8/09/2014

அழுகிற குழந்தையின் குரலொலி கேட்டு



அழுகிற குழந்தையின் குரலொலி கேட்டு
அம்மா துடிக்கின்றாள்
அவள் அடி மடி மீது கையை வைத்தவன்
இடியாய் இடிக்கின்றான்

கொலைவெறி கொண்ட நாகமும் நரியும்
கூட்டாய்ச் சதி செய்ய
எதிரியின் கைகளில் மலர்களைத் தந்து
எங்கே நான் செல்ல ?......

விடியலைத் தேடும் பறவைகள் இவர்களின்
முடிவை யார் அறிவார் ?..!!
கருணையின் கடலே கற்பகத் தீவே
காப்பாய் மிக நன்றே .....

பொழுதுகள் புலருது பூக்களும் கருகுது
பூமியில் தினந்தோறும்
அழுபவர் குரல்களை நசுக்கிடும் கொடியவர்
அழிவுற வழி செய்வாய் ....

தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தாளமும் தப்பாமல்
எடு எடு வேலைத் தொடு தொடு நாளும்
எதிரியின் பலம் குன்ற ...

சூரனை வதைத்த நாயகனே
சுப்ரமண்ணிய பாலகனே
பூரண நிலவே பொற்குடமே
புதுயுகம் அமைத்துத் தந்திட வா ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11 comments:

  1. நடைமுறை வாழ்க்கையையும், முருக கடவுளையும் இணைத்திருப்பது அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  2. நல்ல வேண்டுதல் பலிக்கட்டும் !
    த ம 1

    ReplyDelete
  3. புதுயுகம் விரையில் அமையும் சகோதரியாரே

    ReplyDelete
  4. வணக்கம்
    அம்மா.
    பகைவனை மாய்த்திடும் கவி கண்டு மகிழ்ந்தேன்
    த.ம3வது வாக்கு

    ReplyDelete

  5. வணக்கம்!

    இருளும் அகன்றோட எண்ணம் உரைத்தாய்
    முருகன் திருவடி முன்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  6. முருகன் அருள் விரைவில் கிடைக்கட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. சூரனை வதைத்த நாயகனே
    சுப்ரமண்ணிய பாலகனே
    பூரண நிலவே பொற்குடமே
    புதுயுகம் அமைத்துத் தந்திட வா ....

    ReplyDelete
  8. முருகா என்றழைத்திட்டால்
    அருகே ஓடி வந்திடுவான்!
    சடுதியில் வந்து காத்திடுவான்
    கொடுந்துயர் எல்லாம் போக்கிடுவான்!!

    சகோதரி அருமையான கவிதை!! உங்கள் கவிதை வாசித்தவுடன் ஏதோஎங்களுக்கும் தோன்றவே எழுதிவிட்டோம் கவிதை போன்று??!! சில வரிகள்

    ReplyDelete
  9. உள்ளம் உருக வைக்கும்
    சிறந்த பாவரிகள்

    ReplyDelete

  10. வெந்தணல் போலெழும் வேதனைகள் மாறும்நற்
    கந்தன் அருளால் கனிந்து !

    புவனம் எரியப் புயலிடிவந் தாலும்
    சிவனடியார்க் கில்லை சிதைவு !

    அழகு அருமை வாழ்த்துக்கள் சகோ அம்பாள்
    வாழ்க வளமுடன்
    தம 8

    ReplyDelete
  11. தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
    தாளமும் தப்பாமல்
    எடு எடு வேலைத் தொடு தொடு நாளும்
    எதிரியின் பலம் குன்ற ...


    அருமை சகோதரி.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........