கருவறை சுமந்த எங்கள்
உயிர்களை இங்கே பல
கல்லறை சுமந்து நிற்கிறதே!...
எரிகிற தீபம் திரும்பிடும் திசைகளில்
எம் மாவீரர் முகங்கள் தெரிகிறதே!...
உருகிடும் இதயம் வடித்திடும் கண்ணீர்
அது ஒளியதைத் தாங்கி நிற்கிறதே!..
இந்த இனியவர் பேசிடும் வார்த்தையைக்கேக்க
ஒவ்வொரு உயிரும் துடிக்கிறதே..............!!!!!!!
இங்கு மனமதை அடக்கி மௌனமாய் அழுதிடும்
எங்கள் மக்கள் கூட்டம் கண்டாயோ .......
விடுதலை வேண்டிப் புதைகுழி சென்ற
இந்தப் புனிதரை உலகம் அறியாதோ!......
சில தறுதலை எங்கள் வாழ்வினை அழித்த
சங்கதி இனியேனும் உலகுக்குத் தெரியாதோ!...
குமுறிடும் உள்ளக் குமுறலை அடக்கக்
குழந்தைகள்கூட மறுக்கிறதே..........!!!!
தெருவெளி எங்கும் பெரும் திரளென வந்து
தீபங்கள் ஏந்தியே சென்ற உயிகளை உயிர்கள்
மறுபடி பிறக்க வரமது கேட்டு மனம் அது உருகி நின்றனரே!..
கொடியவர் குடிகளையும் காத்திடும் இறைவா
எங்கள் குலமது தழைக்க அருளாயோ.............
எம் மனமது கொண்ட துயரினில் நின்று
மகிழ்ந்திட ஒரு வழி காட்டாயோ!............
இந்தக் கார்த்திகைப் பூக்களின் கண் மடல் திறந்து
உந்தன் கருணை மழையைப் பொளியாயோ!....
நேற்றில்லை இன்றில்லை அன்றுதொட்டு
நேர்வழி சென்ற இனமிதனைக்
காத்திட ஒரு வரம் கேட்டு தினம்
ஊத்திய கண்ணீருக்கும் எல்லை இல்லை
இதைப் பார்த்தவர் மனங்களும் உருகாதோ
இந்தப் பார்வை குறைந்த உலகினிலே.......!!!!
உயிர்களை இங்கே பல
கல்லறை சுமந்து நிற்கிறதே!...
எரிகிற தீபம் திரும்பிடும் திசைகளில்
எம் மாவீரர் முகங்கள் தெரிகிறதே!...
உருகிடும் இதயம் வடித்திடும் கண்ணீர்
அது ஒளியதைத் தாங்கி நிற்கிறதே!..
இந்த இனியவர் பேசிடும் வார்த்தையைக்கேக்க
ஒவ்வொரு உயிரும் துடிக்கிறதே..............!!!!!!!
இங்கு மனமதை அடக்கி மௌனமாய் அழுதிடும்
எங்கள் மக்கள் கூட்டம் கண்டாயோ .......
விடுதலை வேண்டிப் புதைகுழி சென்ற
இந்தப் புனிதரை உலகம் அறியாதோ!......
சில தறுதலை எங்கள் வாழ்வினை அழித்த
சங்கதி இனியேனும் உலகுக்குத் தெரியாதோ!...
குமுறிடும் உள்ளக் குமுறலை அடக்கக்
குழந்தைகள்கூட மறுக்கிறதே..........!!!!
தெருவெளி எங்கும் பெரும் திரளென வந்து
தீபங்கள் ஏந்தியே சென்ற உயிகளை உயிர்கள்
மறுபடி பிறக்க வரமது கேட்டு மனம் அது உருகி நின்றனரே!..
கொடியவர் குடிகளையும் காத்திடும் இறைவா
எங்கள் குலமது தழைக்க அருளாயோ.............
எம் மனமது கொண்ட துயரினில் நின்று
மகிழ்ந்திட ஒரு வழி காட்டாயோ!............
இந்தக் கார்த்திகைப் பூக்களின் கண் மடல் திறந்து
உந்தன் கருணை மழையைப் பொளியாயோ!....
நேற்றில்லை இன்றில்லை அன்றுதொட்டு
நேர்வழி சென்ற இனமிதனைக்
காத்திட ஒரு வரம் கேட்டு தினம்
ஊத்திய கண்ணீருக்கும் எல்லை இல்லை
இதைப் பார்த்தவர் மனங்களும் உருகாதோ
இந்தப் பார்வை குறைந்த உலகினிலே.......!!!!



