ஈழத் திருநாடே என்றன் தாய் நாடே!
உ(ன்)னைக் காணும் ஆவல் நெஞ்சினிலே
எந்நாளும் இங்கு பொங்குவதேன்!
வானம் பாடி சிறகை இழந்து
வாட்டும் இந்தக் குளிர் நாட்டில்
நாட்டம் இன்றி ஏனோ இங்கே
வெள்ளோட்டம் ஓடுது எந்நேரமும்!
பனிப் பூக்கள் தலை மேலே தினம் தூவ
இனி காச்சல் சளி நோயால் உடல் வாட
இது என்ன சாபம்! - அடி போடி
உன் மடி மீது நாம் தூங்கும் சுகம் வருமா!
நறு மணம் வீசும் மலர்க்கூட்டம்
உன் எழில் கொஞ்சும் தரைமீது
தினம் தினம் உறவுகள் வலம் வரவே
தீராத சந்தோசம் அது தீர்ந்து போனதின்று!
மாறாப்பு போட்ட மங்கை இவள்
மனசுக்குள் ஓடும் கங்கை வந்த
வீராப்பு அடங்கிப் போக விழிநீரால்
கோலம் போடுவதேன் இங்கே!
தாய் நாடே சொர்க்கம் சொர்க்கம்
அதைத் தயங்காமல் சொல்வதற்கு
ஏன் இந்த வெக்கம்!
பாய் போதும் நாம் தூங்க
பண்பாடு நிறைந்த எம் நாடே!
குயில் பாடும் பாட்டுச் சத்தம்
அது கேட்டால் போதும் போதும்!
மனசுக்குள் பட்டாம் பூச்சி
பட பட பட என்று பறந்திடவே
செந்தமிழாலே கவி பாடி
எம் உறவோடு நாம் சேரும் காலம் அது
எங்கே ....எங்கே ..எங்கே!
தேன் கூடு கண்களுக்குளே
தீராத மோகம் ஊட்ட
நான் பாடும் பாடல் இது
உனக்கங்கே கேக்குறதா?
( ஈழத் திருநாடே ...)
