Showing posts with label சிந்தனைத் துளிகள்.. Show all posts
Showing posts with label சிந்தனைத் துளிகள்.. Show all posts

1/02/2012

சிந்தனைத் துளிகள்.


(1 ) பிறரைத் தூற்றி மகிழ்வுகாணாது உன்
      பிறவியைப் போற்றும் வகையறிந்து நடப்பாயானால் அதுவே  
      பிறருக்கும் உன் பிறவிக்கும் செய்யும் பெரும்பயனாகும்.

(2 ) உள்ளத்தின் உணர்வு ஒழுக்கம் குன்றியோர்
     ஓதும் அறிவுரை என்றும் கொடும் விஷத்திற்கு  சமனானது.

(3 ) குணங்கெட்ட மனிதன் கோடிரூபாய்  கொடுத்தாலும் அவை
      பிணத்துக்கு இட்டெடுத்த மாலைபோலானது.

(4 ) இறைவன் கொடுத்த வரமேயாயினும் மனிதன் தன்
       தகுதியை மறந்து நடப்பானாயின் வரும் துன்பமானது
       என்றும் மரணத்துக்குச் சமமானது.

(5 ) இடமறியாது பகிரும் துயரானது நிறைநீரில்
       கையிலிருந்த கயிற்றை நழுவவிட்டு 
       கருநாகத்தின் வாலைப் பிடித்த கதையாய் மாறும்.

(6 ) நல்லவர் ஆயினும்  ஊரார் பேச்சுக்குச் செவிசாய்த்து 
        தன்னைத்தானே  வருத்தும் குணமுடயவராயின்
        இவர்பால் வரும் நல்லன எல்லாம் கெடும்.

( 7 ) வருகின்ற துன்பம் எல்லாம் வரப்போகும் 
        பேரின்பத்துக்கு அறிகுறியென்று கருதும் நற்குணம் இருந்தால் 
        அதுவே வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக அமையும்.

(8 )  பிழைபொறுத்தருளும் நெஞ்சம் ஒன்றே புவியினில்
        நாம் பெறுதற்கரிய பெரும்பேறு ஆகும்.

(9 ) கொடுக்கும் நற் குணங்களைக் குறுக்கி தன்பால்
       எடுத்து வைக்கும் எப்பொருளும் தரும் சுகமானது
       பொருமிக் கிடக்கும் வயிற்றுக்குப்  பொரிசொறு  சேர்ப்பதுபோலாகும்.

(10 ) மனிதன் தன்நம்பிக்கையைத்  தரவல்ல மதங்கள் மீதும்  
         அதன் தத்துவங்கள் மீதும்  கொள்ளும் சந்தேகமானது 
         உடலைப் பிளந்து உயிரைப் பரிசீலிக்கும் செயலுக்கு இணையானது.



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/19/2011

வாழ்க்கையில் வெற்றிகொள்ள

உடலைக் கோவிலாக்கு
உன் உள்ளத்தைத் தெய்வமாக்கு
சத்தியத்தின் வழியில் நீ நீயாகவே இரு
உன் எதிரில் வரும்
வஞ்சனைத் தீயையும்,வதந்தியையும் அன்பெனும் நீரூற்றால்
அணைத்துச் செல்
முடியவில்லை எனில் அடித்துச் செல்
வெற்றி என்றும் உனதாகும். 
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/06/2011

துன்பம்....

நோயினால் வரும் துன்பம்
மருந்தினால் தீரும்
வருவாயில்லாத துன்பன்
வேலை செய்தால் தீரும்
பிள்ளைகளால் வரும் துன்பம்
புரிந்துணர்வால் தீரும்
உறவுகளின் பிரிவினால் வரும் துன்பம்
காலப் போக்கில் தீரும்
ஊரார் பேச்சினால் வரும் துன்பம்
உதறித் தள்ளினால் மட்டுமே தீரும்!
நல்லவனால் மட்டுமே துன்பப்பட  முடியும்
கூடவே திடமான சகிப்புத் தன்மையும் இருக்குமாயின்
வாழ்வில் வரக்கூடிய அத்தனை துன்பமும்
வலுவிழந்து போகும்!
துன்பம் வாழ்க்கைத் தத்துவத்தை
முழுமையாகக் கற்றுத்தரவல்ல
மிகச் சிறந்த ஆசான்!
இது சாபமல்ல
வரம்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/19/2011

சிந்தனைத் துளிகள்.

(1 ) பிறரைத் தூற்றி மகிழ்வுகாணாது உன்
      பிறவியைப் போற்றும் வகையறிந்து நடப்பாயானால் அதுவே  
      பிறருக்கும் உன் பிறவிக்கும் செய்யும் பெரும்பயனாகும்.

(2 ) உள்ளத்தின் உணர்வு ஒழுக்கம்குன்றியோர்
     ஓதும் அறிவுரை என்றும் கொடும் விஷத்திற்கு  சமனானது.

(3 ) குணங்கெட்ட மனிதன் கோடிரூபாய்  கொடுத்தாலும் அவை
      பிணத்துக்கு இட்டெடுத்த மாலைபோலானது.

(4 ) இறைவன் கொடுத்த வரமேயாயினும் மனிதன் தன்
       தகுதியைமறந்து நடப்பானாயின் வரும் துன்பமானது
       என்றும் மரணத்துக்குச் சமனானது.

(5 ) இடமறியாது பகிரும் துயரானது நிறைநீரில்
       கையிலிருந்த கயிற்றை நழுவவிட்டு 
       கருநாகத்தின் வாலைப் பிடித்த கதையாய்மாறும்.

 (6 ) நல்லவர் ஆயினும்  ஊரார் பேச்சுக்குச் செவிசாய்த்து 
        தன்னைத்தானே  வருத்தும் குணமுடயவராயின்
        இவர்பால் வரும் நல்லன எல்லாம் கெடும்.

( 7 ) வருகின்ற துன்பம் எல்லாம் வரப்போகும் 
        பேரின்பத்துக்கு அறிகுறியென்று கருதும் நற்குணம் இருந்தால் 
        அதுவே வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக அமையும்.

(8 )  பிழைபொறுத்தருளும் நெஞ்சம் ஒன்றே புவியினில்
        நாம் பெறுதற்கரிய பெரும்பேறு ஆகும்.

(9 ) கொடுக்கும் நற் குணங்களைக் குறுக்கி தன்பால்
       எடுத்து வைக்கும் எப்பொருளும் தரும் சுகமானது
       பொருமிக் கிடக்கும் வயிற்றுக்கு பொரிசொறு  சேர்ப்பதுபோலாகும்.

(10 ) மனிதன் தன்நம்பிக்கையைத்  தரவல்ல மதங்கள்மீதும் 
         அதன் தத்துவங்கள்மீதும் கொள்ளும் சந்தேகமானது 
         உடலைப் பிளந்து உயிரைப் பரிசீலிக்கும் செயலுக்கு இணையானது 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.