7/30/2012

தெய்வம் இருப்பது எங்கே.....

பணம் படைத்தவன் தேடுகின்றான்
நல்ல குணம் படைத்தவனை அது
தேடி ஓடுகின்றது !!!!.................
தன்நலன் மறந்து தாயானாள் உயர்
தாகம் தீர்க்கும் நீர் போலானாள்
அன்னை இவள்போல் வாழ்வதற்கு
எண்ணம் கொண்டால் போதும். இனி நீ யார்?.....
                                                                                                 
இளமை தனிலே முதுமை கேட்டாள்
இறைவனிடத்தில் மனத்தைக் கொடுத்தாள்
உலக நன்மை கருதியே என்றும்
ஓயாது நன்னெறி பாடல் இசைத்தாள்!.....


குறுகத் தந்த குறளதனால்
கோடி நன்மை இவ்வுலகம் பெறும்
அறிவுச் சுடராய் விளங்கிய மனிதர்
ஆற்றிய தொண்டுக்கோர் எல்லை இல்லை!....


காந்தித் தாத்தா என்றாலே
கண்கள் வியந்து  நின்றாரே !..........
மாண்டும் இவர் புகழ் உலகமெல்லாம்
மங்க்காதிருப்பது எதனாலே ?......!!
                                   

நீண்டுகொண்டே போகும் இந்தத்
தேடல் என்பது தொடர் கதைபோல்
இனியும் வேண்டும் என்றே கேட்க்கும் கேள்வி
வீணே என்று நாம் உணர்வோம்!!!....... 
                                       

களவும் பொய்யும் நிறைந்த உலகில்
கடவுளைக் காண்பதும் பொய்தானே 
அதை உணரும் வகையில் உணர்ந்துகொண்டால் 
உள்ளது என்பதும் மெய்தானே ?.........!!


அறிவுச் சுடரை ஏற்றி வைத்து 
அன்பைத் தினமும் ஊட்டிவிட்டு 
மனிதநேயம் காத்து நிற்கும்  
மறைந்தும் மறையா  மா மனிதர்கள் எவரோ 


இவர்கள்தான் தெய்வம் என்று 
உணர்ந்தால் வாழ்வில் நன்மை உண்டு 
சினம் கொள்ளும் விவாதம் ஏனோ!...
உலகம் சீர்கெட்டுப் போன பின்னும்!!...

மனம் என்னும் கோவில் தன்னில்
மறைவாக உயர்ந்து நிற்கும் நற்
குணம் என்னும் பண்பே தெய்வம்
இது குறைந்தால் வாழ்வில் ஏது  இன்பம்!...


                                                    கடவுள் இருக்கிறாரா இல்லையா 
                                                    சொல்லு ?..சொல்லு?...சொல்லு???...
                                                     அட ச்சீ......இவங்க தொல்ல  
                                                     தாங்க முடியியல சாமி.....:):)                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8 comments:

  1. மனம் என்னும் கோவில் தன்னில்
    மறைவாக உயர்ந்து நிற்கும் நற்
    குணம் என்னும் பண்பே தெய்வம்
    இது குறைந்தால் வாழ்வில் ஏது இன்பம்!...//

    ஆழமான அருமையான சிந்தனை
    மனம் கவர்ந்த அழகான கவிதை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை தந்த நற்கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. மனம் என்னும் கோவில் தன்னில்
    மறைவாக உயர்ந்து நிற்கும் நற்
    குணம் என்னும் பண்பே தெய்வம்
    இது குறைந்தால் வாழ்வில் ஏது இன்பம்!...


    எனக்குப்பிடித்த வரிகள்

    ReplyDelete
    Replies
    1. மனம் என்னும் கோவில் தன்னில்
      மறைவாக உயர்ந்து நிற்கும் நற்
      குணம் என்னும் பண்பே தெய்வம்
      இது குறைந்தால் வாழ்வில் ஏது இன்பம்!...


      எனக்குப்பிடித்த வரிகள்

      Delete
  4. குணம் என்னும பண்பே தெய்வம். அருமையாகச் சொன்னீர்கள். மக்கள் மனங்களில் வாழும் மாமனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். நல்ல கவிதை. மிக ரசித்தேன்.

    ReplyDelete
  5. கவிதையை நச்சென்று முடித்துவைத்தீர்கள்!

    ReplyDelete
  6. அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்...

    நன்றி.
    (த.ம. 3)

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........