7/29/2014

தாய் மண்ணை முத்தமிட வேண்டும்


மண்ணின் மணமது குன்றாமல்
மலர்கள் மலரும் எம்நாடே!
பெண்ணின் பெருமை புகழையுமே
போற்றிப்   பாடும்  எம்நாடே!
விண்ணில் இருந்து தேவருமே
வாழ்த்தி  வணங்கும் எம்நாடே
கண்ணின் மணியே கற்கண்டே-உன்னைக்
காணத்    தவிக்குது மனம் இன்றே!

உறவுகள் கூடி மகிழ்ந்திடவும்
உன்னத  வாழ்வு வாழ்ந்திடவும்
திறவுகோல் ஒன்று கிட்டாதோ!
தென்றலைத் தாங்கும் எம்நாடே !
பிறமொழி   பேசும் அயல்நாட்டில்
பெருமைகள் குன்றிட வாழ்கின்றோம்
திறமைகள்      இருந்தும் பாரம்மா
திவ்விய  ஒளியே கேளம்மா!

நிலைமைகள் இங்கு வேறாகும்-இதனால்
நித்தமும்     துன்பங்கள் ஆறாகும்!
தலைமுறை காத்திட வழியின்றித்
தவிப்பவர் உள்ளமும் நீறாகும்!
அலைகடல்    அலையே தான் வாழ்க்கை
ஆசைகள் எமக்கே  மாறாகும்
கலைநயம்  மிக்க எம்நாடே  இங்கு
காண்பவை யாவும்  சேறாகும் !!

பனைமரக்  காடும் தென்னைகளும்
பாசமாய் வளர்ந்த பிள்ளைகளும்
நினைவினில் வந்து வாட்டுதடி
நெஞ்சுரம்    கொண்ட எம்நாடே
வினைகளை அறுத்து எறியாயோ!
வேங்கைகள் எம்மின்  அடையாளம்!
மனைகளில்  இன்பம் பொங்கிடவே
மாபெரும் மகத்துவம் நிறைநாடே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/19/2014

மருவத்தூர் அம்மாவே போற்றி போற்றி !


தவியாய்த்  தவிக்கும் இதயத்தின்
        தாகம்  தீர்த்திட வந்தவளே
புவிமேல் உனதருள் இல்லையெனில்
        பூவும் பிஞ்சும் தோன்றிடுமா !!
கவியாய்ப் பொழிவேன் எந்நாளும்
      காவல் தெய்வம் நின் புகளை
செவிதான் மகிழ வாழ்வனைத்தும்
       செம்      பட்டுடுத்திய அம்மாவே !

மருவத் தூராள் எனக் கேட்டால்
   மலரும்   சிரிக்கும் தன்னாலே !
புருவம்     வியந்து  பார்த்திடவே 
   பூமிப்   பந்தாய்த் தெரிபவளே
உருவம் உனது உருவமொன்றே
   உள்ளக் கதவைத் தட்டுதடி
வருவோர் போவோர் அனைவருக்கும் -நல்
   வாழ்வு  அளிக்கும் அம்மாவே ..!!

கொஞ்சும் மழலைக் குரல் கேட்டு
          கூட  வருவாய் என் தாயே
நெஞ்சம்  இனிக்க நினைவுகளில் -நீ
      நித்தம்  இருந்தால் போதுமடி
அஞ்சும்    மனநிலை மாறிவிடும்
    ஆத்தா உனதருள் கிட்டிவிட்டால்
தொஞ்சும் போக வழியுண்டோ
   தோல்வி   எம்மைத் தழுவிடினும் !

வேப்பிலைக்கு ஈடாக என்றும்
  வினைகள்        தீர்க்கும் பராசக்தி
காப்பெடுக்கும் பக்தருக்கு   நீ 
  கருணை           பொழியும் மகாசக்தி !
பாப்புனைய வந்தேனே என்
  பகுத்தறிவை வளர்த்து விடு
நாப்புரளும்       போ தெல்லாம்
     நல்ல        துணை யாபவளே !!
 
படம் :இணையத்தில் பெற்றுக்கொண்டது .நன்றி    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/15/2014

எண்ணமெல்லாம் நிறைந்த சிவனே போற்றி போற்றி



இயல்பு   நிலை மாறாமல்
    ஈசன்   அடியைப் பற்ற வேண்டும்
முயலும் வரை  முயன்று நானும்
   மும்    மூர்த்தி  புகழ் பாட வேண்டும்
கயல்   விழிகள்  ஏங்காமல் இங்கு
   காத்  தருள்வாய்  எம் பிரானே
வயல்  வெளியில்  வரப்பினைப் போல்
  வார்த்தை   என்றும் உயர்வு பெற  !

எண்ணத்தில் உன்னை வைத்து
  ஏற்றமுற  வடித்த நற் பா -தேன்
கிண்ணமெனத் தோன்றிடவே எம்
   சிந்தையிலே வந்த மர்வாய்
வண்ணத்தில்  சிறந்த வண்ணம்
    வாழ்வ    னைத்தும் வந்துதிக்க
விண்ணவரும் போற்றும் வகை
    வார்த்தைகளைத் தந் தருள்வாய்

காரைக்கால்  அம்மையைப் போல்
   களிப்புடனே நாம் வாழ
தேரைக்கும்  வாழ்வளிக்கும் நின்
   திருவடியே சொர்க்க மென்பேன்.!.
நீரைப்போல் நிலத்தைப் போல்
   நீங்காத     வரமளிப்பாய்  இறைவா -ஜென்மக்
கூரைக்குள் அவதரித்த எமை என்றும்
   வேரைப்  போல் காத்தருள்வாய்...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/05/2014

எண்ணற்ற துயரம் வந்து என் நெஞ்சை அடைக்கிறதே

 

எண்ணற்ற துயரம் வந்து
என் நெஞ்சை கொல்கிறதே!
புண் பட்ட உள்ளத்திலே
பூகம்பம் எழுகிறதே!

இதை அடக்க வழியைத் தான் தேடுகிறேன்- நான்
இருந்தும் ஊமையாய் வாடுகின்றேன்!
கனவு சிதைவதைக் காணுகின்றேன் எதிர்
கால முடிவைத் தான் தேடுகிறேன்!

பறவை என்றால் சிறகுகள் வேண்டும்
பேசிப் பழக உறவுகள் வேண்டும்
நிலைமை இங்கு வேறானதே என்
நினைப்பும் இதனால் நீறானதே!

கலகம் நிறைந்த பூமியிலே
காணும் யாவும் பொய்யானதே
உலகம் இதைத் தான் விரும்புதடா
ஊமை நாடகம் ஆடுதடா!

இறந்தவர் தொகையை எண்ணி எண்ணி
இருப்பதை விடவும் மரணம் மேல்
சிறந்தவர் எவர் தான் சொல்லிங்கே அவர்
சிந்தையில் எட்டுதா பாரிங்கே!

ஒருதலைப் பட்சத் தீர்வு  இதனால்
ஒழிந்திடும் அழகிய தீவு!
உயிர்களைக் காப்பது இனி யாரு ?
எல்லாம் உணர்ந்தவரே  பதில் கூறு ?

                                             (     எண்ணற்ற துயரம் வந்து..)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/02/2014

என் தேகம் பட்டுப் போனாலும்...



என் தேகம் பட்டுப் போனாலும்
இந்த  சந்தேகம் விட்டுப் போகாது!

அதைச் சொல்லு சொல்லு சொல்லு மன்னா
எனை அள்ளு அள்ளு அள்ளு கண்ணா
உயிர்த் தீயில் தீயில் நீயே தானே
உருவாகி நின்றாய் தேனே தேனே...

என் தேகம் பட்டுப் போனாலும்
அந்த  சந்தேகம் விட்டுப் போகாது ...

பஞ்சணை என்று நெஞ்சினிலே
தூங்கத் துடிக்கின்றாய்
பகலும் இரவும் என் விழியைப்
பார்த்தே ரசிக்கின்றாய்!

கொஞ்சிடும் போது இதழ்களை வருடிக்
கோலம் போடுகின்றாய்!
விஞ்சிடும் போது விரல்களைப் பிடித்தே
விருப்பைத் தொடருகின்றாய்!

இது ஏனோ ஏனோ!
பிடிவாதம் தானோ!
விடை கூறு கண்ணா?
விழி தேடும் மன்னா!

இது காதல் தானடி பெண்ணே என் மீது
கருணை காட்டடி கண்ணே!

சிற்றிடை மீது பற்றிய தீயைத்
தீண்டித் தணிகலாம் வா....
ஒத்தையில் வந்தால் முத்தமாய்த் தந்து
உயிரைக் குடிக்கலாம் வா .........

பெண்

இது ஆசை ஆசை பொல்லாதது
அந்தம் ஏதும் இல்லாதது
இழந் தென்றல் உன்னால் சூடானது ...
இனி எங்கும் முன்னே நில்லாதிது

ஆண்

உன் தேகம் பொன்னானது
என் மோகம் என்னாவது ?
சந்தேகம் உண்டானது இதில்
சந்தோசம் சதிராடுதே!.....

                   (என் தேகம் பட்டுப் போனாலும் ...)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.