காலை இளந் தென்றற் காற்றே
கண் சிமிட்டும் நேரம் இதோ!
பூவும் இலையும் தலையை ஆட்டப்
புன்னகை வருகிறதே!
சோலை வண்ணம் என் எண்ணம்
கூடும் நேரம் இந்நேரம்
மாமன் நெஞ்சில் மஞ்சம் போடும்
தோழி நான் தானே!
( காலை இளந் )
தாயைப் போன்ற உள்ளத்தில்
தாவிக் குதிக்கும் கிள்ளை நான்
காலம் எல்லாம் நம் சொந்தம்
காண வேண்டும் ஊர்கோலம் ..
ஆசை உள்ள நெஞ்சுக்குள்
ஆலவட்டம் நான் போட
மீசை துடிப்பதேன் மச்சானே! - நீ
பேசும் வார்த்தைகள் நான் தானே?
நாம் கூட்டுச் சேர்ந்த பொழுதினிலே
ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான்
அடடா சிரித்திடும் வெண்மேகமே!
ஊரைக் கூட்டித் தாலி கட்டி
உறவை வளர்த்த மச்சானே
நீ நாரைப் போல சேர்ந்திருந்தால்
எந்நாளும் இங்கே கொண்டாட்டம்தான் ......
( காலை இளந்)