Showing posts with label பொன்விழா வாழ்த்து. Show all posts
Showing posts with label பொன்விழா வாழ்த்து. Show all posts

6/30/2015

வாழிய வாழிய பல்லாண்டு !

                                               


வண்ணத் தமிழமுதை வார்த்துக் கொடுக்குமுனை  
எண்ணம்போல் பாடவந்தோம்  இன்றிங்கே  !-கண்ணுள்
இறையாக நாம்காணும் எம்குருவே !  உன்னால்                            
நிறைகுடம்  ஆனதெம்  வாழ்வு !

செந்தமிழ் கற்றுநாம்  சீருடன் வாழ்ந்திடவே   
வந்தனை செய்கின்ற  வள்ளலே !-கந்தன் 
அருள்பெற்று வாழிய வாழியபல் லாண்டு 
திருப்பெற்ற பாக்கள் செறிந்து !

பொன்விழா காணுபுகழ்   பாரதி தாசனே !
உன்னுயிரை  ஒண்டமிழைக் கொண்டுவந்தாய் !-இன்பக் 
கவிமழை ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தோம் !
புவிமேல் பொலியும்  புகழ்!

நல்லறம் கூறிடும் நற்றமிழ் நாயகன்  !
சொல்லறம் காத்திடும் தூயவன் !-  வல்ல 
கவிஞன் !கலைஞன் ! களிப்போடு வாழ்க !
குவியட்டும் இன்பம் கொழித்து !

நாடிக் கொடுத்திடும்  நன்மையை எண்ணியே  
தேடிநாம் வந்தோம்  செளுங்கவிகள்  !-பாடிப் 
பரவசம் ஊட்டிடும் பாட்டரசே !என்றும் 
உரம்நீயே  எங்கள் உயிர்க்கு!

                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/15/2014

பொன்விழா வாழ்த்து !

                                                                             
                                     


கவிஞர் கி. பாரதிதாசனார்

பொன்விழா வாழ்த்து!



பொன்விழாக் காணுபுகழ்ப் பாரதி தாசனே!

தன்னுயிர்போல் கொண்டாய் தனித்தமிழை! - இன்புற்று

வாழ்கவே பல்லாண்டு! வண்டமிழாய் எந்நாளும்

சூழ்கவே இன்பம் சுரந்து!



பார்புகழ வாழ்கின்ற பாரதி தாசனே!

சீர்பெறுவாய் அன்னை செழுந்தமிழால்! - நேர்நிகர்

இல்லாதான் என்றே உலகம் இயம்பிடவே

எல்லாப் பெருமையும் எய்து!



களிக்கின்ற கம்பன் கழகத்தைக் காத்தே

ஒளிர்கின்ற பாவலனே! ஓங்கிச்  - செழிக்கின்ற

இல்லறம் காண்க! இனியதமிழ்ச் சீரேந்தி

நல்லறம் காண்க நயந்து!



அல்லும் பகலும் அயரா துழைத்திங்கு

வெல்லும் கவியே! வியன்தமிழே! - வல்லகவி

பாரதி தாசனே! பல்லாண்டு வாழ்கவே!

பூரண விண்மதியாய்ப் பூத்து!



வல்லகவி கம்பன் மலரடியை நன்கேத்தி

நல்லகவி பேசுகின்ற நாவலனே! - தொல்லைகளைப்

போக்கும் புலமைமிகு பாரதி தாசனே!

பூக்கும் தமிழுன் பொழில்!

                                                                           



                                                                     கவிஞர் அம்பாளடியாள். சுவிற்சர்லாந்து.

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.