4/30/2014

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக..


உழைக்கும் மக்கள் வாழ்வுயர
ஒன்று சேருவோம் நாங்கள்
ஒற்றுமையாய் நின்றுலகில்
வெற்றி காணுவோம் .....

அடுக்கடுக்காய் உயருகின்றான் அரசியல்வாதி
அடிமைப் பட்ட ஏழைகளின்  உழைப்பையே நம்பி
பிணத்து மேல நடந்ததெல்லாம் போதுமடா சாமி
பிஞ்சு மனம் கல்லுடைத்தால் கிளம்பிடுமே சுனாமி ...

மரத்துக்கும் மனிதனுக்கும் பேதமுண்டடா
மாசு பட்ட சிலருக்கு எல்லாம் ஒன்றடா....
இனத்துவேசம் காட்டிக் காட்டி வெட்டி எறிவார்
ஈன்றெடுத்த தாய் மண்ணைத் தட்டிப் பறிப்பார்  ....

நடத்தை கெட்ட நாய்களுக்குப் புத்தியும் இல்லை
நம்பி நம்பி வாழ்வோர்க்குச் சக்தியும் இல்லை
குடத்துக்குள் எரியுதடா குத்து விளக்கு
கோவப் பட்டால் வந்திடுமே அந்த வழக்கு ...

படிச்சவனும் ஏமாந்து பல்ல இழிக்கின்றான்
பழக்க தோஷம் மாறாமல் கொல்ல நினைக்கின்றான் !
இனத்துக்குள் பாவப் பட்ட எம்மினத்தைப் பாரு
இரக்கமுண்டெல் எம்முடனே நீயும் வந்து செரு ....

தொழிலாளர் ஒற்றுமை தான் ஓங்கிட வேண்டும் 
தோல்விகளைத் தகர்த்தெறிந்து உயர்ந்திட வேண்டும் 
அநியாயம் செய்வோரை எதிர்த்திட வேண்டும் 
ஆண்டாண்டு காலமாக நலன் பெற வேண்டும் ....


                                                             
                                                
                                            கலியுகத்தில் இதுவும் கடந்து போகும்....

(படங்கள் :இணையத்தில் பெற்றுக் கொண்டது .நன்றி )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

15 comments:

  1. சிறப்புக் கவிதை மிக மிகச் சிறப்பு
    மே தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தொழிலாளர் ஒற்றுமை தான் ஓங்கிட வேண்டும்
    தோல்விகளைத் தகர்த்தெறிந்து உயர்ந்திட வேண்டும்//
    அருமையான கவிதை.

    தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்.
    வாழ்த்துக்கள்.
    சிறுவர் தொழிலாளர் வேண்டாம்.

    ReplyDelete
  3. பக்தி உள்ளத்திலும்
    பாய்ந்து ஓடும்
    சிவப்புச் சிந்தனைகள்!
    மே தினம்! வாழ்த்துக்கள்!
    த.ம.3

    ReplyDelete
  4. தொழிலாளிகளுக்கான கவிதையும், படங்களும் அருமை.

    அதிலும்
    "//பிஞ்சு மனம் கல்லுடைத்தால் கிளம்பிடுமே சுனாமி ...//" - அருமை . அருமை.

    ReplyDelete
  5. வணக்கம்

    இன்றைய நாளுக்கான சிறப்புக் கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    என்பக்கம் கவிதையாக
    எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. தொழிலாளர் ஒற்றுமை தான் ஓங்கிட வேண்டும்

    மே தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சிறப்பான கவிதை.

    மே தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. உழைக்கும் மக்கள் வாழ்வுயர
    ஒன்று சேருவோம் - நாங்கள்
    ஒற்றுமையாய் நின்றுலகில்
    வெற்றி காணுவோம்!..

    மே தின நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. "தொழிலாளர் ஒற்றுமை தான் ஓங்கிட வேண்டும்
    தோல்விகளைத் தகர்த்தெறிந்து உயர்ந்திட வேண்டும்" என்ற உண்மையை வெளிப்படுத்தியதில் கவிதை சிறந்து விளங்குகிறது.

    ReplyDelete
  10. உழைப்பின் மகத்துவம் புரியவேண்டும்
    ஒற்றுமையும் வெற்றியும் கிட்ட வேண்டும் ! என அழகாக முன் வைத்தீர்கள். வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  11. சிறப்பான வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. அருமையான கவிதை! மேதின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. ஒற்றுமை ஓங்கிட்டால் வெற்றிதானே
    அருமையான கவிதை சகோதரியாரே
    மே தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வாழ்த்துச் சொன்ன அன்பு நெஞ்சங்களுக்கு அம்பாளடியாளின் அன்பு
    கலந்த மேதின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !.

    ReplyDelete
  15. மே தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........