ஆடும் மயிலே
அகவும் மயிலே
பாடும் குயில் நான்
அழைக்கின்றேன் .....
உன் தோகை விரித்தொரு
ஆட்டமாடிடத்
தோன்றும் அழகில்
நான் வியக்கின்றேன் ...
(ஆடும் மயிலே )
காடும் அழகுறும்
கவியும் அழகுறும்
சுகம் தேடும் விழிகளில்
மயிலிங்கே .......
வாடும் மனத்தின்
வாட்டம் தீர்த்திடும்
வண்ணத் தோகையின்
எழில் இங்கே ......!!
(ஆடும் மயிலே )
குமரன் என்ற
அழகன் அமரக்
குறைகள் போக்கும்
மயிலே வா ............
மழையும் பொழியும்
கலையும் வளரும்
தமிழன் வணங்கும்
மயிலே வா .........
(ஆடும் மயிலே )
http://gmbat1649.blogspot.ch/2013/12/blog-post_17.html
வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே !
இன்றைய பகிர்வானது "கவிதை எழுதலாமே"என்ற தலைப்பின் கீழ்
எங்கள் பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய பாலசுப்பிரமணியம்
ஐயா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதப்பட்டுள்ளது .
தாங்களும் இந்த அழைப்பினைப் பின் தொடர்ந்து கவிதைகள் எழுதலாம்
தங்கள் கருத்தினையும் பகிர்ந்துகொள்ளலாம் .மிக்க நன்றி உறவுகளே .
ஐயா அவர்களின் இந்த முயற்சிக்கும் அழைப்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ..........
வாழ்க தமிழ் ...




