3/19/2011

தத்தித் தத்தி நடந்து வாறா

தத்தித் தத்தி நடந்து வாறா
எங்கள் தங்கப்  பாப்பா
அவ பத்து விரலையும் 
மூடிகொண்டே ஓடிப் பாப்பா.....

கலர் கலராய்ப் பொட்டுச் 
சட்டை போட்டால்  
 நல்லாய்ப் புதினம் பார்ப்பாள்
பட்டுப் பூச்சி போலவந்தும் 
தொட்டுப் பார்ப்பாள் .............

வட்ட நிலா போல வந்து
எட்டிப் பார்ப்பாள்- கட்டி 
நாங்கள் அணைப்பதர்க்குள் 
கலைந்து  செல்வாள் .......

கெட்டிக்காறக்  குட்டி இவள்
பாட்டும் பாடுவாள்-  தன்
பாட்டி சொன்ன கதைகளையும் 
வடிவாய்க் கேட்டுச் சொல்லுவாள்!.....   
   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

No comments:

Post a Comment

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........