வானம் கறுக்குது பார் !
வண்ண மயில் ஆடுது பார்!
காற்று வீசுது பார்!
கடலலைகள் மோதுது பார்!
தவளை கத்துது பார்!
தண்ணீர் சொட்டுது பார் !
மின்னல் மின்னுது பார்!
மேகத்தில் இடி இடிக்க
மழை வந்து கொட்டுது பார்!
தண்ணீர் பெருக்கெடுத்து
தரை எங்கும் ஓடுது பார்!
குப்பை கூளமெல்லாம் அதில்
மிதந்து செல்வதைப் பார் !
முத்தன் வயலுக்கு
வரப்பு கட்டி நிற்பதைப் பார்!
அட்டை ஊருது பார்!
நத்தை ஊருது பார்!
பட்டுப் பூச்சி கொட்டுது பார் !
தம்பி குளிப்பதற்கும்
அம்மா சமைப்பதற்கும்
மண்ணில் உயிர் வாழ
மரங்கள் செழிப்பதற்க்கும்
உடுப்பு துவைப்பதற்கும்
உண்டு களிப்பதற்கும்
மண்ணில் மழை வேண்டி
நீயும் மகிழ்ந்து துதி பாடு !


