வணக்கம் என் அன்பு உறவுகளே இன்றும் எனது மூச்சுக் காற்று
மூன்றின் தொடரை வழங்க இருக்கின்றேன்.உங்கள் ஆதரவு
உள்ளவரை இத்தொடர் தொடரும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இதோ அந்த இரண்டாவது தொடர் .....
(1 )வெற்றிக்கு சத்துரு
மூட நம்பிக்கை ,மனச்சோர்வு ,தேவையற்ற சந்தேகம்
(2 )போர்முனைக்கு இட்டுச் செல்லும் மூன்று
பெண்ணாசை,மண்ணாசை ,பொன்னாசை .
(3 )கலகம் இன்றி வாழ எப்போதும் .
சலனத்தை விட்டுவிடு
சந்தேகத்தை விட்டு விடு
பேராசையை விட்டுவிடு
(4 )உள்ளம் அமைதிபெற
தீயவைகளை மறக்க வேண்டும் .
தீய குணங்களைத் தவிர்க்க வேண்டும் .
தியானம் செய்ய வேண்டும் .
(5 )கொவத்தைத் தணிக்க
சொல்ல வந்தவைகளை பலமுறை காகித இதழ்களில் எழுதிக் கிழி.
குற்றவாளி படு முட்டாள் என்று நினைத்துக்கொள் .
உடல் களைக்க சிலமணிநேரம் வேலை செய் .
(6 )ஏமாற்றத்தால் வரும் மனவலியைப் போக்க.
முடிந்தவரை நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசு .
பிடித்தமான நற் செயலில் தீவிரமாக ஈடுபடு .
எப்படியும் வெல்வேன் என்று உறுதிகொள் .
(7 )எல்லா சமூகத்தினரிடமும் இருந்து அழிக்கப்படவேண்டிய 3 குற்றங்கள்.
கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு .
(8 )நாம் மறக்க வேண்டிய மூன்று பேதங்கள் .
சாதி மத பேதம் ,கற்றவன் கல்லாதவன் எனும் பேதம் ,
இருப்பவன் இல்லாதவன் எனும் பேதங்கள் .
(9 ) ஆற்ற முடியாத வேதனைதரும் மூன்று செயல் .
தன்மானத்தை சீண்டுதல்
காதலர் செய்யும் துரோகம் .
புறங்கூறக் கேட்டல் .
(10 )கொடுமையிலும் கொடுமை .
முதுமையில் தனிமை கொடுமை
இளமையில் வறுமை கொடுமை
பெண்ணடிமைத்தனம் கொடுமையிலும் கொடுமை .
(11 )தேவையற்ற கடன் பெறுவதால் வரும் மூன்று .
அன்பு முறிந்து அவமானம் பெருகும் .
வீண் சண்டை வளர்ந்து விரயத்தில் முடியும் .
அமைதியைக் குலைக்கும் பின் ஆயுளையும் முடிக்கும் .
(12 )முகம் வசீகரம் பெற .
சிந்தனையை சீர் செய் .
மனம்விட்டு சிரி
நின்மதியாகத் தூங்கு .
இன்று இதுபோதும் நானும்போய்த் தூங்கப் போகிறேன் நீங்கள் வாசித்துவிட்டு
தூங்கிவிடாமல் உங்கள் அருமையான கருத்தினை இட்டுச்செல்லுங்கள் என்
அன்பு உறவுகளே ......
