9/09/2012

பொன்னான வாழ்வு மண்ணாகி போமா!......

சிறகொடிந்த பறவைபோல
விழுந்து கிடக்கிறோம் நாம்
சிந்துகின்ற கண்ணீரில்தான்
தினம் குளிக்கிறோம் !!!!........

உறவிருந்தும் திரும்பிப் பார்க்க
நேரம் இல்லையே !!!............
உழைக்கும் வர்க்கம் எங்களுக்கே
வாழ்வில் உயர முடியவில்லையே !!....

பணம் படுத்தும் பாடு இங்கே
ரொம்பத் தொல்லையே !......
படுத்து உறங்க நேரம் தேடி 
மனம் அலுத்துப் போனதே !!........

பொருட்கள் விலை குறைந்தால் ஒளிய
இனி இங்கு வாழ்வு இல்லையே !!............
இந்தப் புரிதலினால் மனித வாழ்க்கை
தினமும் வெறுத்துப் போகுதே !!............

அடுத்து வரும் சந்ததியைக்
காத்துக்கொள்ளவே -கொஞ்சம்
வரும் பணத்தில் சேமித்து
காப்புறுதி செய்து கொள்வோமே !....

பணம் இருப்போர் தைரியமாய்
வீண்  செலவு செய்கிறார்!!!.........
இவர் படுக்கையிலே வீழ்ந்துவிட்டால்
குடும்பம் உய்யுமா ???................!!!


கடுகளவு சேமிப்பும் கை கொடுக்குமே !..
பின் கடவுள் இல்லை என்றெங்கும்
அவல நிலை நீங்குமே!..... ஆதலால்
ஒரு கணமேனும் இதை சிந்தியுங்கள் ....                                            
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9 comments:

  1. சிந்திக்க வைக்கும் வரிகள்... அருமை...

    ReplyDelete
  2. சேமிப்பின் தேவையை உணர்பவர் சிலர். அதை நடைமுறைப் படுத்துபவர் அதிலும் சிலரே ! விழித்துக் கொண்டார் பிழைத்துக் கொண்டார். நன்று தோழி.

    ReplyDelete
  3. சேமிப்பின் அவசியத்தைச் சொல்லும் இந்த கவிதை அருமை!

    ReplyDelete
  4. அருமையாக வரிகள்.
    //கடுகளவு சேமிப்பும் கை கொடுக்குமே !..
    பின் கடவுள் இல்லை என்றெங்கும்
    அவல நிலை நீங்குமே!..... ஆதலால்
    ஒரு கணமேனும் இதை சிந்தியுங்கள் .... //

    பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்
    என்னுடைய தளத்தில்

    தன்னம்பிக்கை -3

    தன்னம்பிக்கை -2

    ReplyDelete
  5. சேமிப்பின் அவசியத்தை வெகு அழகாய்,
    கவிதையாய்,நேர்த்தியாய். அருமையான வரிகள்.

    ReplyDelete
  6. //கடுகளவு சேமிப்பும் கை கொடுக்குமே !..
    பின் கடவுள் இல்லை என்றெங்கும்
    அவல நிலை நீங்குமே!..... ஆதலால்
    ஒரு கணமேனும் இதை சிந்தியுங்கள் ....//

    அருமையான வரிகள்....

    ReplyDelete
  7. சிந்திக்க வைக்கும் கவிதை.

    ReplyDelete
  8. இன்றைய உலகில் கட்டாயம் சேமிப்பு அவசியம்தான்! சிந்திக்க தூண்டும் கவிதை! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
  9. கவிதை சேமிப்பின் அவசியத்தை சொல்கிர விதம் நன்று

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........