Showing posts with label புதுக்கவிதைகள். Show all posts
Showing posts with label புதுக்கவிதைகள். Show all posts
9/14/2021
5/06/2017
காத்திருந்த கனவுகள்!
தேவதை என் விழிதன்னில் பட்டாயடா
இன்பம் தந்தாயடா!
என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே!
எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே!
இன்பம் தந்தாயடா!
என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே!
எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே!
காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய்
கருவிழியுள் வாழுகின்ற ஒளியானாய்!
தேடலில் இவள் வாழ்வு கழியுதே!
தேவகானம் ஒன்று மட்டும் தொடருதே!
கருவிழியுள் வாழுகின்ற ஒளியானாய்!
தேடலில் இவள் வாழ்வு கழியுதே!
தேவகானம் ஒன்று மட்டும் தொடருதே!
நான் தேடும் சொர்க்கம் நீயடா!
நாணத்தை விட்டுவந்தேன் பாரடா!
குழலோசை காதில் கேட்காதோ!
குயிலென்றன் ஆசையைத் தீர்க்காதோ!
நாணத்தை விட்டுவந்தேன் பாரடா!
குழலோசை காதில் கேட்காதோ!
குயிலென்றன் ஆசையைத் தீர்க்காதோ!
உன்னைக் கண்ட நாள்முதலாய்த் தூக்கம் போனதே
இவள் நெஞ்சில் ஏக்கம் வாழுதே!
காதலுக்குப் பச்சைக்கொடி காட்டாயோ!
கன்னி மன வீணையதை மீட்டாயோ!
இவள் நெஞ்சில் ஏக்கம் வாழுதே!
காதலுக்குப் பச்சைக்கொடி காட்டாயோ!
கன்னி மன வீணையதை மீட்டாயோ!
காத்திருந்த என் கனவைப் பாரடா
பதில் ஒன்று கூறடா!
பூபாளம் இசைக்கின்ற நேரம்
இவள் நெஞ்சில் ஏனிந்தப் பாரம்!
பதில் ஒன்று கூறடா!
பூபாளம் இசைக்கின்ற நேரம்
இவள் நெஞ்சில் ஏனிந்தப் பாரம்!
நிலா முறத்திற்கு மிக்க நன்றி!
4/27/2017
சிற்பங்கள் கண் திறந்தால்!
சிற்பங்கள் கண் திறந்தால்!
------------------------------------------------------------------------------
சிற்பங்கள் கண் திறந்தால் வாழ்த்துச் சொல்லும்!
சிங்காரத் தமிழின்மேல் காதல் கொள்ளும்!
அற்பமாயை உலகினிலே யாவும்பொய்யே!
அருந்தமிழ் தந்தசுகம் ஒன்றே மெய்யாம்!
மண்தோன்றி கல்தோன்றும் முன்னாலே தோன்றினாள்!
மாமனத்துள் ஆணிவேராய் ஊன்றினாள்!
கண்டுக்கொள் கடலுக்குள் சாட்சிகள் தூங்குதே!
காணத்தான் மனமிங்கே எந்நாளும் ஏங்குதே!
முத்தமிழாள் முத்தமிட்டால் உயிர் சிலிர்க்கும்!
மூவுலகும் மனத்திரையில் கை குலுக்கும்!
சித்தமெல்லாம் சங்கீதக்காற்று வீசும்!
சிதம்பரத்தில் தெய்வத்திற்கும் பாதம் கூசும்!
இத்தரையில் எழுச்சிமிகு பரதக்கலையை
எம்இறைவன் இறைவியவள் ஆடக்கண்டால்
கொத்துக் கொத்தாய் மலர்வனங்கள் பூத்துக் குலுங்கும்!
கொடும் கோடையிலும் குளிர்காற்று கொஞ்சி மகிழும்!
செத்தாலும் என் சாம்பல் மணக்கும் தமிழாய்
செந்தூர நதியலையில் சேரத்துடிக்கும்!
வெத்துக்கள் என்னுயிரைப் பழித்தால் வெடிக்கும்
வெம்சின எரிமலைகள் அவர்கள்தம் கதையை முடிக்கும்!
4/22/2017
கற்பனைக் கோட்டை!
எண்ணற்ற கோட்டை கட்டி
என்ன பயன் கண்டோம் இங்கே!
கண்ணிறைந்த இயற்கை ஒன்றே
காவலரணாகும் எங்கும்!
மண்மீது உயிர்கள் வாழ
மறுபிறவி தானும் காண
பூமி நலம் காக்க வேண்டும்!
சாமி என நோக்க வேண்டும்!
தண்ணீரும் காற்றும் இன்றி
தரை வாழுமா!
தனவான்கள் எண்ணம் போலே
எம் இனம் வாழுமா!
உயிருக்கு உறங்க ஓர் இடம் வேண்டும்
உயிரான மண்ணுமதைத் தாங்க வேண்டும்!
கருவறை தன்னில் இங்கே
கல்லொன்றைச் சுமந்ததாரு!
கருவறை போல நீயும்
தாய் மண்ணை எண்ணிப் பாரு!
கடற்கரை மண்ணை அள்ளிக்
கோட் டை கட்டலாம்
கடலன்னை பொங்கி எழுந்தால்
எங்கே ஓடலாம்!
கோட்டைக்குள் அடங்காது இந்த உலகம்
கோமாளித் தனமான எங்கள் சொந்த உலகம்!
ஆடம்பரமாய் இருக்க இது போதும்
அட ஆயுளைத்தான் கூட்டாது ஒரு போதும்!
இயற்கையை மிஞ்சுமா இந்த அழகு!
ஈரலிப்பா நீயிருக்க வந்து பழகு!
மூலிகைக் காற்றைத்தான்
உயிர் மூச்சு விரும்பும்!
முத்தமிழை முத்தமிடும் பேச்சு விரும்பும்!
காத்தாடி தந்த காற்று
காலடியைத் தொட்டு நிற்கும்
ஆத்தாடி வாடைக் காற்று
அக்கம் பக்கம் எல்லாம் சுற்றும்!
சுற்றுகின்ற காற்றுக்குச்
சூனியத்தை வைக்காதே!
கோட் டையிலே இருந்து கொண்டே
மனக் கோட்டைகளைக் கட்டாதே!
---------------(எண்ணற்ற கோட்டை கட்டி )
11/10/2014
சாவு மலியும் தேசத்தில் இருந்து ஓர் அழுகுரல் ! கேட்கிறதா ?
உயிரைக் கொல்லும் நோய் பெருகி
உணர்வைத் தின்னப் பார்க்குதடா!
துயிலும் இல்லம் பலரையும் இங்கே
துரத்திப் பிடித்து மடக்குதடா !
வழமை நிலைமை மாறும் போதும்
வாழ்வில் அச்சம் மூளுதடா!
களவும் பொய்யும் சுயநலத்தால்
கட கட கடவென வளருதடா !
மலையைப் போல சுமை தாங்கி
மனதும் மரத்துப் போனதடா!
அலையும் புத்தி ஞாபகத்தை
அறவே இழந்து வாடுதடா!
இயற்கை அளித்த கொடையெங்கே!
இதயம் கேள்வி கேட்குதடா !
திரும்பிப் பார்த்தால் எம் வாழ்க்கை
திருட்டுப் போனது புரியுதடா!
பயிலும் கல்வி அறிவெல்லாம்
பகட்டாய் எண்ணத் தோன்றுதடா !
கணக்கில் புலியாய் இருந்தமனம் இன்று
கணணியை நம்பி வாழுதடா !
செயற்கை செய்த சாதனை எதுவோ அதைத்தான்
செத்தவர் பட்டியல் காட்டுதடா !
இயற்கையைப் பேணும் நல்லெண்ணம் இனி
இருந்தால் மட்டுமே உலகம் உய்யுமடா !
இயற்கை என்பது இறைவன் கொடுத்த
வரம் !
செயற்கை என்பது மனிதன் தேடிக் கொண்ட
சாபம்!
வரமா சாபமா வாழ்விற்குகந்தது ?...
சிந்திப்போம் !
10/27/2014
தமிழின்றி வாழ்வேது !
கன்னித் தமிழமுதை நான் மறந்தால்
என்னில் தரித்திடுமோ உயிர்?...வன்னி
மண்ணின் மணம் குன்றா மலரிவளை
எண்ணில் அடக்குக உகந்து !
பொன்னை பொருளை வேண்டேனே
பசி என்னைத் தேடி வருகையிலும் !
அன்னை மொழியே எனதுயிராம் !அது தழைக்க
நன்மை செய்வேன் நாளும் !
பசி என்னைத் தேடி வருகையிலும் !
அன்னை மொழியே எனதுயிராம் !அது தழைக்க
நன்மை செய்வேன் நாளும் !
கரகம் ஆடி வந்தாலும் என்தமிழ்
விரகம் கொண்டு வீழாது!தரகர்
தம்மைத் தாம் அறிவீர் !துயரைச்
செம்மைப் படுத்துக துணிந்து !
அம்மை அவளே அருந்தமிழ் வளர்த்தாள் !
எம்மைப் புவிமேல் புகழேந்த !செம்மை யாவும்
தழைத்தோங்கும்! சீர்கொடுக்கும்!அதுவே
தழைத்தோங்கும்! சீர்கொடுக்கும்!அதுவே
காவும் மனத்தின் துணிவு !
தும்பைப் பூப்போல் மனத்தழகை எவரும்
அம்பை விட்டுக் கொய்யாதீர் !
வம்பை அதுவே தான் வளர்க்கும்
இனி என்றும் மதுவே தோற்க மணந்து !
வம்பை அதுவே தான் வளர்க்கும்
இனி என்றும் மதுவே தோற்க மணந்து !
சொல்லில் பொருளில் நயம் தேற எந்நாளும்
அல்லிப் பூவே வந்தருள்வாய் !
கல்லில் முள்ளில் தவழ்கின்றோம் !கயல் விழியே !
இனியும் அள்ளிக் கொடுப்பாய் அறிவு !
கல்லில் முள்ளில் தவழ்கின்றோம் !கயல் விழியே !
இனியும் அள்ளிக் கொடுப்பாய் அறிவு !
10/14/2014
இதையும் கொஞ்சம் சிந்திப்போமா !
ஊரோடு உற்ற பகையால் ஊனுடலை வதைத்தால்
வேரோடு கெட்டொழியும் வாழ்வு !சேரும்
வேதனையை விட்டகன்று வாழும் வழியைப் பார்த்தாலே
சாதனைகள் தொடரும் சாவிலும் !
கண்கொத்திப் பாம்பாகக் காத்திருந்து பகை முடிக்கும்
துர் புத்தி உய்யவிடாது வாழ்நாள் முழுதும் !
எண்ணத்தைச் சரி செய்து ஏற்றமுற நினைப்பவர்களே
வண்ணம் குன்றாது வாழ்வர் வாழ்வினிக்க !
முறையற்ற வாழ்வை முழுமனதோடு வாழ்ந்து முடித்தவர்
கறையை அகற்றுவது கடினம் எக் காலத்திலும் !
குறை செராத வண்ணம் குணத்தைக் காத்தவரே
இறையாகக் கணிக்கப் படுவர் இறந்த பின்னும் !
குற்றமற்ற நெஞ்சங்களைக் கொன்று குவிக்கும் மனத்தவரைச்
சுற்றம் என்றும் ஏற்காது !ஏற்ற பொழுதிலும்
ஊற்றெடுக்கும் உணர்வுகளால் உட் பகைதான் வளரும்
மாற்றமில்லை இதனில் மறந்தும் !
தோற்றத்துக்கு நல்லவராய்த் தோன்றி மறையும் வாழ்வைவிட
மாற்றத்தை ஏற்று மனிதராய் வாழ்வதே வாழ்வாகும் !
ஏற்றத் தாழ்வு எவர் உள்ளத்தில் உதித்தாலும் அவை
சீற்றத்தைத் தந்து சீரளிக்குமே அல்லால் வாழ்வளிக்காது !
(படம் கூகுளில் இருந்து பெறப்பட்டது !நன்றி !)
10/11/2014
அன்பினால் தழைத் தோங்குக இன்பம் !
கண்ணே மணியே கற்கண்டே -என்றன்
கவிதை இனிக்க வந்தவளே
உண்ணேன் உறங்கேன் நீயின்றி
உணரும் காலைப் பொழுதின்றி !
பெண்ணே அழகில் ஓவியமே!
பொறுமை அணிந்த காவியமே!
மண்ணே போற்றும் மரகதமே!
மலரே எழிலே வாராயோ !
கொஞ்சும் சலங்கை ஒலியாலே
கோதை உன்றன் நினைவாலே
விஞ்சும் கவிதை வடிப்பேனே
விரலால் தாகம் முடிப்பேனே
பஞ்சும் நெருப்பும் போலிங்கே
பற்றிக் கொள்ள வாராயோ !
தஞ்சம் உன்றன் நெஞ்சமென
தரையில் வந்த வெண்ணிலவே !
கண்ணா ! காதல் மணிவண்ணா!
கலக்கம் ஏனோ இந்நாளில்?
எண்ணா திருக்க வருவேனே
என்றும் இன்பம் தருவேனே
விண்ணும் மண்ணும் வியந்திடவே
விழியில் ஒளியாய் நிற்பவனே
கண்ணும் கருத்தும் நீயல்லவோ
கவலை மறப்பாய் இக்கணமே !
தோகை மயிலுன் ஆட்டத்தைத்
தொடர்ந்தும் பார்க்க வருவேனே !
சோகம் தீர்த்து அந்நாளில் உனைச்
சொக்க வைப்பேன் என் கண்ணா
பாகப் பிரிவினை எமக்குள்ளா?
பயத்தைப் போக்கு துயர் நீங்க
காகம் வந்து சேதி சொல்லும்
காதல் தேவதை வரும் முன்பே !
அன்னத்துக்கும் புறாவுக்கும் மட்டுமா தூது
சொல்லத் தெரியும் !காக்கைகளாலும்
முடியும் :))
உண்ணும் போதும் சரி ஓர் உயிர் பிரிந்த போதும் சரி காகங்களின் ஒற்றுமையை விஞ்சும் சக்தி உலகில் எந்த சீவ ராசிகளுக்கும் கிடையாது என்பது தான் நான் அறிந்த உண்மை ! அது சரி எதுக்கு இப்போது அம்பாளடியாள் காகத்தைத் தலை மேல் தூக்கி வைத்து ஆடுகின்றார்கள் ? இன்னுமா புரியவில்லை!:) காகம் ஒற்றுமையின் சின்னமாகும் ! இன்று சனீஸ்வர விரதத்தின் இறுதி நாள் சனீஸ்வரனின் வாகனமான காக்கைக்கு உணவு அளித்து மகிழ்வதன் மூலம் சாப விமோற்சனம் அடையலாம் என்கிறது சகுன சாஸ்திரங்கள் அதற்காக இன்று மட்டும் அல்ல என்றுமே முடிந்தால் (காகங்களுக்கு மட்டும் அல்ல ஏனைய சீவ ராசிகளுக்கும் )உணவு அளியுங்கள்.அன்பினால் ஒற்றுமை தழைக்கும் ஒற்றுமை தழைத்தால் உலகமே இன்பமயமாகும் !
அன்பு உறவுகள் அனைவருக்கும் சனீஸ்வர பகவானின் நல்லாசியினால் இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பொங்கிட இனிய நல் வாழ்த்துக்கள் !
9/17/2014
எதைத் தேடி என்ன கண்டோம் !
பாழாய்ப் போன கனவுகள் வந்து
பாடாய் படுத்தும் அந்நாளில்
தேளாய் கொட்டும் நினைவுகள் தவிர்ப்பீர் !
தென்னாடுடைய சிவனை நினைந்து !
உண்ணும் போதும் உறங்கும் போதும்
உணர்வுகள் சிறந்தே விளங்கட்டும்!
மண்ணும் மதிக்க வாழ்வோர் தமக்கு
மனதினில் சங்கடம் மறையட்டும் !
எண்ணம் இனிதாய் இருக்கும் போதும்
எதையோ எண்ணி வருந்தாதே !
கண்ணை ஈர்க்கும் மாயையை என்றும்
கடவுள் போலக் கருதாதே !
விண்ணும் மயங்க மண்ணும் மயங்க
வித்தைகள் யாவரும் கற்றிடலாம்
உன்னுள் இருக்கும் உணர்வை வதைத்து
உயரப் பறக்க நினைக்காதே !
பொன்னைப் போல பொருளைப் போல
பொருந்திய மேனியைக் காத்திடுவீர் !
எண்ணம் சிறந்து விளங்கிட நாளும்
இனியன பேசி மகிழ்ந்திடுவீர் !
வாழும் போது வாழா மனிதன்
வாழ்வில் கண்ட பயன் யாது!
ஊழும் துரத்த உணர்வுகள் துரத்த
ஓடும் காலம் திரும்பாது !
மாழும் வரைக்கும் மாடாய் உழைத்து
மண்ணில் சரிய நினைக்காதே !
சூழும் இன்பச் சுடரைத் தவிர்த்து
சுமைகள் சுமந்து செல்லாதே !
வேகும் கட்டை !வெந்த பின்னால்
விரும்பும் வாழ்வு கிட்டாது !
சோகம் தவிர்த்து வாழும் வரைக்கும்
சொந்தம் எதுவும் நிலைக்காது !
காலம் வெல்லும் வெல்லும் என்றே
கண்ணை மூடித் திரியாமல்
வாழும் போதே வாழ்வை ரசித்து
வாழக் கற்றுக் கொள்வோமே !
9/12/2014
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !!...
அன்பைப் பொழிவோம் எந்நாளும்
அதுவே வாழ்வின் பயனாகும் !
இன்பம் துன்பம் எல்லாமும்
இறைவன் விட்ட வழியாகும் !
அன்னல் காந்தி மகானைப்போல்
அகிலம் போற்ற வாழ்ந்திடுவோம்!
இன்னல் வந்த போதினிலும்
இயல்பாய் என்றும் இருந்திடுவோம் !
தன்னைத் தந்து உழைப்பவரின்
தன்மானத்தை மதித்திடுவோம்!
எண்ணக் கருத்தை எவர் சொல்லினும்
ஏற்றுக்கொண்டு சரி செய்வோம் !
பஞ்சம் வந்த போதினிலும்
பகிர்ந்து உண்ணப் பழகிடுவோம்!
தஞ்சம் என்று வருவோர்க்கெல்லாம்
தளராதிங்கே உதவிடுவோம் !
வள்ளல் குணத்தை வளர்த்திடுவோம்
வாழ்வில் இன்பம் கண்டிடுவோம்!
தெள்ளத் தெளிவாய் பொருள் விளங்கத்
திறமை கொண்டு வாதிடுவோம் !
உள்ளம் மகிழ்வாய் இருந்திடவே
உழைப்பை நாளும் நம்பிடுவோம்!
அள்ள அள்ளக் குறையாத
அறிவை என்றும் வளர்த்திடுவோம் !
தானம் தர்மம் செய்திடுவோம்!
தரத்தை நாளும் உயத்திடுவோம்
கானம் இசைத்து மகிழ்ந்திடுவோம்!
கனவில் கூட அமைதி கொள்வோம் !
9/07/2014
எதைக் கற்றுக் கொண்டாய் இயற்கையையும் மிஞ்சுவதற்கு !
கற்றுக் கொடுத்த பாடமெல்லாம்
கனவில் நினைவில் நிக்குதடா!
அற்றுப் போன நீதிக்கே
அகிலம் தவியாய்த் தவிக்குதடா!
உற்றுப் பார்த்தால் உள்ளுக்குள்
உணர்வே மெல்லச் சாகுதடா!
பற்றுப் பாசம் எல்லாமும்
பகட்டு வேஷம் தானோடா!
அண்ணன் தம்பி உறவுக்கும்
அர்த்தம் உண்டோ இந்நாளில்?
எண்ணும் போதே வலிக்குதடா
எங்கள் இதயம் துடிக்குதடா!
மண்ணும் பெருமை குன்றிடவே
மனிதம் மறந்து வாழ்கின்றீர்!
விண்ணும் வியக்க உயர்ந்தவரே
விடிவை இங்கும் தடுக்கின்றீர்!
அள்ளிக் குண்டை விதைக்கின்றீர்!
அன்னை மடியைச் சிதைக்கின்றீர்!
பள்ளிப் பாடம் இதுவோடா?
பலதும் கற்ற மானிடனே!
முள்ளில் விழுந்த சேலையைப்போல்
முடிவும் விதியின் கைகளில்தான்!
துள்ளிக் குதித்தும் பயனுண்டோ
துயரம் மிகுந்த வாழ்வினிலே!
எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டீர்!
எங்கும் அமைதியைச் சீண்டி விட்டீர்!
சண்டை இட்டே சாவதற்காய்
சரித்திரம் மேலும் படைக்கின்றீர்!
புல்லும் இங்கே முளையாது
புழுக்களும் இங்கே வாழாது!
தொல்லை மிகுமே வாழ்நாளில்
துளையுண்ட பூமியின் சாபமிதே!
8/29/2014
கவிதைப் போட்டி -2014 (அம்பாளடியாளின் கவிதைகள் )
( பட இணைப்பு -1)
திருடா திருடா
தேன் சுரக்கும் பார்வை என்றன் பார்வையோ!
தீந்தமிழில் நீ வடிக்கும் கோர்வையோ?
வான் பரப்பில் வந்து போகும் தென்றலே
வர்ண ஜாலம் காட்டு என்றன் முன்றலில்
மான் விழியின் ஒளிநுதல் நீயல்லவா?
மறைந் திருந்து பார்பதிலே வல்லவா !
நான் விரும்பும் ஓவியமே என் மன்னவா இங்கு
நோன்பிருந்து பார்த்த கதை சொல்லவா ?
பால் மணக்கும் பாவை இவள் முகத்திலே
பார்த்ததெல்லாம் நிறைந்திருக்கும் உன் அகத்திலே
கால் முளைத்து கை முளைத்து கற்பனை
கனவு காண வைத்ததுவா என் அப்பனை?
வேல் முருகன் மால் மருகன் நீயடா! உனக்கு
வள்ளி என்றும் வாழ் நாளில் நான்தானடா!
தோல் சிவக்கும் முன்னாடி வந்திங்கே உன்றன்
தோல்வி தனை ஒப்புக்கொள்ளத் தென்பெங்கே?
திண்ணையிலே காத்திருக்கும் எழில் ஓவியமே! எனைத்
தெம்மாங்குப் பாட வைக்கும் காவியமே !
வெண்ணையினைத் தான் திருடிச் செல்ல வந்தேன் உன்றன்
விழியொளியில் அகப்பட்டேன் திருடன் ஆனேன்!
கண்ணெதிரே காண்பதெல்லாம் கனவா! நினைவா !நீ
கண்டாங்கிச் சேலை கட்டிய மலரா! நிலவா!
பெண்ணழகை பேரழகை என்ன சொல்வேன்! -இன்னும்
பெருமைகொள்ள வைக்குதடி என்றன் உயிரே !
தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர் ரூபன் மற்றும் யாழ்ப்பாவாணன் ஐயா இணைத்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி -2014க்குரிய கவிதை இதோ ...
திருடா திருடா
தேன் சுரக்கும் பார்வை என்றன் பார்வையோ!
தீந்தமிழில் நீ வடிக்கும் கோர்வையோ?
வான் பரப்பில் வந்து போகும் தென்றலே
வர்ண ஜாலம் காட்டு என்றன் முன்றலில்
மான் விழியின் ஒளிநுதல் நீயல்லவா?
மறைந் திருந்து பார்பதிலே வல்லவா !
நான் விரும்பும் ஓவியமே என் மன்னவா இங்கு
நோன்பிருந்து பார்த்த கதை சொல்லவா ?
பால் மணக்கும் பாவை இவள் முகத்திலே
பார்த்ததெல்லாம் நிறைந்திருக்கும் உன் அகத்திலே
கால் முளைத்து கை முளைத்து கற்பனை
கனவு காண வைத்ததுவா என் அப்பனை?
வேல் முருகன் மால் மருகன் நீயடா! உனக்கு
வள்ளி என்றும் வாழ் நாளில் நான்தானடா!
தோல் சிவக்கும் முன்னாடி வந்திங்கே உன்றன்
தோல்வி தனை ஒப்புக்கொள்ளத் தென்பெங்கே?
திண்ணையிலே காத்திருக்கும் எழில் ஓவியமே! எனைத்
தெம்மாங்குப் பாட வைக்கும் காவியமே !
வெண்ணையினைத் தான் திருடிச் செல்ல வந்தேன் உன்றன்
விழியொளியில் அகப்பட்டேன் திருடன் ஆனேன்!
கண்ணெதிரே காண்பதெல்லாம் கனவா! நினைவா !நீ
கண்டாங்கிச் சேலை கட்டிய மலரா! நிலவா!
பெண்ணழகை பேரழகை என்ன சொல்வேன்! -இன்னும்
பெருமைகொள்ள வைக்குதடி என்றன் உயிரே !
இப் போட்டியை நிகழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கும் இப் போட்டியில் பங்கு பெறும் அனைத்து சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் !
வாழ்க தமிழ் !வளர்க நின் பணி !
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html
8/23/2014
பேராசை துறத்தலே மிக நன்று !
நல்ல நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும்!
நாள் முழுதும் இன்பமாக வாழ வேண்டும்!
அல்லல்களைப் போக்கும் சக்தி எம்மிடத்திலே
அடங்கி ஒடுங்கிக் கிடப்பதையே உணர வேண்டும்!
வில்லங்கத்தை எவருமிங்கே விலக்க வேண்டும்
வீதியிலே இறங்கும் போதும் அமைதி வேண்டும்!
மெல்ல மெல்லத்தான் வாழ்வில் உயர வேண்டும்!
மேதினியில் புகழ் நிலைக்க உழைக்க வேண்டும்!
பொய்யாலே கோட்டை கட்டியவர் வாழ்ந்ததுமில்லை!
போதுமென்ற மனம் படைத்தவர் தாழ்ந்ததுமில்லை !
மெய்யாலே மேன்மை குன்றிப் போனதுமில்லை!
மிருதுவான நற்குண மிருந்தால் தொல்லையுமில்லை !
கொய்யாதே பிறர் வாழ்வு கூந்தலுமில்லை!
கோவத்தால் ஆனதிங்கே ஒன்றுமேயில்லை !
தொய்யாத பண்புள்ளவர் தோத்ததுமில்லை!
தோல்வி என்ற வாசகத்தைப் பார்த்ததுமில்லை !
எண்ணாதே எவருமிங்கே சளைத்தவரில்லை!
இறுமாப்பு உடையவர்கள் பிழைத்ததுமில்லை !
மண்ணாசை பெண்ணாசை தந்த பெரும் தொல்லை
மானத்தை எந்நாளும் விட்டு வைத்ததேயில்லை !
7/29/2014
தாய் மண்ணை முத்தமிட வேண்டும்
மலர்கள் மலரும் எம்நாடே!
பெண்ணின் பெருமை புகழையுமே
போற்றிப் பாடும் எம்நாடே!
விண்ணில் இருந்து தேவருமே
வாழ்த்தி வணங்கும் எம்நாடே
கண்ணின் மணியே கற்கண்டே-உன்னைக்
காணத் தவிக்குது மனம் இன்றே!
உறவுகள் கூடி மகிழ்ந்திடவும்
உன்னத வாழ்வு வாழ்ந்திடவும்
திறவுகோல் ஒன்று கிட்டாதோ!
தென்றலைத் தாங்கும் எம்நாடே !
பிறமொழி பேசும் அயல்நாட்டில்
பெருமைகள் குன்றிட வாழ்கின்றோம்
திறமைகள் இருந்தும் பாரம்மா
திவ்விய ஒளியே கேளம்மா!
நிலைமைகள் இங்கு வேறாகும்-இதனால்
நித்தமும் துன்பங்கள் ஆறாகும்!
தலைமுறை காத்திட வழியின்றித்
தவிப்பவர் உள்ளமும் நீறாகும்!
அலைகடல் அலையே தான் வாழ்க்கை
ஆசைகள் எமக்கே மாறாகும்
கலைநயம் மிக்க எம்நாடே இங்கு
காண்பவை யாவும் சேறாகும் !!
பனைமரக் காடும் தென்னைகளும்
பாசமாய் வளர்ந்த பிள்ளைகளும்
நினைவினில் வந்து வாட்டுதடி
நெஞ்சுரம் கொண்ட எம்நாடே
வினைகளை அறுத்து எறியாயோ!
வேங்கைகள் எம்மின் அடையாளம்!
மனைகளில் இன்பம் பொங்கிடவே
மாபெரும் மகத்துவம் நிறைநாடே !
6/25/2014
சுவாசிக்கும் நேரத்திலும் இதைத் தான் மனம் யாசிக்கிறது
காத்திருப்பின் அவசியங்கள்
கலைந்து போனது!
கால தேவன் கைகளிலே மனம்
உறைந்து போனது!
நேற்றுவரை உன் நினைப்பு
நெஞ்சில் இருந்தது!
இன்று முதல் என் நினைப்பும்
மறந்து போனது!
ஊற்றெடுத்த ஞானமிதால்
உயிர் பிழைத்தது!
உண்மை எது பொய் எதுவென
உணர்ந்து கொண்டது!
வாட்டும் துயர்
வழி தவறி எங்கோ போனது!
வந்த சொந்தம் பொய் அதனால்
வருத்தம் தணிந்தது!
கவிதை ஒன்றே
காதலுக்குப் பொருத்தம் என்றது!
கண்ணீர் சிந்தும் நிலை மறந்து
கனவு பெருத்தது!
நிலவு கூட எனக்கு இதனால்
சொந்தமானது!
நித்தம் மகிழ்வு வந்து வந்து
சித்தம் குளிர்ந்தது!
கவலை ஏது! கண்ணீர் ஏது!
கவிதை இருக்க
காலம் போகும் போகும்
இன்ப ஜாலம் துரத்த!.
6/13/2014
பாவச் செயலை இளைத்தவர் தமக்கொரு பரிசும் இது தானே
சத்தியத்தைப் புறக்கணிக்கும் மானிட வாழ்வு
சாக்கடையில் தான் மிதக்கும் மூடரே கேளீர்!
வித்தைகளை யாம் படித்து வெற்றி கொள்ளலாம்
வென்ற வெற்றி தோல்விதனைத் தழுவிச் செல்லலாம் !
மட்டமான நினைப்புளால் மரணம் கிட்டலாம்!
மாறு வேடம் போட்ட உண்மை மனத்தைக் கொல்லலாம்!
திட்டமிடும் சதிச் செயலால் சக்தி இழக்கலாம் உயர்
தீமைகளே வாழ்நாளை அலங்கரிக்கலாம்!
உத்தமரை வதைத்தவர்க்கு வாழ்வு சிறக்குமா!
ஒரு பொழுது எனினும் இங்கே அமைதி நிலைக்குமா!
கொத்த வரும் பாம்பிற்கும் தீங்கு நினையாதார்
கொள்கைகளை உடைத்தெறிந்த சாபம் பொறுக்குமோ!
பத்துமாதம் சுமந்து அன்னை பெத்தெடுக்கிறாள்
பகலிரவாய்க் காத்தும் எம்மை வளர்த்து விடுகிறாள்
எத்தனையோ கனவு சுமந்து ஏங்கித் தவிக்கிறாள்
எதிரிகளின் கண் படாமல் மறைத்தும் வைக்கிறாள்
பெத்தவளின் மனம் துடிக்கக் காவு கொள்வீரோ!
போதையினால் அறிவிழந்த மூடர் தாம் இங்கே
வெற்றியென நினைத்ததெல்லாம் வெற்றியுமல்ல
வேண்டி நிற்கும் ஆசைகளும் அழியுமே மெல்ல!
இன்றுணர மறுக்க வைக்கும் இளமையும் சாகும்!
அன்று துயர் கொன்று தமை ஆட்டியும் படைக்கும்!
என்றொருவர் அழிவை எண்ணிக் குழி பறித்தீரோ
அன்று முதல் காத்திருப்பீர் அக் குழி வரவேற்கும்!
6/11/2014
செல்வம் இருக்கும் இடத்தில் சிறந்த பண்பும் வேண்டும்
நீர்க்குமிழி போல மனம் உடைந்து போகுதே!
நெஞ்சுரத்தை இழந்து தினம் தஞ்சம் கோருதே!
போர்க்கொடியை உயர்த்துவதால் வந்த தொல்லையே
பொறுமை என்ற வாசகத்தை எவரும் அறியவில்லையே !
மனம் முழுக்க வக்கிரத்தைப் புதைத்து வைத்தாரே!
மாறு வேடம் போட்டு நாளும் சேட்டை செய்தாரே!
குணம் அறிந்தும் ஒதுங்கிடத்தான் வழியுமில்லையே!
கொள்கையிலும் இழிவான கொள்கையுடையோரே!
ஏழை என்று இளக்காரம் கொள்ளவும் வேண்டாம்!
எளியோரைப் பழி வாங்கித் திரியவும் வேண்டாம்!
நாளை இந்த உலகினிலே எதுவும் நடக்கலாம்
நலிந்தோரின் வாழ்வு சிறக்கப் புதையல் கிடைக்கலாம்!
அற்பருக்கு வந்த வாழ்வு அகத்தைக் கிழிக்கலாம்!
அடுத்தவரின் சாபம் வந்து முகத்தை மறைக்கலாம்!
சொற்ப காலம் வாழும் வாழ்வில் சொந்தம் எதுவடா
சோதனையும் வேதனையும் கொடுக்கும் மானிடா!
நட்பு ஒன்றே உலகினிலே உயர்ந்த செல்வமாம் அதை
நாடி நின்றோர் கோடி நன்மை பெற்று வாழ்கவே!
உட்புறத்தைத் தூய்மையாக்கி உலகம் உய்யவே
உண்மை பேசி நன்மை யாவும் பெற்று வாழ்கவே!
(படம் :கூகிளில் பெற்றுக்கொண்டது .நன்றி !)
6/01/2014
ஆணவம் மிகுதலும் அழிவுக்கோர் அடையாளம் தான்
முட்டி மோதி அலை கிழித்து
மூர்க்கமாய்ப் பறக்கும் பறவை எமை
எட்டிப் பிடித்து வெற்றி கொள்ளவே
ஏங்கித் தவிப்பீரோ குள்ள நரிகளே !!
நரிகளின் வேஷம் நிலைக்காது
நாளும் நினைப்பது நடக்காது இவை
புரியும் காலம் வரும் போது
பூப்போல் எம் மனமும் இருக்காது !
அழிவைத் தேடி அநீதியை மூட்டு
ஆணவத் தேரினை எந்நாளுமே ஒட்டு
ஒழியும் காலம் வரும் போது
உணரத் துடிப்பீர் மூடர்களே !
ஏழைக் குடிசையை எரிப்பவர் தமக்கு
என்றோ ஒரு நாள் அழிவு பிறக்கும்
நாளை என்பதே நிட்சயமற்ற
நரகலோக வாழ்வுதனிலே
உண்மை பேசி உயர்வு பெற்றவர்
உலகம் போற்ற வாழ்ந்திடுவர்
வெண்மையான மனத்தை வதைத்தவர்
விரயமாகி போய் விடுவர்!!
நல்லோர் விடும் சாபம் ஒன்றையே
எந்நாளும் வாங்கும் அரக்கர்களே
பொல்லா வினையால் புழுவாய்த் துடிப்பீர்
பொறுமை இழந்து ஆடாதீர்!
மூர்க்கமாய்ப் பறக்கும் பறவை எமை
எட்டிப் பிடித்து வெற்றி கொள்ளவே
ஏங்கித் தவிப்பீரோ குள்ள நரிகளே !!
நரிகளின் வேஷம் நிலைக்காது
நாளும் நினைப்பது நடக்காது இவை
புரியும் காலம் வரும் போது
பூப்போல் எம் மனமும் இருக்காது !
அழிவைத் தேடி அநீதியை மூட்டு
ஆணவத் தேரினை எந்நாளுமே ஒட்டு
ஒழியும் காலம் வரும் போது
உணரத் துடிப்பீர் மூடர்களே !
ஏழைக் குடிசையை எரிப்பவர் தமக்கு
என்றோ ஒரு நாள் அழிவு பிறக்கும்
நாளை என்பதே நிட்சயமற்ற
நரகலோக வாழ்வுதனிலே
உண்மை பேசி உயர்வு பெற்றவர்
உலகம் போற்ற வாழ்ந்திடுவர்
வெண்மையான மனத்தை வதைத்தவர்
விரயமாகி போய் விடுவர்!!
நல்லோர் விடும் சாபம் ஒன்றையே
எந்நாளும் வாங்கும் அரக்கர்களே
பொல்லா வினையால் புழுவாய்த் துடிப்பீர்
பொறுமை இழந்து ஆடாதீர்!
5/07/2014
காலம் வரும் வரும் போது பகையை வெல்வோம்
அன்பு செய்ய வந்தவளே! எம்மை
ஆதரித்து நின்றவளே!
உயர் பண்பதனால் உருவானவளே!
உத்தமியே! கொஞ்சம் நில்லு!
புறமுதுகு காட்டாமல்
புலியையும்தான் விரட்டியவள்
நடுநிசியில் பெருநெருப்பாய்
நகர்ந்து நீயும் எங்கே வந்தாய்!
கொடியவரை அழித்திடவோ
கோ மகளே புறப்பட்டாய்!
நெடிய துயர் நெஞ்சை வாட்ட
நீ போகும் பாதை எதுவோ!
விடியும் வரைக் காத்திருந்து
விம்மி விம்மி அளவும் மாட்டாய்!
படை நடுங்கும் உனைத்தான் கண்டு
பாசம்மிகு தமிழ்த் தாயே நில்லு!
ஒத்தையிலே போர் முனைக்கு நீ
ஓடோடிச் செல்கையிலே
சித்தமெல்லாம் கலங்குதடி
சினம் தணிந்து வா தாயே!
ஊளையிடும் நரிகளுக்கு
உன்னால்தான் முடிவு பிறக்கும்!
கோழையல்ல தமிழினத்தின்
கொள்கை நிலைத்திடும் நீ வா தாயே!
வீர மறவரை ஈன்றெடுத்தவள்
வேதம் அனைத்தும் கற்றுக் கொடுத்தவள்
உயிரின் நாதமெனத் தமிழ்மொழியில் உதித்தவள்
உலகப் புகழின் உச்சமே! நீ வா தாயே!
4/11/2014
அன்னை பூமியே எம் ஆருயிரே
பட்டுப் போன மேனியும்
பழுதடைந்த கண்களும்
வட்டமிட்டு நெஞ்சுக்குள்
வலி உணர்த்திச் செல்லுதே!
கட்டித் தங்கம் உன் மடியில்
கவலை தீர நாம் உறங்கும்
எட்டிப் போன காலங்களை
எளிதில் மறக்க முடியாதே !
ஈழத் தாயே உனக்காக
ஈசன் திருவடி தொழுகின்றோம்!
பாழாய்ப் போன உனதழகைப்
பழுது பார்க்கச் சொல்கின்றோம்!
வீர மறவர் வாழ்வனைத்தும்
வீழ்ச்சி கண்டு போனாலும்
ஈரம் என்றும் காயாது எம்மை
ஈன்றெடுத்த தாய் நாடே!
கோரப் பல்லும் சடை முடியும்
கொல்லும் மாமிச வெறியர்களைக்
காலம் வெல்லும் வெல்லும் வரைக்
காத்திருப்போம் உனக்காக!
நீரும் நெருப்பும் சாட்சி சொல்ல
நீதி தேவதை அவளருளாலே
பாரம் குறையும் குறையும் அந்நாள்
பறந்து வருவோம் உன் மடி தேடி ...
ஏழைக் கவிஞரும் பாவலரும்
என் தாய் அழகைத் தான் ரசிப்பார்!
பாழும் மனத்தில் எந்நாளும்
பாசம் ஒன்றைத் தான் நினைப்பர்!
வாழ வைக்கும் காலம் வரும்
வாடி நிற்கும் என் தாயே!
ஆழப் பதிந்த உணர்வுகளால்
அழுத்திச் சொல்வோம் இதைத் தானே!
Subscribe to:
Posts (Atom)






.jpg)













+(1).png)


+(1).jpg)
