனை வென்றவனே#
    காரியக்கார காதலன் திரும்ப வருவானா :)

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........