4/23/2017

பூமி வறண்டிடிச்சே!



நாட்டுப்புறப் பாடல்கள்!
***************************************

பூமி வறண்டிடிச்சே
பூகம்பமும் கிளம்பிடிச்சே!
சாமி மனசுக்குள்ள
போட்ட சாபம் கேட்டதாரு!

நாத்து நட்ட குடி
நாளும் கண்ணீர் வாக்குதடி!
ஊத்து நிலம் கெட்டு
ஊரும் ஊமை ஆச்சுதடி!

குண்டு மழை பொழிஞ்சு
குடியைக் கெடுத்ததாரு!
விவசாயி குடும்பத்த
வீதியில விட்டதாரு!

அரசு மனசு வச்சா
அடி ஆத்தி மழை வருமா!
பொல்லாத சோகம் சொன்னா
போன ஜென்மம்தான் வருமா!

மாடு மட்டும் சந்தையில ஏலம் போகுது!
மானபங்க பட்ட உசிர் இங்கே ஏங்குது!
சோறு தண்ணி இல்லாம வாழ்க்கை ஏதடி!
சொந்தக் கத சோகக் கத இத
சொன்னால் கேளடி!

வெள்ளையன வெளியேறச் சொன்ன தாரடி
விருந்துக்கு அழைக்கிறான் இங்கே பாரடி!
கூறு கெட்ட அரசியல மாத்துற தாரு
கொஞ்சம் கொஞ்சமா
நெஞ்சம் வேகுதே!
பஞ்சம் தீருமா!

தீயிலிட்ட கருவாடு என்ன பாரடி!
தீந்தமிழே நீ பதில இங்கே கூறடி!

மூலிகைய குழுசையா விக்குறானடி!
மூடருக்கு அவ ஆப்பு வைக்குறானடி!
என் தாத்தா பாட்டி சொத்து
அத அள்ளுறான்!
ஏமாந்த குத்தத்துக்கு குண்டத் தள்ளுறான்!

சொன்னா புரியுமா?
இந்த சோகம் தெளியுமா!

சாலையில ஓடுது நாலு சக்கரம்
இது சாஞ்சா புரியுமடி வந்த சிக்கனம்!
புகையோடு புகையாக மனுசன் போகிறான்
இது புரியாமல் தானடி இங்கே வேகுறான்!

கேட்டாக்கா நாகரீகம் ஏறிப் போச்சுதாம்!
கேழ்வரகு கஞ்சி தூசா ஆகிப் போச்சுதாம்!
உப்புக் கல்ல வைரமாப்  பாக்குறானடி
சிலத ஒப்புகொண்டா கண்ணீரும் இங்கே ஏதடி!
எல்லாளன் ஆட்சிக் காலம் நீதி வாழ்ந்ததாம்
அது  இல்லாத  அரசியல்தான் இங்கே வாழுது!

தீயிலிட்ட கருவாடு என்ன பாரடி
தீந்தமிழே நீ பதில இங்கே கூறடி!

----------------------------------------(பூமி வறண்டிடிச்சே )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2 comments:

  1. காலத்திற்கேற்ற பதிவு

    ReplyDelete
  2. "சாலையில ஓடுது நாலு சக்கரம்
    இது சாஞ்சா புரியுமடி வந்த சிக்கனம்!
    புகையோடு புகையாக மனுசன் போகிறான்
    இது புரியாமல் தானடி இங்கே வேகுறான்!"
    என்ற உண்மையை
    எவராவது உணருகிறோமா!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........