5/06/2017

காத்திருந்த கனவுகள்!


தேவதை என் விழிதன்னில் பட்டாயடா
இன்பம் தந்தாயடா!
என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே!
எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே!
காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய்
கருவிழியுள் வாழுகின்ற ஒளியானாய்!
தேடலில் இவள் வாழ்வு கழியுதே!
தேவகானம் ஒன்று மட்டும் தொடருதே!
நான் தேடும் சொர்க்கம் நீயடா!
நாணத்தை விட்டுவந்தேன் பாரடா!
குழலோசை காதில் கேட்காதோ!
குயிலென்றன் ஆசையைத் தீர்க்காதோ!
உன்னைக் கண்ட நாள்முதலாய்த் தூக்கம் போனதே
இவள் நெஞ்சில் ஏக்கம் வாழுதே!
காதலுக்குப் பச்சைக்கொடி காட்டாயோ!
கன்னி மன வீணையதை மீட்டாயோ!
காத்திருந்த என் கனவைப் பாரடா
பதில் ஒன்று கூறடா!
பூபாளம் இசைக்கின்ற நேரம்
இவள் நெஞ்சில் ஏனிந்தப் பாரம்!

நிலா முறத்திற்கு மிக்க நன்றி!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.