9/30/2012

நேற்றைய பொழுது நினைவில் இல்லையே...


                                              ஞாபகசக்தியே உயிர்களின் சக்தி!..... 
                                                 
நேற்றைய பொழுது நினைவில் இல்லையே
இன்றைய பொழுதும் அரையும் குறையும்தான்
நாளைய பொழுது என்ன ஆகுமோ அதை
நினைத்தால் நெஞ்சில் பயமோ  !!!!...........

பார்த்துப் பழகுங்கள் உறவுகளே....
மனம் சிறைப் பட்டால் அதுவும் துயரே!...
இசை மீட்டிடத் துடிக்கும் வீணையின் நரம்பு
அறுந்தால் துன்பம் தாங்காது !......

நேற்றில்லை இன்றில்லை என்றுமே
மன நின்மதி வேண்டும் வாழ்விலே!..
நாம் ஏற்றிடும் துயரோ...  எந்நாளும்
இறுதியில் தரும் நோய் இதுதானே !....

வீக்க தூக்கம் பார்க்க வேண்டாம் நீ
விட்டுத் தள்ளு வரும் துயரை என்றும் 
ஏற்ற காலம் வரும் வரைக்கும் இதில்
எந்த நினைப்பும் உனக்கு வேண்டாம்!.....

போட்டியில் போகுது உலகமிங்கே
நீ எது சொன்னாலும் புரியப் போவதில்லை
உன்னை வாட்டிடும் செயலே அதிகமாகுமே
வருந்துவதால் இங்கு பயன் என்ன !.........

கூட்டிக் கழித்து நன்மை அறிவாய்
கொண்ட கொள்கை தாண்டி நீயும்
இதய சுகத்தில் நலனைக் காட்டு
இதை நீ தாண்டினால் சுடுகாடே !....

நாம் ஆட்டம் போடும் காலம் கொஞ்சம்
அடையும் இன்பம் அதிலும் கொஞ்சம்
வாட்டம் ஏன்தான் வாழ்வில் எமக்கு
வந்தவரைக்கும் அமைதி கொள்ளு !....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/29/2012

அபி நீ இன்னுமா தூங்கவில்லை !.....



கணனித் திரையில் முகம் புதைத்து
தினமும் காணும் காட்சி கண்ணுக்கு
இயமனாய் முடியுது பாரிங்கே !!!!......
இது தொடர்ந்தால் வாழ்க்கை என்னாகும் !.....

இளமை இருக்க முதியவர்போல்
இது என்ன கண்ணுக்கு கண்ணாடி!...
சிரமம்தானே வாழ்நாளில் இதைத்
தாங்கிச் செல்லும் சிறுவர்கழுக்கு !.....

முகத்தைப் பாரு வறண்ட தோற்றம்
முற்றிலும் கண்ணில் கருவளையம்!....
எதற்கும் ஒரு அளவு இருக்கு இது என்ன
இரவு பகலாய் கணணி முன்னே!...

அடக்க மறந்தால் பிள்ளைகளை
அடக்கி வைக்கும் பல நோய்கள்
குறுக்க குறுக்க பேசுகின்றாள் பார்!....
குறைகள் ஏதும் இல்லை என்று !!!!....

கூனி இருக்க முதுகு வலியும்  பெரும்
கொடைதான் பின்னே வேறேது !...
ஊதிப் பெருகும் உடல் குறைக்க
இவளை ஓட விடு தெருவினிலே !...

நாலு பேரு பார்க்கும் போது இதெல்லாம்
நல்லாய்த் தாண்டி இருக்கும் உனக்கு !...
வேற வேலை என்ன இருக்கு ............
வீட்டில் நடக்கும் கூத்தைப் பாரு !...

பாலும் தேனும் கலந்து முகத்தில்
பத்துப் போடு இந்த வரட்சி போக
ஆளப் பாரு அலங்கோலமாய்......!
அவளைக் கொஞ்சம் தூங்கப் பழக்கு !....

போற போக்கில் புத்தகங்கள்
பூச்சிகள்  உறங்கும் நல் மாடம் ஆகும்
ஆளுக்காளு கணணி இன்றி
நாட்டை ஆழ முடியாதென்றால்

தேடிப் பார்க்க நன் நூலதனை
என்ன தேவை இருக்கு கணணி இருக்க!!!..........
போற பொழுதும்  இதனில் போகும் இன்று
பிள்ளைகள் வளரும் முறையும் இதுதானே!!!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

உன்னைத் தேடிடும் கண்கள் இங்கே!....


நெஞ்சைத்  தொடும் இராகங்கள்
இவை கேட்டால் என்றும் மோகம்தான்
இன்னும் இன்னும் வேண்டும் என்று
இதயம் மகிழ்ந்து கேட்க்கும் இதையே!!....

தந்தாய் இன்ப வெள்ளத்தில்
தவழ்ந்தோம் நாமும் உன்னாலே
உந்தன் பாட்டே  எமக்கு யீவன்
என்றால் அதுவும்  மிகையாகாது !......

சின்னச் சின்ன மெட்டெடுத்து இசையில்
பெரும் சிகரம் என  நிற்கும் ஐயா
உன்னைக் காணும் ஆவல் எமக்கு
உள்ளத் திரையில் தினமும் ஓடுதிங்கே....

இந்தக் கங்கை நதியின் அடையாளம்
உன் கண்ணில் பட்டால் அது யோகம்
கல்லை முள்ளைத் தாண்டி வந்தும்
உன் காலைத் தொட்டால் அது போதும்!....

சொல்லுக்கிதமாய் மெட்டெடுத்து  மனம்
சொக்க வைக்கும் உன் திறனை என்றும்
வெல்ல இங்கே யாரால் முடியும் என
வியந்தே நிக்குது எம் மனமும் ஐயா!....

பையைப் பைய துயர் நீங்கும் உன்
பாட்டொலியைக்  கேட்டால் இங்கே
இந்த வரம் தந்த இறைவன் அவனை
இதயம் மகிழ்ந்து வணங்குகின்றோம்.....

இன்னும் ஜென்மம் பல நூறு
இணைந்தே வாழத் தமிழிசையோடும்
அள்ளிக் கொடுப்பாய் நல் வரமிங்கே
அதுவே போதும் எம் இறைவா வா!......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/28/2012

இதற்கொரு பதில் சொல் இறைவா !...

ஆணுக்குப் பெண்
சமம் என்று இங்கே
அழகாகத் தோன்றும்
தெய்வம்தான்  எங்கே!...

வீணுக்குப்  பகைமை
விளைகின்ற தேசம்
நாளுக்கு நாளிங்கே
முன்னேறும் போது!...

நீதிக்குத் துணையாய்
நீ இல்லை இங்கே
இந்தப்  பாதிப்புத்  தொடர்ந்தால்
உன்னைப் பாராட்டுவதெங்கே!...

கோதி பூத் தலையில்
குடிகொண்டும் என்ன
மன பாதிப்பு எமக்கு
மலை போல இருக்க!!!!.....

சோடித்த பொம்மை அவள்
சிரிக்கின்ற போது துயர்
ஓடித்தான் ஒழியும்
இதுதானே பெண்மை !.....

கூடித்தான் இகழ்வார்
கூட்டத்திற்கு அழகாய்
ஏன் எம்மைப் படைத்தாய்
பெண் என்று !!!!............

நாலுக்குள் இரண்டு என
நவில்கின்றபோதும் பலர்
காலுக்குள் சிக்கித் தவிக்கின்ற
மலர்போல் அவள் இங்கே!...

வீதிக்கு வீதி உருண்டாலும் கூட
இந்த ஜாதிக்குள் பேதம்
அது அகலாது என்றால்
வாழ்க்கை ஏன்தான் இப்படி !!!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/27/2012

சிறகொடித்த பறவை போல என்றும்....


ஊரு விட்டு ஊரு வந்து 
உருப்படியாய் ஒரு வேலை செய்து 
மாடி வீடு கட்டணுமாம் அவன் 
மனசுக்குள்ள போட்ட கணக்கு இது!....

யாரு பெத்த பிள்ளையோ ஒரு 
நாதியற்று அலைகிறான் என 
வேவு பார்க்கும் நிலையில் இங்கே 
வேகுது பார் அவன் உசிரு !..............

கோடி முறை சொன்னாலும் கொண்ட 
கோலம் அதில் மாற்றம் இன்றி 
தேடி இங்கே வருகின்றாரே!......
இவர்கள் திருந்துவது எக்காலம் !....

காடு வெட்டிப் பிழைத்தாலும் 
கவலை இன்றி வாழலாம் 
நம்ம நாடு போலதான் வருமா இங்கு 
நாயாய் பேயாய் அலைகின்றோம்!...

ஓலைக் குடிசை நடுவினிலும் 
உறக்கம் நெஞ்சைத் தழுவுமடா ...
அதற்கும் நாதியற்றுத் தானே நாமும் 
நடுத்தெருவில் நிற்கின்றோம் ..........

ஓடி அலுத்த கால்களும்தான்  
உள்ள பலத்தை இழந்ததிங்கே 
குளிர் நாடு தந்த பரிசு இதனால்
குனிய நிமிர முடியவில்லை.....

பாதி வயசு முடிவதற்குள் நல்ல 
பாட்டன் போல ஒரு தோற்றம் 
இதில் காதில் பூவை வைக்கும் கூட்டம் 
கண்டு தினமும்  மனதில் வாட்டம் !...

ஆறுதலைத்  தேடிப்போனால் 
யார் வருவார் எம் எதிரினிலே 
வேறு வழி இல்லையட தம்பி 
விடியும் வரை இந்தச்  சுவர்கள் 
நடுவிநிலேதான் எம்  வாழ்க்கை!!!!...........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/24/2012

விரைந்து வா நீ அது போதும் .



இரவைப் பகலாக்கினாய்
பகலை இரவாக்கினாய் என்
உணர்வில் கலந்தவளே நீ இன்று
என்னை என்ன செய்யப் போகிறாய் !....

மனதைக் குடைந்து மறுபடியும்
உன்னை நான் தேட என்னுள்
உறைந்து கிடந்து கொஞ்சம்
சந்தம் தர நீ மறுக்க நான் ஏங்கவோ!....

சொல்லில் பொருளில் மேலும்
மேலும் பிழைகள் கண்டு நான்
உன்னைத் திருத்த நீ என்னைத் திருத்த
நெஞ்சம் அலை மோதும் வலி தாங்கவோ...

சொன்னால் புரியாது நான்
உன்னால் படும் பாடு !!........
பின்னால் தொடராதே என நானே சொல்லி
உன்னை நானே அழைக்கின்றேன் !!!............

தேனும் பாலும் தெவிட்டவில்லை உன்னை
எந்நாளும் அணைக்கத் துடிக்கின்றேன் !...
இந்த வானும் மண்ணும் கூட இங்கே
இதற்காக அலைவதைப் பார்க்கின்றேன்!...

இனி போதும்  என நான் அடங்க மாட்டேன்
இளம் பூவே என்னை வாட்டாதே தினம்
நீயும் நானும் சேர்ந்திருந்தால் அதில்
திரளும் இன்பம் பல கோடிபெறும் !..........

நாம்  வாழும்போதே இந்த சுகம்
வளமாய் அமைய எந்நாளும்
இங்கு காணும் காட்சி அத்தனையும்
என் கவிதைப்  பெண்ணே   நீயாக வேண்டும் !!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/23/2012

கண் எனத் தகும் எழுத்துக்களா இவைகள் !.......


தூங்காமல் விழித்திருந்து தினமும் 
தூசி தட்டி பல நினைவுகளை 
ஏன்தான் இங்கு எழுதுகின்றார்கள்  
எல்லாமே பயன்தரும் செய்தி என்றோ !....

நாம் பாடும் பாட்டு அது ஒரு 
நால்வகைக் கூற்று பாரிதை!!!!........
கண்டதும் கேட்டதும் கற்றதும் 
உணர்ந்து நாம் பெற்றதும் 

எத்தனைக் கெத்தனை உண்மைகள் 
இத்தனை வகையாம் எழுத்தினிலே !....
நல்லதை மட்டும் நாம் நிறைப்போம் 
அதையே நலன்பெற இங்கே எடுத்துரைப்போம்!...

சொன்னவர் பெயரும் நிலைத்திடவே 
மிகு "சுகம் தரும்" செய்திகள் பகிர்ந்திடுவோம் 
இல்லையேல் துறவு நாம் பூண்டிடுவோம் 
இனியவை தொடர்ந்திட வாழ்துரைப்போம்!...

இல்லை ஓர் குறை இங்கு உலகினிலே 
இருக்கவே இருக்கிறது பல நன்னூல்கள் 
உள்ளதைச் சொன்னால்  இவை போதும் 
மனிதன் உருப்படியாக இங்கு வாழ்வதற்கு !...

என்னமோ போங்க உறவுகளே 
எமக்கும் உள்ளது  பற்றுதான் தமிழ்மீது 
இல்லையேல் ஏன் இங்கு கிறுக்குகிறோம்!...
எம்மவர் படித்துத்  திட்டிடவா !!!!.......

தொல்லைகள் நீங்கிட பாடுபடுவோம் எதிலும் 
ஒரு தோழமையோடு செய்தி பகிர்வோம் ......
நல்லதையே என்றும் நினைத்திடுவோம் 
நாம் தமிழர் என்றே தினம் வாழ்ந்திடுவோம்!....

பொல்லாப்பு இங்கு எமக்கெதற்கு!!!!.......
புவி போற்றும் நல் வாழ்வு கூட இருக்கயிலே! ..
எல்லோரும் மகிழும் நிலை வேண்டும் 
இதற்காக எழுதுங்கள் அன்பு உறவுகளே 

கண்டதைக் கேட்டதைக்  கற்றதை மற்றதை 
அற்புதம் அற்புதம் என மனம் மகிழ்ந்து 
உங்களைப்  பிறரும்  வாழ்த்திட போற்றிட எழுதுங்கள் 
எழுதிடும் எழுத்தினைக் கண் என மதித்திங்கு..........!

                                           

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/21/2012

தேடு உனக்குள்ளேதான் அது ....



மருதாணி போடாமலே
சிவக்கின்றதே கன்னம்
ஒரு தாவணி போட்ட
அந்நாள் முதல் !!!!..........

எழிலாய் நடை பயிலக் கற்றுக்கொண்டாள்
இதமாய் பேசும் அழகைப் பெற்றாள்
ஒரு தாய் உணர்த்தும் செயலைக் கூட
எளிதில் புரியும் ஆற்றல் பெற்றாள் !....

இதுதான் பருவ மாற்றம் என்றோ ....
எனக்கும் வியப்பை ஊட்டுதிங்கே !!!...
பூனையும்  நாயும் ஏனைய யீவன்களும்
தாய்மை அடைந்தால் தங்கப் பதுமை தானோ !!!....

யார் எவர் இதனைக்
கற்றுக் கொடுத்தார்!....
யாவையும் புதுமை இறைவன்
படைப்பில் என்றும் !!!!!..............

தீது நாம் பழித்தல் இங்கே  
தெய்வம் இல்லை என்றால்
இது எதுவும் நிகழாது என
கோடிடு மனதில் நீயும்

கொண்டு வந்த செல்வம் என்ன !!....
நாம் கொண்டு போகும் செல்வம் என்ன !..
ஒன்றும் இல்லை உலகினிலே
உயிர்கள் மீது காட்டும்  அன்பைத் தவிர ...

நாம் வந்ததற்கு மூன்று சாட்சி
எம்மை வாழ வைக்கும் மன சாட்சி
என்றும் பொழுதுகள் மகிழ்வாய் இருக்க
இனியவை  பேசு நீ அது போதும் !!..........

நொந்தவர் மனதை நோகடிக்கும் மாபெரும் 
நோக்கம் இவை என்றுமே தவறென்று
வந்தவர் யாவரும் அறிந்திருந்தால்
வரும் துயர் எல்லாம் நீங்கிடுமே!!..........

சிந்தனை செய் இதை நல் மனமே
தீங்கில்லை இதனால் சுகம் வருமே!...
நிந்தனை வேண்டீர் உலகினிலே
நிஜம் இல்லை எதுவும் என்ற பின்பும் ....

சண்டைகள் வேண்டாம் எமக்கென்றும்
சமத்துவம் இருந்தால் அது போதும் என
என்றிதனை  மனிதன் உணர்கின்றானோ
அன்றுதான் உலகம் அமைதி பெறும் ....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/19/2012

அன்று போல் என்றுமே ....


என்னைப் பெத்த ராசா உனக்கு
நான் எழுதும் கவிதைப் பூக்கள் இதோ!....
இன்னும் நூறு ஜென்மம் இங்கே
உனக்கே மகளாய் பிறக்க வேண்டும் .

கண்ணுக்குள்ளே எம்மை  வைத்துக்
காத்த உன்னைக் கலங்க வைக்க
என்ன பாவம் செய்தேனோ
எனக்கும் ஒன்றும் புரியவில்லை!!!.....

பொன்னைப்போலே என்னை மதித்தாய்
பூச்சூடித்தானே நீயும் மகிழ்ந்தாய்
என் அன்னை இல்லாக் குறையைக் களைந்த
ஐயா நீயும் ஏன் நடை பிணம் ஆனாய்!!!........:(

கண்ணில்லாத உலகம் இதில் உன்
கண்மணி நானும் தனித்தேன் என்றோ
அள்ளித் துயரை நெஞ்சில் நிறைத்தாய்
ஐயோ பாவம்  நான் என்ன செய்வேன் !!!....

பெண்ணாய்ப்  பிறந்த பாவம் இதற்க்கு
இரு பொழுதும் கண்ணில் கண்ணீர் எதற்கு
உன்னைப் பிரிந்தால் இந்த உலகை வெறுக்கும்
என்னை விட்டுப் போக நினைக்காதே!!!....:(

ஒற்றையடிப் பாதையிலே உன்
பின்னால் தொடரும் இன்பம் போதும்
நீ கற்றுத் தந்த நன்னெறிகள் எனக்கு
காலம் முழுவதும் கை கொடுக்கும்!...

பிச்சை எடுத்துப் பிளைத்தாலும்
பெண் பெருமையாக வாழ்ந்திடலாம்
இச்சைக் கடிமையான மனிதர்கள்
உடன் இருந்தால் அதுவும் கறைதானே!...

விட்டுத் தள்ளு துயர்களை என்றும்
வீண் வருத்தம் உடலுக்காகாது
எம்மைப் பெற்று  வளர்த்த  தந்தை நீ அழுதால்
இந்தப் பேதை மனம் அதைத் தாங்காது !!!....

வெட்டி முறிந்து வேலை செய்து
எம் விருப்பம் போல நீ நடந்தாய்
அந்தக் கெட்டித்தனத்தில் விளைந்த முத்து
என்றும் கீழோர் தயவை நினைக்காது .....

அச்சம் ஏனோ ஐயா உனக்கு!!!............
ஆண்டவன் எம்  பக்கம் இருக்கையிலே
இடர்களைத்  துச்சமாக நினைத்தால் போதும்
கார் இருளைக் கடக்கவும் நல் வழி பிறக்கும்!....

நீ தச்சுத் தச்சு போட்ட சட்டை
தாறு மாறாய்க் கிழிந்தாலும் அவைகளை
என் பெட்டிக்குள்ளே பூட்டி வைத்தேன்
உன் பாசம் விட்டுப் போகாமல் !.........

இனியும் என்னைத் தட்டிக் கழித்து மேலே செல்ல
உனக்குக்  கெட்டித்தனமும் உண்டோ சொல் .......
தலையில் குட்டி வளர்த்த செல்லக் கைகள் பற்றி
நானும் கூட வருவேன் உன் பின்னாலே !!!.........

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/14/2012

சந்தம் இது சந்தம் என .....



சந்தம் இது சந்தம் என
எல்லோரும் கொண்டாட வந்தேன்
தென்றல் காற்றே நில்லு
புது ராகம் சொலிச் செல்லு
தென்றல் காற்றே நில்லு
புது ராகம் சொலிச் செல்லு

சிந்தும் நதி எங்கே?
கடன் வாங்கும் என் தோழி
சொன்னார் ஒரு கேலி
இதில் உண்மை என்னடி என் தோழி?
                                        (சந்தம் இது சந்தம் )
கங்கைக் கரை ஓரம்
நீ வந்தால் அது  போதும்
இன்பம் என்றும்  பொங்கும்
தன்னாலே !
விண்ணும் உடன் கை தட்டும்
கண்ணில் அங்கே நீர் சொட்டும்
நான் சொல்லும் கவி கேட்டே
மனம் கூத்தாடும்

 உன்னில் என்னைக் காண
அடி என்னில் உன்னைக் காண
சொல்லில் புது அர்த்தம்
என்றும் தனியாகும்!
புல்லுக்கிறைத்தாலும்
என்னை நெல்லுக்கிறைத்தாலும்
மண்ணில் என்றும் பயன் நான்
தருவேனே
                               
பன்னீர் மழை தூவும்
பொன் மேகம் என்னைத் தாங்கும்
இவள் இல்லை எனில் இங்கே
உயிர் வாடும் !
அல்லிக்  கொடியே நீ
என்னைத் தொடும் போது
என்னுள் சுக ராகம்
என்றும் அலை மோதும்!

கன்னித் தமிழ் இன்பம்
என் சொல்லில் குறைவா?
அது இல்லை எனில் இங்கே
நீ வர வேண்டும்
உன்னைத் தொழ நான்
நீ என்னுள் உறைவாய்
எங்கும்  கண்ணுக்களகாய்
மனம் பூத்தூவும்!
                          (சந்தம் இது சந்தம் என)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/10/2012

பாரதியார் கவிதைகள் !........

அன்னையின் திருவடி
போற்றிடும் மகாகவி
உன் எழிற்   கவிதையே
என்றும்  எம்  உயிராகும்!!!!.......

வன்முறை ஒழியவும்
வளம் பல பெருகவும்
பொன் எழுத்தாலே
புகுத்தினாய் நல் அறிவதை!!.....

இன்னமும் பாடிட
இனிக்குதே தேன்  என !!!...


என்ன உன் ஞானம் !!!!...........
எழில் வனம் தோற்றிடும் ........

செந்தமிழ் காவலா
தீந்தமிழ் உன்னதா !!!......
கொண்டதோர்  தாகம் அதனால்
கொட்டியதே கவிதைத் தேன் மழை¨.....

வென்றது வென்றது இன்றுமே
உன் பெயர் சொல்லியே
மகுடம் ஏற்குது எம் தமிழ்
கவிதைகள் கண்டீரோ!!!...

வெண் குடை நிழலில்
உன் சிலை வலம் வரும்
இன்னொரு நாளைக் கண்டிடவே
ஏங்குது எம் மனம் மகாகவியே!......

சாதிகள் ஒன்றென நீ முழங்க அன்று
வந்தது  சங்கடம் உனக்கு பல நூறு!...
ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும்
மத யானைபோல் துணிந்தங்கு நின்றாயே!!!..

மா தவம் செய்தோம் மாந்தரும் நாம்
மண்ணினில் சுதந்திரம் பெற்றிடவே
நீதியை நீ அன்று  உரைத்ததனால்
நீங்கியதே பல  அடிமை விலங்குகள் இங்கே!!!........

ஏழை எளிய மக்களுக்கும் உன்
உழைப்பால் நன்மை நீ தந்தாய்
நாளைய சந்ததி நல் வளம் பெறவே
எந்நாளும் கவிதை நீ வரைந்தாய் !!....

அதிலும் பாமர மக்களும் பயன்பெறவே
உன் பாட்டினில் புதுமையை நீ படைத்தாய்!...
அந்தத் தீவிர முயற்சியின் பயன் இன்று
திரளுது கடலலைபோல் புதுக் கவிதைகள் பார்!!....


ஆயிரம் மலர்கள் தூவியே உந்தன்
காலடியினைத்   தொழ நாம் விரும்புகின்றோம்..
எம் தேவைகள் அறிந்த மானிடனே உயர்
தீந்தமிழால் உன்னைப் பாடுகின்றோம்!!.......

வாடிய பயிர்கழும்  உயிர்த்தெழும் இன்று
வான்மழைபோல் உன் நினைவதனால்
கூடியே கும்மி கொட்டிடுவோம் எங்கள்
குலமது தழைக்க வழி வகுதவனே உனை நினைந்து!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/09/2012

பொன்னான வாழ்வு மண்ணாகி போமா!......

சிறகொடிந்த பறவைபோல
விழுந்து கிடக்கிறோம் நாம்
சிந்துகின்ற கண்ணீரில்தான்
தினம் குளிக்கிறோம் !!!!........

உறவிருந்தும் திரும்பிப் பார்க்க
நேரம் இல்லையே !!!............
உழைக்கும் வர்க்கம் எங்களுக்கே
வாழ்வில் உயர முடியவில்லையே !!....

பணம் படுத்தும் பாடு இங்கே
ரொம்பத் தொல்லையே !......
படுத்து உறங்க நேரம் தேடி 
மனம் அலுத்துப் போனதே !!........

பொருட்கள் விலை குறைந்தால் ஒளிய
இனி இங்கு வாழ்வு இல்லையே !!............
இந்தப் புரிதலினால் மனித வாழ்க்கை
தினமும் வெறுத்துப் போகுதே !!............

அடுத்து வரும் சந்ததியைக்
காத்துக்கொள்ளவே -கொஞ்சம்
வரும் பணத்தில் சேமித்து
காப்புறுதி செய்து கொள்வோமே !....

பணம் இருப்போர் தைரியமாய்
வீண்  செலவு செய்கிறார்!!!.........
இவர் படுக்கையிலே வீழ்ந்துவிட்டால்
குடும்பம் உய்யுமா ???................!!!


கடுகளவு சேமிப்பும் கை கொடுக்குமே !..
பின் கடவுள் இல்லை என்றெங்கும்
அவல நிலை நீங்குமே!..... ஆதலால்
ஒரு கணமேனும் இதை சிந்தியுங்கள் ....                                            
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/08/2012

யாருக்குத்தான் இங்கே துன்பம் இல்லை !.....


துன்பம் துன்பம் துன்பம் என்றே
துவண்டு விழுதல் நன்றோ சொல்லு !...
இன்பமான வாழ்வு அதுவும் உந்தன்
மனதில்தான் உண்டெனக் கொள்ளு !....

வம்பு தும்பு பண்ணாமல் இடர்
வாட்டும் செயலை செய்யாமல்
என்றும் வாழக் கற்றுக் கொண்டால்
இதையம் அமைதி கொள்ளும் அதனால்!...

பட்ட துன்பம் மறந்து வாழ
பகவான் நினைவே பெரிதென எண்ணி
பத்து நிமிடம் தியானம் செய்தால்
மனம் பஞ்சாய் பறப்பதை உணர்வீரே !...

கெட்ட எண்ணம் நற் குடி கெடுக்கும்
கீழோர் செயலை நினைக்காதே ........
திட்டம் போட்டு தவறு இழைத்தால்
தீமை என்றும் விலகாதே !!..............

நல்ல மனதிற்கு சோதனைகள்
எந்நாளும் வருவது துயர்தானே !...
இந்த இன்னல் தீர்க்கும் வழிகளில் ஒன்று
இன்னும் இருளில் கிடப்பவரை நினைப்பதுவே!....

                                                  சோமாலியா !!!!!!...............

                                       
                                                  இந்தியா !!!!!.............

                                             
                                               இலங்கை !!!!............

இங்கே ஆடம்பரமாய் வாழ முடியவில்லை
அழகு சேர்க்க மேலும் வழிகள் இல்லை
தேடிச் சென்ற இன்பம் கிட்டவில்லை
தீதே இந்த வாழ்க்கை என்றால்

உணவு தண்ணி இல்லாமல்
ஒட்டிப் போகும் உடல்தனிலே
மிச்சம் இருக்கும் உயிர் படும் துயரை
நினைத்துப் பார்த்தால் போதுமடா !....

ஒரு கச்சைத் துணியைக் கட்டிக் கொண்டும்
கஞ்சி கிடைத்தால் போதும் என்றே நல்ல
நெஞ்சம் இருந்தால் அந்த நினைப்புத் தோன்றும்
அதுவும் இல்லை என்றால் உன் துன்பம் என்றும் வீணே!..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/07/2012

.பின்தொடர் வாழ்வு இனிக்கும்!.......


யாசிக்கும் கரங்களை நேசிக்க மறந்து
நாம் சுவாசிக்கும் காற்றிலே இங்கு
இருந்தென்ன  பயனோ !..........என
யோசிக்க வைக்கும் மனிதர்கள் இவர்கள் !...

கால் பட்ட மண்ணும் பொன்னாகும்
கை தொட்டால் துன்பம் கரைந்தோடும்
தேசத்தின் நன்மை தன் நன்மை என்றே
பெரும் தியாகத்தால் வாழ்வில் உயர்ந்தாரே!...

அறிவுக்கும் அன்புக்கும் குறைவற்ற மேதைகள்
அகங்காரம் இல்லாத ஆனந்த ஜோதிகள்  இவர்கள்
உருவத்தை மனதிலே   நிறுத்தி வைத்தாலே
உள்ளத்தில் என்றும் தெளிவு பிறக்கும் !...........

ஆங்காரம் கொண்ட சில மனிதர்களுக்கும்
வண்டின் ரீங்காரம் கூட தாங்காது என்றும்!....
நாம் வாழும் வாழ்க்கைப் பாதைகள் இங்கே
நலமாக அமைய பெரும் துணை வேண்டும் எனவே

தொடருங்கள் இனிய  நல் இதயங்களே
தூயவர் இவர்கள் பாதச் சுவடுகளை
கொடிபோல படரும் அறியாமை நீங்கும்
கொடை  வள்ளல் ஆகும் குணம் தன்னால் வளரும்!...

கண்களில் பட்ட தெய்வங்கள் இவர்கள்
கருணைக்குக் கடலென சொன்னாலும் தகும்!....
விண் போற்ற இங்கே வாழ்ந்தாலும் கூட
வீணாக புகழுக்கு கொடி ஏந்தவில்லை !!!!.....

பிறர் வாழ்த்த வாழும்
குணம் ஒன்று இருந்தால் 
பிறவிக்குப் பெருமை
தன்னாலே சேரும் !.......

மிதம் மிஞ்சும் கர்வம்
அழிவுக்கே அர்த்தம்
இதை ஏற்றுக்  கொண்டால்
வாழ்க்கை இதமாகத்  தோன்றும் !....

நிலையில்லா செல்வம்
தினந்தோறும் தேடி
அழியாது இனியும் நாம்
மனிதராய் வாழவே  இவர்களைத்தான்!!!......
                                                                
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/06/2012

பூந்தளிர்த் தென்றல்க் காற்றே...

பூந்தளிர்த் தென்றல்  காற்றே
பூ வாடை வீசும் பெண்ணே!
பாவாடைத்  தாவணியில் வந்ததேனோ!
குளிர் நீரோடை போல நெஞ்சைத்
தொட்டுச் சென்றதேனோ!

மானாட மயிலும் ஆட
மனம் போல நீயும் ஆட -இந்தக்
குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேக்கிறதா?
உன்றன்  கொலுசும்தான் தாளம் போடப் பார்க்கிறதா?

முல்லைப் பூப்போல் என்றும்  சிரிக்கின்றாய்
முக அழகாலென்னை வதைக்கின்றாய் !..
பெண்ணே என்னைக் கொன்றுவிடு
இல்லை என்றால் இங்கே வந்துவிடு ......

என் எண்ணம் எங்கும் உன் விம்பமெடி
நான் ஏழை ஆனேன் என் பைங்கிளியே ...
இரு கன்னம் தொட்டு நான் மகிழ
ஒளி  மின்னல் பட்டுத் தெறிக்காதோ!

சின்னச் சின்னக் கதை பேசி
சிணுங்கும் உன்னை நான் அணைக்க
வெட்கப்பட்டு செந்தாமரைபோல்
இரு விழிகள் மூடி என்றன்
தோழில் வந்து சாய்ந்து விடு...

என் அத்தை பெத்த ரத்தினமே!
அழகு மயில் சித்திரமே !
ஒத்தையில உன் நினைப்பால்
ஒதுங்கி நிக்குதடி நித்திரைதான்.....

                                              (பூந்தளிர்த் தென்றல்....) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/01/2012

அணையைத் தாண்டுது துயரம் இங்கே



அணையைத் தாண்டுது                           
துயரம் இங்கே அம்மா வருவாளா!.......
ஆதிசக்தி ஆனவளே ஆயிரம் 
கண்கள் உடையவளே நீதி தவறிய
மனிதரை அழித்திட  நீயே 
இங்கு வருவாயா.... நீதி தவறிய 
மனிதரை அழித்திட நீயே 
இங்கு வருவாயா...............
                        (அனைத் தாண்டுது)
இதயம் சுருங்கி விரிகிறதே 
தாயே எதற்க்காக............
இன்னும் உயிர்கள் துடிக்கிறதே 
தாயே எதற்க்காக...........
நரியும் புலியும் புன்னரி நாயும் 
நம்மைத் துரத்துது  எதற்க்காக!!!....

நானிலம் காக்கும் தாயவளே 
நல்லது கெட்டது அறிந்தவளே 
விதியை சதியை மதியால் வெல்லும் 
நன்மை நமக்கு அருளாயோ........

ராமகாவியம் படைத்திடவே 
சீதையென்று அவதரித்தாய் 
மானிடர் வாழ்வின் இன்னல்கள் போக்கும் 
மார்க்கம் ஒன்று அருளாயோ.....

எரியும் நெருப்பின் நடுவினிலே 
இன்னல்கள் பெருகும் நிலையினிலும் 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ........... 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ.......
                              (அணையைத் தாண்டுது)   
   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

அறியாமை அழித்திடும் நல் உயிரை....



இருப்பதை எல்லாம் எடுத்துக்கொள்
பெரும் இன்னலைத் தந்து வதைத்துக்கொள்
உருப்படியானது மனிதனுக்கு இவ்
உலகினில் என்றுமே தன் மானமடா!!....

அடுக்கிடும் நகையில் அர்த்தமில்லை...
அழகது என்றும் நிலைப்பதில்லை
எமைத் திடுக்கிட வைக்கும் உணர்வு அது
தீயவர் என்ற பெரும் பளிச்சொல்லே!!.......

குன்றினில் இட்ட தீயாக மனம்
குமுறிடும்  என்றுமே  தணியாமல்
கன்றையும் ஒதுக்கும் தாயுள்ளம்
கசிந்திட்ட   வதந் "தீ" அதனாலே!!!.......

கொன்றிடும் துயரது போக்கிடவே
தற் கொலையிலும் ஆவல் பெருகிடுமே
நன்றிதோ நமக்கு அறியாமை !!........
நல்லவர் உயிரைப் பறிக்கும் என்றால்!....

சிந்தை செய் மனமே எந்நாளும்
சிறப்புற நல் வார்த்தை பேசிடவே
கண்டதை வைத்தும்  வெறும் கற்பனையால்
களவுற எதையும் உரைக்காதே !!!.................

நொந்துதான் போவார் நல்லவர் இங்கே
வார்த்தை அம்புகள் கீறிய வடு அதனால்
குந்தகம் அற்ற செயல்த் திறன் கொண்டு
கண்டுகொள் உண்மை அது என்னவென்று!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.