Showing posts with label நினைவு அஞ்சலிகள். Show all posts
Showing posts with label நினைவு அஞ்சலிகள். Show all posts

11/26/2011

தீபங்கள் எரியட்டும் எண் திசையும்!....

கருவறை சுமந்த எங்கள் 
உயிர்களை இங்கே பல 
கல்லறை சுமந்து நிற்கிறதே!...
எரிகிற தீபம் திரும்பிடும் திசைகளில் 
எம் மாவீரர் முகங்கள் தெரிகிறதே!...


உருகிடும் இதயம் வடித்திடும் கண்ணீர் 
அது ஒளியதைத் தாங்கி நிற்கிறதே!..
இந்த இனியவர் பேசிடும் வார்த்தையைக்கேக்க 
ஒவ்வொரு உயிரும்  துடிக்கிறதே..............!!!!!!!


இங்கு மனமதை அடக்கி மௌனமாய் அழுதிடும் 
எங்கள் மக்கள் கூட்டம் கண்டாயோ .......
விடுதலை வேண்டிப் புதைகுழி சென்ற 
இந்தப் புனிதரை உலகம் அறியாதோ!......
சில தறுதலை எங்கள் வாழ்வினை அழித்த
சங்கதி இனியேனும் உலகுக்குத்  தெரியாதோ!...


குமுறிடும் உள்ளக் குமுறலை அடக்கக் 
குழந்தைகள்கூட மறுக்கிறதே..........!!!!
தெருவெளி எங்கும் பெரும் திரளென வந்து 
தீபங்கள் ஏந்தியே சென்ற உயிகளை உயிர்கள் 
மறுபடி பிறக்க வரமது கேட்டு மனம் அது உருகி நின்றனரே!..
கொடியவர் குடிகளையும் காத்திடும் இறைவா 
எங்கள் குலமது தழைக்க அருளாயோ.............
எம் மனமது கொண்ட துயரினில் நின்று 
மகிழ்ந்திட ஒரு வழி காட்டாயோ!............


இந்தக் கார்த்திகைப் பூக்களின் கண் மடல் திறந்து 
உந்தன் கருணை மழையைப் பொளியாயோ!....
நேற்றில்லை இன்றில்லை  அன்றுதொட்டு 
நேர்வழி சென்ற இனமிதனைக் 


காத்திட ஒரு வரம் கேட்டு தினம் 
ஊத்திய கண்ணீருக்கும் எல்லை இல்லை 
இதைப் பார்த்தவர் மனங்களும் உருகாதோ 
இந்தப் பார்வை குறைந்த உலகினிலே.......!!!!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/16/2011

ஆண்டொண்று செண்றதடா.....!!!

மின்னலாய்த் திரிந்தவனே ஓர் 
மெழுகுபோல் உருகியதென்ன ....!!!
விண்ணும் மண்ணும் அதிர உன் 
உறவுகள் அழுத குரல் கேட்டாயோ  ....

கண்ணை மூடித் தூங்குவதற்குக் 
காலம் இதுவென யாருரைத்தார்!..... 
வேலும் மயிலும் உடையவனோ ...
உனற்கு மிகவும் வேண்டியவனோ !.....

ஊரைத் தேடி உறவு சேர்த்தாய்
அந்த ஊரே உன்னைத் தேடி வந்த வேளை
நீ யாரைத் தேடிப் பறந்து சென்றாய் ......!!!

கல்யாண மாலை சூட்டிக்
காளை உன்னை அலங்கரித்து 
ஊரெல்லாம் பாட்டிசைக்க 
உறவெல்லாம் வாழ்த்துரைக்க 

ஊர்வலம் நீ வருவாய் என்று 
உள்ளத்தில்க் கனவு மலர 
மணக்கோலம் துறந்து நீயும் 
பிணக்கோலம் பூண்டதேனோ...!!!

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து 
சுற்றம் வாழ்த்த உனக்கொரு 
துணையொன்று வரும் முன்னே 
சுன்னம் இடித்து இங்கே சொர்க்கத்துக்கு 
வழியனுப்ப என்ன அவசரமோ 
இந்த சின்ன வயதினிலே.................!!!

முத்தான புன் சிரிப்பால் எங்கள் 
முழு மனதையும் கவர்ந்தவனே 
நித்தமும் உன் நினைப்பில் வாடுகின்றோம் 
நீ மீண்டும் வரவேண்டும் என்று 

ஆழ்கடலில் சங்கொலிபோல் 
அடிமனதில் வேதனையுடன் 
துடி துடிக்கக் காத்திருக்கும் 
உன் உறவுகளின் வேதனை தீர 

ஆண்டொன்று சென்றதென்று 
அயர்ந்து நீயும் எழுந்து எம் முன் 
மீண்டும் வந்து பிறந்துவிடு 
எம் மீளாத் துயரைத் தீர்த்துவிடு.....

கடந்த ஓராண்டிற்கு முன் இருபத்தைந்து வயதில் 
ஓர் சாலை விபத்தில் உயிர் நீத்த என் உடன்பிறவா 
அருமைச் சகோதரன்(முருக பக்தன்)  குமரேசன் 
நிர்மலனிற்கு இந்த ஓராண்டு நினைவஞ்சலியினைச் 
சமர்ப்பணம் செய்கின்றேன்..ஓம் சாந்தி சாந்தி சாந்தி .... 
             
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.